search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராபின் உத்தப்பா"

    • ஜனவரியில் தொடங்கும் இந்த லீக் போட்டிகளில் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
    • துபாயில் நடக்க உள்ள சர்வதேச டி 20 லீக் போட்டிகளில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய யூசப் பதானும் ஓய்வு அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர்கள் இருவரும் துபாயில் நடக்க உள்ள சர்வதேச டி 20 லீக் போட்டிகளில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

    ஜனவரியில் தொடங்கும் இந்த லீக் போட்டிகளில் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. 

    • உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • 37 வயதான பங்கஜ் அத்வானி பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கரில் பல்வேறு வகையான உலக போட்டிகளில் கைப்பற்றிய 25-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதற்கான இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 4-0 என்ற கணக்கில் சக வீரர் சவுரவ் கோத்தாரியை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். மகாராஷ்டிராவைச் ர்ந்த 37 வயதான பங்கஜ் அத்வானி பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கரில் பல்வேறு வகையான உலக போட்டிகளில் கைப்பற்றிய 25-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    25 சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த பங்கஜ் அத்வானிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த மனிதரின் சாதனைகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    25 உலக சாம்பியன்ஷிப் பட்டம். என் சாம்பியனுக்கு

    வாழ்த்துக்கள். உங்கள் விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வமும் அர்ப்பணிப்பும் முடிவில்லாதது. என் சகோதரனே உன்னை என்றும் நேசிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எனது நாடு, எனது மாநிலத்திற்காக விளையாடியது மிகப்பெரிய கவுரவம்.
    • சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு நன்றி.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த ராபின் உத்தப்பா ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராபின் உத்தப்பா ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

    நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகின்றன, இது ஏற்ற தாழ்வுகள் நிறைந்த அற்புதமான பயணம். அது நிறைவாகவும், சுவாரஸ்யமாகவும், என்னை அனுமதித்துள்ளது. எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எனது மிகப்பெரிய கவுரவமாகும்.

    இருப்பினும், அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மேலும் நன்றியுள்ள இதயத்துடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது குடும்பத்துடன் குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிடுவேன், அதே நேரத்தில் ஒரு புதிய பயணத்தை எதிர் நோக்கி உள்ளேன்.

    எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்த பிசிசிஐ தலைவர், செயலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ராபின் உத்தப்பா இந்திய அணிக்காக 60 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4952 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் அடித்த 9வது இந்திய வீரராக இருந்து வந்தார்.

    ×