search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாட்டு பணி"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை

    கன்னியாகுமரி :

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சிக் குட்பட்ட பால கிருஷ்ணன்புதூர், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் உதிரப்பட்டி, இந்திரா காலனி பகுதியில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது.

    அப்பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கும் திட்ட பணிக்கு ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    மேலும், புத்தளம் பேரூராட்சிக் குட்பட்ட கீழபுத்தளம் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து மணவாளபுரம், கீழபுத்தளம், புத்தளம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.35 லட்சமும், அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட தட்டரிப்பு அளம் பகுதியில் உள்ள தகனமேடை பகுதிக்கு செல்வதற்கு புதிய பாலம் அமைப்பதற்கு ரூ.58 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 88 லட்சத்தை பேரூராட்சி நிர்வாகத்தின் 2023-2024-ம் ஆண்டிற்கான மூலதன மானிய நிதியின் கீழ் அரசு ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பேரூ ராட்சி பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட மேம்பாட்டு பணிக்காக நிதி ஒதுக்கி யதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் தமிழ்நாடு மாநில எல்லையையும், புதுச்சேரி மாநில எல்லையையும் இணைக்கும் மற்றொரு முக்கிய சாலையாக திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை - காசிப்பாளையம் - பூத்துறை - மேட்டுப்பாளையம் மற்றும் பூத்துறை - பெரம்பை ஆகிய சாலைகள் உள்ளது. இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஊசுட்டேரி சுற்றுலாத்தளம், பறவைகள் சாரணாலயம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருவதால், போக்குவரத்து நெரிசலுடன் உள்ளது.

    இந்த சாலையை அகலப்படுத்தவும், பழைய பாலங்களை புதுப்பித்து புதிய பாலங்களை கட்டித்தரவேண்டுமென பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் நீண்டகால கோரிக்கையாக வைத்ததன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணியினை, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, திருச்சிற்ற ம்பலம்-காசிப்பாளையம் வரை உள்ள 3 கீ.மீ. நீள சாலையினை 3 மீட்டரிலிருந்து 5 மீட்டராக அகலப்படுத்தவும், பழைய பாலங்களை மேம்பாடு செய்வதற்கும், ரூ.6.85 கோடி மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், காசிப்பாளையம் முதல் பூத்துறை வரை உள்ள 2 கீ.மீ. சாலை ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. மேற்காணும் 5 கீ.மீ. நீள சாலை, நெடுஞ்சாலை த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக பூத்துறை-மேட்டு ப்பாளையம் சாலையானது (2.95 கீ.மீ. நீளம்) 1.69 கோடி மதிப்பீட்டிலும், பூத்துறை-பெரம்பை சாலையானது (1.35 கீ.மீ. நீளம்) ரூ.72.85 லட்சம் மதிப்பீட்டிலும், சாலை மேம்பாட்டு பணிக ளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி யுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் பழனி,திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை முதல் பூத்துறை வரை உள்ள சாலையை அகலப்படுத்தும் பணிகள், பாலம் அமைக்கும் பணிகள் ஆகியவைகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • சிற்றாறு 2 அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதிநவீன புதிய படகுதளம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்து வதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படுமென முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

    குறிப்பாக சிற்றாறு 2 அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதிநவீன புதிய படகுதளம் அமைக்க வேண்டுமெனவும், மாத்தூர் தொட்டிப் பாலத்தை சுற்றி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டுமெனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நான் கோரிக்கை வைத்தேன். இக்கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என வும், அதற்கான வரைவு திட்டத்தை தயாரிக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்தில் என்னுடைய தலைமையில், சிற்றாறு 2 நீர்த்தேக்க பகுதியில் ரூ.3.4 கோடி மதிப்பிலும், மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்பட இருக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடை பெற்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்வளத்துறை), சந்தீப் சக்சேனா, சுற்றுலா துறையின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, கன்னியாகுமரி மாவட்டட அரசு அலுவலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாவட்டத்தில் ரூ.5.28 கோடி மதிப்பில் தார் சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
    • இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைச்சர் மூர்த்தி ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் 3 தார் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ1.37கோடி மதிப்பீட்டில் 1.6கி.மீ நீளம், மாங்குளம் கிராமத்தில் ரூ2.04கோடி மதிப்பீட்டில் மாங்குளம் - காந்திநகர் வரை 2கி.மீ நீளம், வெள்ளியன்குன்றம் புதூர் கிராமத்தில் ரூ1.87கோடி மதிப்பீட்டில் விபுதூர் முதல் அந்தமான் சாலை வரை 2கி.மீ நீளம் என மொத்தம் ரூ5.28கோடி மதிப்பீட்டில் 5.6கி.மீ நீளம் உள்ள 3 தார்சாலைகள் மேம்பாட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி பொது மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மணிமேகலை, சோமசுந்தரபாண்டியன், வழக்கறிஞர் கலாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் கடலில் கலக்கிறது.
    • திடீர் நீர்வரத்து காரணமாக உப்பாற்று ஓடை கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே மலைப்பட்டி என்னும் கிராமத்தில் சிறு, சிறு காட்டோடைகள் இணைந்து ஆறாக உருவெடுத்து ஓட்டப்பிடாரம், தட்டப்பாறை வழியாக தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் சென்று கோரம்பள்ளம் குளத்தை வந்தடைகிறது.

