search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி டிக்கெட்"

    • சீனாவில் லின் என்ற பெண்மணி தனது நாயுடன் வாக்கிங் சென்றார்.
    • அப்போது அந்த நாய் கவ்விப் பிடித்த லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்தது.

    பீஜிங்:

    தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார் லின் என்ற பெண்மணி. அவர் கையில் பிடித்திருந்த நாய், ஒரு கடைக்கு அருகே வந்தபோது திடீரென எஜமானரின் பிடியில் இருந்து நழுவி கடைக்குள் ஓடியது. அங்கு வைக்கப்பட்டிருந்த லாட்டரி டிக்கெட்டை கவ்விப் பிடித்தது. இதனால் அவர் அந்த டிக்கெட்டை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 139 டாலர் பரிசு விழுந்தது. இதனால் லின் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

    மறுநாள் அவர் தனது நாயை அந்தக் கடைக்கு அழைத்துச்சென்று மீண்டும் ஒரு லாட்டரி டிக்கெட்டை கவ்வச் செய்தார். இந்த முறை அவருக்கு 4 டாலர் பரிசு விழுந்தது. அதிர்ஷ்டத்தை தேடித்தந்த நாய்க்கு பரிசுத்தொகையில் ஒரு பகுதியை செலவு செய்தேன் என்றார் லின்.

    • பண்டிகை காலங்களில் நடத்தப்படும் சிறப்பு குலுக்கலில் ஒரு லாட்டரி டிக்கெட்டே அதிக விலைக்கு விற்கப்படும்.
    • திடீரென அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டரை தூக்கியெறிந்து உடைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் அரசு மூலமாகவே விற்கப்படுகின்றன. புத்தாண்டு, ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நடத்தப்படும் பம்பர் குலுக்கல் மிகவும் பிரபலமாகும்.

    அதில் வாடிக்கையாளர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. இதனால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான தமிழகம் மற்றும் கேரளாவுக்கு சுற்றுலா வரக்கூடிய வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கிச் செல்வார்கள்.

    பரிசுத்தொகை கோடி, லட்சம், ஆயிரம் என வழங்கப்படுவதால் அனைத்து தரப்பினரும் லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள். இவ்வாறு லாட்டரி சீட்டுகளை வாங்கிய தன் மூலம் அதிக பரிசுத் தொகையை பெற்று பலரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது.

    பண்டிகை காலங்களில் நடத்தப்படும் சிறப்பு குலுக்கலில் ஒரு லாட்டரி டிக்கெட்டே அதிக விலைக்கு விற்கப்படும். அப்படிப்பட்ட நேரத்தில் கஷ்டப்பட்டவர்கள் குழு வாக ஒன்றிணைந்து லாட்டரி சீட்டை வாங்குகிறார்கள். அப்படி வாங்கி லட்சக்கணக்கில் பரிசுத்தொகையை வென்றவர்களும் இருக்கிறார்கள்.

    சமீபத்தில் துப்புரவு தொழில் செய்யும் 11 பெண்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு குலுக்கலில் அதிகத்தொகை கிடைத்தது. குலுக்கலில் ஏராளமானோருக்கு பரிசு வழங்கப்படுவதால் எப்படியும் பரிசு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பலர் சிறப்பு குலுக்கலின்போது லாட்டரி சீட்டுகள் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

    அப்படி லாட்டரி சீட்டுகளை வாங்கியபடி இருந்த ஒருவர், குலுக்கலில் தனக்கு பரிசு விழாத ஆத்திரத்ததில் லாட்டரி அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கிறார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    பத்தினம்திட்டா மாவட்டம் நாரங்கனம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது45). லாட்டரி ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் இவர், லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்காக மாவட்ட லாட்டரி அலுவலகத்திற்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ வந்து சென்றிருக்கிறார்.

    இந்நிலையில் அவர் சட்டை அணியாமல் காவி வேட்டி மட்டும் அணிந்தபடி அரை நிர்வாண கோலத்தில் மாவட்ட லாட்டரி அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், திடீரென அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பிரிண் டரை தூக்கியெறிந்து உடைத்தார்.

    மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார். அது மட்டுமின்றி அலுவலகத்துக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டர் விடுத்தார். கிருஷ்ண குமாரின் இந்த செயலால் லாட்டரி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெண் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.

    இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட கிருஷ்ணகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதிர்ஷ்ட குலுக்கலில் தனக்கு பரிசு விழாத ஆத்திரத்தில் லாட்டரி அலுவலத்தை கிருஷ்ணகுமார் அடித்து உடைத்து சூறையாடியது தெரியவந்தது.

    இதையடுத்து கிருஷ்ண குமார் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    • போலீசார் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • இருசக்கர வாகனத்தில் லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதை யடுத்து திண்டிவனம் ஏ.எஸ். பி. அபிஷேக் குப்தா உத்தரவின் படி, திண்டிவனம் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்பொழுது இருசக்கர வாகனத்தில் லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த அப்பு ராஜ் (வயது 32), ரோசனை பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டு, ஆன்லைன் லாட்டரிக்காக பயன்படுத்திய மொபைல் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் லாட்டரி டிக்கெட் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார்பண்ருட்டி பகுதியில்தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படி அங்கு நின்றுகொண்டிருந்த பண்ருட்டி கொக்கு பாளையம்ரோட்டைசேர்ந்த அப்துல்மத்தீன்(வயது45),புதுப்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த யுவராஜ் (48), ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் 2 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அவர்களிடம்இருந்து ஏராளமான லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

    • விழுப்புரம் புறநகர் பகுதியில் லாட்டரி டிக்கெட் அமோகமாக விற்பனை செய்யப்பட்டது.
    • போலீசார் சிறுவந்தாடு அருகே மந்தக் கடை பகுதிகளில் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதாவிற்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெ க்டர் அன்பழகன் தலை மையிலான போலீசார் சிறுவந்தாடு அருகே  மந்தக்கடை பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது மந்தகடை பகுதியில்உள்ள பாரதி தாசன் என்பவரது டீக்கடையில்அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிசீட்டுகள் மறைத்து வைத்துவிற்பனை செய்வது தெரிய வந்தது. வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிதாசன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து புறநகர் பகுதியில் லாட்டரி விற்பனைநடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே பஸ் நிறுத்தம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றனர்.
    • நாகராஜன் தலைமையிலான போலீசார் பார்த்து அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பெண்ணை வலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேப்பன் (வயது 49), முருகன் (39) . இவர்கள் நேற்று திருவெண்ணைநல்லூர் அருகே பஸ் நிறுத்தம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றனர். இதை அந்த வழியாக ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பார்த்து அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வேப்பன் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டபோது ஒரு நபர் லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளார்.
    • கைது செய்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீசார் வண்டி கேட் அருகே ரோந்து பணியை மேற்கொண்டபோது ஒரு நபர் லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளார். தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திய போது பள்ளிப்படை பூதகேணி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அன்வர்தீன் (63) என்பவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அதே எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கு 14 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #Lotterytickets #jackpot
    நியூயார்க்:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 300 டாலர் பரிசாக கிடைத்தது. அதன் பின் தற்போது அவர் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த லாட்டரி டிக்கெட் எண்ணை சரிபார்த்த போது அவருக்கு பரிசு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும், அந்த எண் 18 ஆண்டுகளுக்கு முன் பரிசு விழுந்த அதே எண் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு 4 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்தது. அந்த பரிசுத்தொகையில் பாதியை தனது வீட்டிற்கும், மீதி பணத்தை சேமித்து வைக்க போவதாகவும் தெரிவித்தார்.

    அதிர்ஷ்டம் ஒரு மனிதரின் வாழ்வில் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இவருக்கு 18 ஆண்டுகளுக்கு பின் அதே எண்ணில் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #Lotterytickets #jackpot

    ×