என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வக்கீல் கைது"
- இந்திய வம்சாவளியான அபிஜித் தாஸ் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்.
- கடந்த 2021-ம் ஆண்டு அபிஜித் தாஸ் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் அங்கு வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர் சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் இவர் தன்னிடம் வழக்கு தாக்கல் செய்ய வந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.40 கோடி) தனது வங்கி கணக்கு மாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து அபிஜித்தை போலீசார் கைது செய்தனர். பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கி உள்ளதால் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.2 கோடி அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரசார விதிகளை மீறுதல், தவறான அறிக்கை தாக்கல் செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களாக உடல் சோர்வு ஏற்பட்டதோடு குழந்தை இரவில் வலியால் துடித்துள்ளார்.
- பெற்றோர் விசாரித்தபோது மழலை மொழியில் தனக்கு நடந்தது குறித்து குழந்தை தெரிவித்துள்ளது.
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள இனுங்கூர் காஜா காலனி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பவுனு என்கின்ற பழனியப்பன் (வயது 55). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். சபல புத்தி கொண்ட இவர் சிறுமிகளிடம் எல்லை மீறுவதையும், அவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதியினர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காலையில் அவர்கள் வேலைக்கு சென்று விடுவார்கள். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்த சிறுமி அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்றுவிட்டு மதிய நேரத்தில் வீடு திரும்புவாள்.
அப்போது வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியிடம் பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பக்கத்து வீட்டில் வசிப்பவர், 50 வயதை தாண்டியவர் என்பதால் அக்கம் பக்கத்தினர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக உடல் சோர்வு ஏற்பட்டதோடு, இரவில் வலியால் துடித்துள்ளார். பெற்றோர் விசாரித்தபோது மழலை மொழியில் தனக்கு நடந்தது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் பழனியப்பனை கைது செய்தனர். பின்னர் குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் திருச்சி அருகே 10 வயது சிறுமிக்கும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஆராய்ச்சி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (39). இவர் முசிறியில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வேலைக்கு செல்லும் போது தொட்டியத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று சாப்படுவது, ஓய்வு எடுப்பதை நாகராஜ் வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டிலுள்ள 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை நாகராஜ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாமன் உறவு முறை கொண்ட அவரின் அத்துமீறலை தாங்கிக்கொள்ள முடியாத சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நாகராஜ் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சென்னை போர் நினைவு சின்னம் அருகே கோட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- மூன்று இடங்களில் பிரபாகரனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
சென்னை:
சென்னை போர் நினைவு சின்னம் அருகே கோட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரசன்ன வெங்கடேஷ் என்ற வக்கீல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்து போலீசார் ஆவணங்களை கேட்டனர். அப்போது அவர் தான் வக்கீல் என்று கூறி உள்ளார். இதன் பிறகும் ஆவணங்களை கேட்டதால் தகராறு ஏற்பட்டது. வக்கீல் என்று சொன்ன பிறகும் ஆவணங்களை கேட்கிறீர்களே என தகராறு செய்த பிரசன்ன வெங்கடேஷ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனை, தாக்கியுள்ளார்.
இதில் மூன்று இடங்களில் பிரபாகரனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல் பிரசன்ன வெங்கடேஷை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருத்தாசலத்தில் விபசார வழக்கில் வக்கீல் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடலுார்:
கடலுார் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஆலடிரோட்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து மேலும் விசாரித்த போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரு பெண்கள் மற்றும் அங்கு வாடிக்கையாளராக இருந்த பிஞ்சனூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராயர் (30) என்பவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்