    பின்னர் கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் சென்று தூத்துக்குடி துறைமுகம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு உப்பாற்று ஓடை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் காரணமாக கோரம்பள்ளம் குளம் அதிகப்பட்ச நீர்மட்டத்தை எட்டியது.

    இதனால் உபரிநீர் போக்கியில் உள்ள 24 மதகுகள் மூலம் 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. திடீர் நீர்வரத்து காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து உப்பாற்று ஓடையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ரூ.5 கோடிஇந்த நிலையில் உப்பாற்று ஓடையை ரூ.5 கோடி செலவில் சீரமைத்து மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சி வீரநாயக்கன் தட்டு பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சிறுபாலங்கள் அமைத்தல், உள்வாங்கிகள் கட்டுதல், புனரமைத்தல், பிற வெள்ள பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறும்போது, கடந்த காலங்களில் உப்பாற்று ஓடையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலக பகுதி, மறவன்மடம், அந்தோணியார்புரம், சுப்பிரமணியபுரம், பெரியநாயகிபுரம், திரு.வி.க.நகர், எஸ்.எஸ்.நகர், காலாங்கரை, அத்திமரப்பட்டி, வீரநாயக்கன்தட்டு, முத்துநகர், முத்தையாபுரம், கோவில்பிள்ளைநகர் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    எனவே இந்த பகுதிகளில் வருங்காலத்தில் காட்டாற்று வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு திட்டமாக கோரம்பள்ளம் ஆற்றில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்ட செயற்பொறியாளர் அ.வசந்தி, உதவி செயற்பொறியாளர்கள் சுபாஷ், ரத்தினகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சரே நேரில்வந்து மருத்துவமனையை ஆய்வு செய்ததையும் நினைவூட்டினார்.
    • உடனடியாக மருத்துவத் துறை அதிகாரிகளை தொடர்பு அமைச்சர்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    சென்னை முகாம் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாக கோரிக்கை வைத்தார்.

    ஏற்கெனவே இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்ததையும், அமைச்சரே நேரில்வந்து மருத்துவமனையை ஆய்வு செய்ததையும் நினை வூட்டினார்.

    உடனடியாக மருத்துவத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர், மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    விரைவில் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பி ரமணியன் உறுதியளித்தார்.

    • காங்கேயம் வாரச்சந்தையில் 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன.
    • இயற்கை சீற்றங்கள் எதிலிருந்தும் பாதுகாப்பாக வியாபாரம் செய்யவும், பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் சந்தை அமைக்கப்படுகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வாரச்சந்தை மிக பழமையானதாகும். இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் திங்கள் தோறும் நடக்கும் சந்தையில் பொருட்களை வாங்கி விற்று வருவது வழக்கம். ஆனால் சந்தை பல ஆண்டாக அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்டது.

    இதனை மேம்படுத்த வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன. சாய்வு தளத்துடன் விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்ய ஏதுவாக கடைகள் அமைக்கப்படும். இதில் தினசரி மார்க்கெட்க்கு 67 கடைகள் அமைக்கப்படுகின்றன.

    இந்தக் கடைகளுக்கு வந்து செல்ல வசதியாக அகலமான தடம் அமைக்கப்படும். மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்கள் எதிலிருந்தும் பாதுகாப்பாக வியாபாரிகள் வியாபாரம் செய்யவும், பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

    மேலும் 27 கறிக்கடைகள் அமைக்க இடம் தனியாக ஒதுக்கப்பட்டு, முறைப்படி இந்த கடைகள் அங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரு பெரிய அளவிலான குடோனும் அமைக்கப்பட உள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ஏடிஎம். சென்டர் ஒன்றும் இதில் அமைய உள்ளது. மேலும் பாத்ரூம், டாய்லெட் 20 அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதியும் இதில் செய்யப்பட உள்ளது. இதனால் மக்கள் எளிதில் வந்து செல்ல முடியும்.

    இந்த சந்தைக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு என நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. கடந்த 10 வருடத்திற்கு மேல் சந்தையில் அடிப்படை வசதி செய்து தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சாமிநாதன் சந்தையை மேம்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதனை அடுத்து தற்போது சந்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சந்தை பணிகள் ஒரு வருடத்தில் முடிக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பிலிருந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.
    • பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஒன்றியம்கோட்டமங்கலத்தில் கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    குடியிருப்பு கட்டும் போதே வடக்கு பகுதியில் மழை நீர் உள்ளே வராமல் தடுக்க சுற்றுசுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தொடர்ந்து, இக்குடியிருப்பில் பிற மேம்பாட்டு பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதே போல், முன்பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காவும் பொலிவிழந்து விட்டது. பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.பிற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. குடியிருப்புக்கான பஸ் ஸ்டாப் நிழற்கூரையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.

    இந்நிலையில் சமீபத்தில் சமத்துவபுர குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டத்தை அரசு செயல்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்தது.உடுமலை ஒன்றியம், பாலப்பம்பட்டி உள்ளிட்ட சமத்துவபுரங்கள் இத்திட்டத்தில், சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கோட்டமங்கலம் குடியிருப்பு கண்டுகொள்ளப்படவில்லை. எனவே இந்தாண்டு இக்குடியிருப்பு மேம்பாட்டுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    ×