search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2013-ல் பா.ஜனதா 44.88 சதவீதம் வாக்குகளுடன் 165 இடங்களை பெற்றிருந்தது.
    • காங்கிரஸ் 36.38 சதவீத வாக்குகளுடன் 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது

    மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அல்லது கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி வாகை சூடி அமோக வெற்றி பெற்றுள்ளது. 230 இடங்களில் 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட பா.ஜனதா தற்போது அதிகமாக 7 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. 2018-ல் பா.ஜனதா 41.02 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது 48.55 சதவீதம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கடந்த தேர்தலில் 40.89 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது, தற்போது 40.40 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. ஏறக்குறைய ஒரே வாக்கு சதவீதமாக இருந்தாலும் 114 இடங்களில் இருந்து 66 இடங்களாக குறைந்துள்ளன.

    2013-ல் பா.ஜனதா 44.88 சதவீதம் வாக்குகளுடன் 165 இடங்களை பெற்றிருந்தது. காங்கிரஸ் 36.38 சதவீத வாக்குகளுடன் 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    2008-ல் 37.64 சதவீத வாக்குகளுடன் 143 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 71 இடங்களுடன் 32.39 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.

    2003-ல் பா.ஜனதா 173 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது 42.50 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரஸ் 38 தொகுதிகளுடன் 31.6 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கடந்த தேர்தலை விட 35 இடங்களில் பின்தங்கியுள்ளது.
    • பா.ஜனதா 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் 90 இடங்களில் 68 இடங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்த முறையும் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. இதனால் எளிதாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளும் தலா 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 52 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. தொடர்ந்து பா.ஜனதா முன்னிலை பெற்றதுடன், ஆட்சி அமைப்பதற்கான 46 இடங்களையும் தாண்டி முன்னணி பெற்றது. பா.ஜனதா 54 இடங்களில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் 33 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணி 11 இடங்களில் முன்னிலை.
    • சத்தீஸ்கரில் பா.ஜனதா கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

    ராஜஸ்தானில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. தற்போதைய நிலையில் பா.ஜனதா 102 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பா.ஜனதா நான்கு மாநிலங்களில் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 8 இடங்கள் அதிகமாகும்.

    ராஜஸ்தானில் 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. கடந்த தேர்தலை விட 33 இடங்கள் அதிகமாகும்.

    சத்தீஸ்கரில் பா.ஜனதா கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 20 இடங்கள் அதிகமாகும்.

    தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணி 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 11 இடங்கள் அதிகமாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது.
    • தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது.

    4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதனைத்தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன

    காலை 8.40 நிலவரப்படி பா.ஜனதா 87 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்கிளிலும் முன்னிலை வகித்தன. பின்னர் நேரம் செல்ல செல்ல இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலைப் பெற்று வந்தன. இதனால் கடும் இழுபறி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், 10 மணி நிலவரப்படி பா.ஜனதா முன்னிலை பெற்றது. 199 இடங்களில் 103 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் 252 பெண்கள் உள்பட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    • ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு கடந்த 25-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 74.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக சட்டசபை தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது.

    இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதாவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது.

    மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணியும், சோரம் மக்களின் இயக்கமும் நேரடியாக மோதிக்கொள்ள, காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளும் சேர்ந்து களத்தை வலுப்படுத்தின.

    மத்திய பிரதேசம்

    பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. மாநிலத்தில் 252 பெண்கள் உள்பட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    அங்கு தபால் வாக்குகளையும் சேர்த்து 77.82 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் 52 மாவட்டங்களின் தலைநகரங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

    முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், பக்கன்சிங் குலாஸ்தே, பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா என ஏராளமான முக்கிய வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.

    மாநிலத்தில் பா.ஜனதாவே மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து இருந்தன. இது அந்த கட்சியினருக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

    அதேநேரம் இதை புறக்கணித்துள்ள காங்கிரசார், மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்தும், 2020-ம் ஆண்டு பா.ஜனதாவிடம் பறிகொடுத்ததைப்போல இந்த முறை நடக்காது என்றும் அவர்கள் உறுதிபட கூறியுள்ளனர்.

    ராஜஸ்தான்

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு கடந்த 25-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 74.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    முதல்-மந்திரி அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களும், முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திர ரத்தோர் உள்ளிட்ட பா.ஜனதா வேட்பாளர்களும் தங்கள் அரசியல் எதிர்காலத்தை அறிய ஆவலுடன் உள்ளனர்.

    மாநிலத்தில் கடந்த சில தேர்தல்களாகவே ஒவ்வொரு 5 ஆண்டும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.

    தற்போது அங்கே காங்கிரஸ் ஆண்டுவரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகள் தங்களது ஆட்சி என பா.ஜனதாவினர் நம்புகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அவர்களுக்கு ஆதரவாகவே உள்ளன.

