search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாஞ்சிநாதன் குறித்து பிரதமர் மோடி புகழாரம்
    X

    வாஞ்சிநாதன் குறித்து பிரதமர் மோடி புகழாரம்

    • தமிழக மக்களிடம் பேசும் போதெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி சந்திப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    • கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மன் கி பாத் உரையில் பேசியதாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்று தருணத்தை காண போகிறோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

    சுதந்திர போராட்டத்தில் இந்திய ரெயில்வே பங்களிப்பை அறிய வேண்டும். சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரெயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது.

    தமிழக மக்களிடம் பேசும் போதெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி சந்திப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையத்திற்கு தமிழர் விடுதலை போராட்ட வீரர் வாஞ்சி நாதனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதே இடத்தில் தான் 25 வயது வாஞ்சி என்ற இளைஞன் ஆங்கிலேய கலெக்டரின் செயலுக்கு தண்டனை கொடுத்தான்.

    கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

    இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×