search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவவீரர்"

    • ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்த ஜெய்ஜவான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
    • உடலுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி மரியாதை செலுத்தினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் ஜெய்ஜவான்(41). இவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி(31) என்ற மனைவியும், ருத்ரன்(4) என்ற மகனும், பிரியதர்சினி(8) என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த 22 ஆண்டுகளாக காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விடுமுறைமுடிந்து அருணாசலபிரதேசத்திற்கு பணிமாறுதலில் சென்றார். அங்கு உள்ள ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்த ஜெய்ஜவான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ராணுவ அதிகாரிகள் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் போடி சங்கராபுரத்திற்கு கொணடுவரப்பட்டது. இன்று காலை ஜெய்ஜவான் உடலுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 

    • ராணுவவீரரான சுரேஷ் இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • பாத்திரங்களை ஆலங்குளத்தில் உள்ள ஒரு பாத்திரக் கடையில் விற்றது விசாரணையில் தெரியவந்தது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது31). ராணுவவீரரான இவர் இரட்டை கொலை வழக்கில் கைதாகி தூத்துக் குடி பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    திருட்டு

    இவரது வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. சம்பவத்தன்று அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பித்தளை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சுரேசின் நண்பரான அதே பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் (32) என்பவர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது

    கைது

    அலெக்சின் சகோதரர் பிரதீப் குமார், அவரது நண்பர்கள் சுரேஷ்குமார், பிரகாஷ், இந்திரஜித் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அந்த பாத்திரங்களை ஆலங் குளத்தில் ஒரு பாத்திரக் கடையில் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
    • நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் உடலை மீட்டனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி, புதுத்தெருவை சேர்ந்தவர் ஆரோன் இளையராஜா (வயது38).

    இவர் திருச்சியில் உள்ள ராணுவ பட்டாலி யனில் ஹவில்தாராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று தனது அண்ணன் மகன்களான சூர்யா (18), ஹரீஷ் (12) மற்றும் மனைவி சுகன்யாவுடன் அந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.

    இவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது சூர்யாவும், ஹரீசும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

    அப்போது அவர்கள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

    இதை பார்த்த ஆரோன் இளையராஜா, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த அண்ணன் மகன்கள் 2 பேரையும் மீட்டார். பின்னர் அவர் கரைக்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமானார்.

    இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் திருக்காட்டு ப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா உடலை மீட்டனர்.

    தகவல் அறிந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆரோன் இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சோகம் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே வயலில் இறந்த ராணுவ வீரர் சுருண்டு விழுந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி பக்கம் உள்ள கரடிக்கல் புன்னனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதுரை வீரன் (வயது40). இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    ராணுவ வீரரான இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் பணி ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு ஊரில் உள்ள தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வந்தார். புன்னனம்பட்டியில் உள்ள தனது வயலில் தற்போது சோளம் விதைத்துள்ளார். நேற்று வயலுக்கு சென்றிருந்த அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு மதுரை வீரனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஆதிலட்சுமி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர் பலியானார்.
    • இவர் கடந்த 9-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே அனுப்பபட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது25). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 9-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அவர் நண்பர்கள் 5 பேருடன் திருவேடகம்-மேலக்கால் தடுப்பணை அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது குளித்து கொண்டிருந்த வினோத்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அய்யங்காளை என்பவரின் மகன் அன்பரசன் ஆகியோர் சுழலில் சிக்கினர்.

    இதுபற்றி தீயணைப்பு மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் ஆற்றில் மூழ்கிய 2 பேரையும் தேடினர். இதில் அன்பரசனின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் வினோத்குமார் உடல் கிடைக்கவில்லை. அவரது உடலை தொடர்ந்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி பலியான வினோத்குமார் உடல் இன்று காலை மிதந்தது. அவரது உடலை தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் மீட்டனர்.

    பலியான வினோத்குமாருக்கும், நிறைமதி என்ற பெண்ணுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் வினோத்குமார் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • திருமங்கலம் அருகே விடுமுறையில் வந்த ராணுவவீரர் உயிரிழந்தார்.
    • வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

     திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கப்பலூர் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(42). அரியானா மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்தார். 5 தினங்களுக்கு முன்பு வடிவேல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.

    நேற்று வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்பு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வடிவேல் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மனைவி பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தக்கலையைச் சேர்ந்த ராணுவ வீரர்
    • பணிபுரியும் இடத்தின் அருகே உள்ள மரத்தில் ஜெபர்சன் தூக்கு போட்டு தற்கொலை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபர்சன் (வயது 34), ராணுவ வீரர். இவரது மனைவி அனிஷா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் பணியில் இருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் விடு முறை முடிந்து பணிக்கு திரும்பி சென்றார்.

    அங்கிருந்தபடி குடும்பத்தினருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் பணிபுரியும் இடத்தின் அருகே உள்ள மரத்தில் ஜெபர்சன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலை செய்த ஜெபர்சன் உடல் இன்று மாலை குழிக்கோடு கொண்டு வரப்படுகிறது. பணி செய்ய சென்ற இடத்தில் ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் குழிக்கோடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமங்கலம் அருகே விபத்தில் பலியான ராணுவ வீரர் நினைவாக ஆம்புலன்ஸ் சேவை தி.மு.க. மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார்.
    • ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைக்கு ஏற்பாடு செய்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள உலகாணி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து-மீனாட்சி தம்பதியரின் மகள் பாலமுருகன். இவர் ராணுவ வீரராக பணியாற்றினார். 6 வருடத்திற்கு முன்பு ஊருக்கு வந்திருந்த நிலையில் பாலமுருகன் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

    பாலமுருகனின் 29-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சகோதரர் பால்பாண்டி மற்றும் குடும்பத்தினர் சார்பில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைக்கு ஏற்பாடு செய்தனர்.

    இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை தொடக்க விழா சின்ன உலகாணி கிராமத்தில் நடந்தது. இதில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் லாவண்யா, எஸ்.கே.ஜி. மருத்துவமனை மருத்துவர் அமுதகுமார், வேலு மருத்துவமனை மருத்துவர் சரவணன், கூடக்கோவில் தலைமை ஆசிரியர்கள் ஞானம்மாள், மோகன், ஆசிரியர் செந்தில்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×