search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர் தூக்குப் போட்டு தற்கொலை
    X

    அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர் தூக்குப் போட்டு தற்கொலை

    • தக்கலையைச் சேர்ந்த ராணுவ வீரர்
    • பணிபுரியும் இடத்தின் அருகே உள்ள மரத்தில் ஜெபர்சன் தூக்கு போட்டு தற்கொலை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபர்சன் (வயது 34), ராணுவ வீரர். இவரது மனைவி அனிஷா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் பணியில் இருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் விடு முறை முடிந்து பணிக்கு திரும்பி சென்றார்.

    அங்கிருந்தபடி குடும்பத்தினருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் பணிபுரியும் இடத்தின் அருகே உள்ள மரத்தில் ஜெபர்சன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலை செய்த ஜெபர்சன் உடல் இன்று மாலை குழிக்கோடு கொண்டு வரப்படுகிறது. பணி செய்ய சென்ற இடத்தில் ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் குழிக்கோடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×