search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூன்றாவது போட்டி"

    பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 151 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆசிப் அலி அரை சதமடித்தார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், டாம் குர்ரான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் சிறப்பாக ஆடினர். 

    ஜேசன் ராய் 76 ன்ரனில் அவுட்டானார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோவ் சதமடித்து அசத்தினார். அவர் 128 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட், மொயின் அலி ஆகியோர் பொறுப்புடன் ஆட இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
    ஹேமில்டனில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.



    அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

    அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #NZvIND
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. #WIvENG
    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியா நகரில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், ஜென்னிங்ஸ் ஆகியோர் இறங்கினர். ஜென்னிங்ஸ் 8 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய டென்லி 20 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 15 ரன்னிலும் அவுட்டாகினர். இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து தத்தளித்து. 



    தொடர்ந்து இறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்தனர்.

    முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 67 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமோ பால் 2 விக்கெட்டும், கேப்ரியல், ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #WIvENG
    டாக்காவில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் வங்காள தேசத்தை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #BANvWI
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. 

    டாஸ் வென்ற வங்காள தேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லெவிஸ், ஷாய் ஹோப் இறங்கினர்.

    இதில் லெவிஸ் அதிரடி காட்டினார். அவர் 36 பந்துகளில் 8 சிக்சர், 6 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    அவருக்கு ஷாய் ஹோ சிறிது ஒத்துழைப்பு கொடுத்து 23 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். நிகோலஸ் பூரன் 29 ரன்னில் அவுட்டானார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    வங்காள தேசம் சார்பில் ஷாகிப் அக் ஹசன், முஸ்தாபிசுர் ரகுமான், மொகமதுல்லா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. அந்த அணியில் லித்தன் தாஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி வங்காள தேச வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், வங்காள தேசம் அணி 17 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமோ பவுல் 5 விக்கெட்டும், பேபியன் ஆலன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 50 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #BANvWI
    சிட்னியில் நடைபெற்ற கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, தவான் அதிரடியால் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. #AUSvIND #ViratKolhi
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    ஆரோன் பிஞ்ச, டி ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். ஆரோன் பிஞ்ச் 28 ரன்னிலும், ஆர்கி ஷார்ட் 33 ரன்னிலும் வெளியேறினர். மேக்ஸ்வெல் 13 ரன்னிலும், பென் மெக்டெர்மோட் டக் அவுட்டாகி வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், கவுல்டர்-நைல் அதிரடியாக ஆடினர். இதனால், ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் 25 ரன்னுடனும், நாதன் கவுல்டர் நைல் 13 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

    இந்திய அணி சார்பில் குருணால் பாண்டியா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளுக்கு விரட்டினர். இதனால் இந்த ஜோடி அரை சதத்தை கடந்தது.

    அணியின் எண்ணிக்கை 67 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மாவும் 23 ரன்களில் வெளியேறினார்.



    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். ஆனாலும் லோகேஷ் ராகுல் 14 ரன்னிலும், ரிஷப் பந்த் டக் அவுட்டிலும் வெளியேற இந்தியாவுக்கு நெருக்கடி ஆரம்பித்தது.

    அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி 34 பந்தில் அரை சதம் அடித்தார். இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றி மூலம் டி 20 தொடரை இந்தியா 1 - 1 என சமன் செய்தது. #AUSvIND #ViratKolhi
    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை முழுமையாக வென்றது. #BANvAFG #AFGvBAN
    டேராடூன்:

    வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடந்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், தொடரை கைப்பற்றியது. 

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அக்சார் ஸ்டானிக்சாய் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். ஷசாத் 26 ரன்னிலும், கனி 19 ரன்னிலும், ஸ்டானிக்சாய் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நபி 3 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். சத்ரான் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. சமியுல்லா ஷென்வாரி அதிகபட்சமா 33 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    வங்காளதேசம் சார்பில் நஸ்முல் இஸ்லாம், அபு ஜயத் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.



    இதைத்தொடர்ந்து, 146 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாஸ், தமிம் இக்பால் இறங்கினர். தாஸ் 12 ரன்னிலும், தமிம் 5 ரன்னிலும், அடுத்து இறங்கிய சவுமியா சர்க்கார் 15 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரகிம் ஓரளவு பொறுப்புடன் ஆடினார். இவர் இறுதி வரை போராடி 46 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 10 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து ஆடிய மகமதுல்லா இறுதி வரை போராடினார். வங்காளதேசம் வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
     
    19வது ஓவரில் முஷ்பிகுர் 21 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ரஷித் கான் சிறப்பாக பந்து வீசினார்.

    முதல் பந்தில் முஷ்பிகுர் ரகிமை அவுட்டாக்கினார். இரண்டாவது பந்தில் மகமதுல்லா ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் 2 ரன்னும், நான்காவது பந்தில் ஒரு ரன்னும், ஐந்தாவது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் வங்காளதேசம் அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது. எதிர்பாராவிதமாக, விக்கெட் விழ, பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இறுதியில், வங்காளதேசம் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரு ரன்னில் பரிதாபமாக தோற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில், முஜிப் உர் ரகுமான், கரிம் ஜனாத் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் 20 ஓவர் தொடரை முழுமையாக 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரகிம் மற்றும் தொடர் நாயகன் விருது ரஷித் கானுக்கும் வழங்கப்பட்டது. #BANvAFG #AFGvBAN
    ×