    சத்தீஸ்கர்

    காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் கடந்த மாதம் 7 மற்றும் 17-ந்தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 76.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், துணை முதல்-மந்திரி சிங் தியோ, முன்னாள் முதல்-மந்திரி ராமன் சிங் உள்பட ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1,181 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.

    அங்கு தேர்தலுக்கு பின்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் காங்கிரசே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் என தெரிய வந்திருக்கிறது.

    தெலுங்கானா

    பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆளும் தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. அங்கு பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவியது.

    இந்த கட்சிகளை சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் போட்டிக்கோதாவில் உள்ளனர். இதில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அவரது மகன் கே.டி. ராமாராவ், காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி.க்கள் பண்டி சஞ்சய் குமார், அரவிந்த் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். மாநில தேர்தலில் 71.34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    தெலுங்கானா பிரிவினைக்கு முக்கிய பங்காற்றிய சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி, மாநிலத்தில் கடந்த 2 முறையாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. அங்கு ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் அந்த கட்சி உள்ளது.

    ஆனால் இந்த முறை மாநில மக்கள் மாற்றத்தை சிந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியும் இந்த தேர்தல்களை அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே கருதி களப்பணி ஆற்றின.

    எனவே இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது. இவ்வாறு ஆவலை தூண்டியிருக்கும் இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பலுக்குள் தெரிந்துவிடும்.

    • நான்கு 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர்கள், கட்சி முகவர்கள் கடும் சோதனைக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்பின் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    • ம.பி.யில் பா.ஜனதா 100 முதல் 123 இடங்களையும், காங்கிரஸ் 102 முதல் 125 இடங்களையும் பெறும் என தெரிய வந்துள்ளது.
    • 86 முதல் 106 இடங்கள் வரை ஆளும் காங்கிரஸ் பெறும் எனவும் பா.ஜனதா 80 முதல் 100 இடங்கள் வரை கைப்பற்றும்

    5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும், தெலுங்கானா, சத்தீஸ்காரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.

    இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...

    ராஜஸ்தான் மாநில மந்திரி மகோஷ ஜோஷி: முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ராஜஸ்தானில ஆட்சியமைக்கும். அதுபோக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்: மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு சிறப்பாக உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சூழ்நிலைய நன்றாக இருக்கிறது. தெலுங்கானாவில் நாங்கள் 80 சதவீத இடங்களை பிடிப்போம். காங்கிரஸ் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்.

    பா.ஜனதா சீனியர் தலைவர் சரோஜ் பாண்டே (சத்தீஸ்கர்): பா.ஜனதா ஏராளமான வளர்ச்சியை கொடுத்துள்ளது. நாங்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்து வருகிறமோ, அங்கெல்லாம் ஆட்சி அமைப்போம். அதேபோல் ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம். மோடி மீதான நம்பிக்கை மக்கள் காட்டியுள்ளனர்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி: இது காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையிலான தேர்தல் அல்ல. 4 கோடி மக்கள் பிஆர்எஸ்-க்கு எதிராக உள்ளனர். இது தெலுங்கானா மக்களின் வெற்றி. முதல் மந்திரிசபை கூட்டத்தில் 6 வாக்குறுதிகளை நிறைவேற்ற அனுமதி பெற்று செயல்படுத்துவோம். நாங்கள் முழு வெற்றி பெறுவோம். இதைத்தான் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

    சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா தலைவர் அருண் சாயோ: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட மாதிரி அளவைக் கொண்டுள்ளன. பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

    ராபர்ட் வதேரா: நான் கருத்துக் கணிப்பை பெரிய அளவில் நம்பவில்லை. நான் உண்மையான முடிவை நம்புகிறவன். நான் கடந்த சில மாதங்களாக ஏராளமான மக்களை சந்தித்தேன். அவர்கள் விரக்தியில் இருந்தனர். குறிப்பாக மத்திய பிரதேசத்தில். ஆட்சியை கவிழ்த்தது தொடர்பான விரக்தி தெரிந்தது.

    பா.ஜனதா எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர்: அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பா.ஜனதா செய்த பணிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே: கருத்துக் கணிப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதற்கு காரணம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங்: கருத்துக் கணிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. நாங்கள் அது குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாது. மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என்ற உறுதியை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முதல்வர் சிவ்சராஜ் சிங் சவுகான் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.பி. ரதோர் (ராஜஸ்தான்): மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முழு மெஜாரிட்டியுடன் ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியமைக்கும். கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட பகுதிக்கானது. 3-ந்தேதி முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும்.

    • 45 எஸ்.டி, 35 எஸ்.சி. தொகுதிகள் உள்பட 230 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • 230 தொகுதிகளில் 2533 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 252 பேர் பெண்கள்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    காலை 9 மணி நிலவரப்படி 10.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 45 எஸ்.டி, 35 எஸ்.சி. தொகுதிகள் உள்பட 230 தொகுதிகளில் 2,533 வேட்பாளர்கள் போட்டியிடுகிறாரக்ள். இவர்களில் 252 பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தினர் ஆவார்கள்.

    நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் பகுதிகளில் மதியம் 3 மணி வரை தேர்தல் நடைபெறும். மற்ற இடங்களில் மாலை 6 மணி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    பொதுமக்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் 64,626 வாக்குச்சவாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் 2,87,82,261 , 2,71,99,586 என மொத்தம் 5,60,58,521 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

    • காங்கிரஸ் தலைவர் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • பாஜக-விடம் காவல்துறை, பணம் மற்றும் நிர்வாகம் உள்ளது என கமல்நாத் விமர்சனம்.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் மத்திய பிரதேச மாநில தலைவரும், முன்னாள் முதல்வரும், சிந்த்வாரா தொகுதி வேட்பாளருமான கமல்நாத் கூறுகையில் "ஒட்டுமொத்த மாநில மக்களும் உண்மையின் பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொதுமக்கள், வாக்காளர்களை நான் நம்புகிறேன். நாங்கள் வெற்றி பெறுவோம், நாங்கள் அதிக இடங்களை பிடிப்போம் என சொல்வதற்கு, நான் சிவராஜ் சிங் அல்ல. இடங்களின் எண்ணிக்கையை பொதுமக்கள் முடிவு செய்வார்கள்.

    பாஜக-விடம் காவல்துறை, பணம் மற்றும் நிர்வாகம் உள்ளது. இன்னும் சில மணி நேரங்களுக்கு அது அவர்களிடம் இருக்கும். நேற்று எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. யாரோ ஒருவர் எனக்கு மது மற்றும் பணம் விநியோகிக்கப்படுவதைக் காட்டும் வீடியோவை அனுப்பி வைத்திருந்தார்" என்றார்.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், கமல்நாத் முதல்வராக வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதலமைச்சராக பதவி ஏற்றார். உள்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.-க்கள் பிரிந்து சென்றதால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

    • செல்போன் தயாரிப்பதில் உலகளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
    • உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இது என்னுடைய உத்தரவாதம்.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் வருகிற 17-ந்தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று பெதுல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "உலகளவில் செல்போன் தயாரிப்பதில் இந்தியா 2-வது மிகப்பெரிய நாடாகியுள்ளது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இது என்னுடைய உத்தரவாதம்.

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல் ஆகியவை நிஜமாகும் என காங்கிரஸ் ஒருபோதும் நம்பியது கிடையாது. ஆனால், நாங்கள் அதை செய்துள்ளோம். மத்திய பிரதேச மக்கள் மத்தியில் பா.ஜனதா மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நம்பிக்கையும் பாசமும் ஏற்பட்டுள்ளது" என்றார்.

    • ஏழைகளுக்கு 450 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
    • ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு இலவச கல்வி வழங்கப்படும்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் வி.டி.சர்மா, முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.450க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

    ஏழைப் பெண்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.

    கோதுமை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,700, நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,100 வரை ஆதார விலை வழங்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

    ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை இலவச கல்வி.

    அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதிசெய்ய பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் போன்று முதல் மந்திரி ஜன் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

    அரசுப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்துடன், காலை உணவு வழங்கப்படும். 6 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும்.

    பழங்குடியின சமுதாயம் அதிகாரம் பெற பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா, முதல் மந்திரி பதவிக்கான போட்டியில் நான் இல்லை என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு சிந்தியா அளித்துள்ள பேட்டியில், காங்கிரசிடம் அதிகாரத்திற்காக போட்டியிடுபவர்கள் உள்ளனர், அவர்களுக்கு குழுக்கள் உள்ளன, அவர்கள் முதலமைச்சராக திட்டம் தீட்டுகிறார்கள். தேர்தலுக்கு முன் காங்கிரசிடம் முதல் மந்திரி என்று கூறிக்கொள்ளும் 8 தலைவர்கள் உள்ளனர்.

    பா.ஜ.க. என்பது தொண்டர்களின் கட்சி. நாம் அனைவரும் காரியகர்த்தாக்கள், அப்படியே இருப்போம். மத்தியப் பிரதேசத்தில் ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் பிரதமர் தலைமையில் தேர்தலில் போராடுகிறது. நான் இந்தப் போட்டியில் (முதல் மந்திரி பதவிக்கு) இல்லை. நான் ஒரு சேவகன். நான் பந்தயத்தில் இல்லை என தெரிவித்தார்.

    ×