search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ம.பி.: சொந்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி- 39 தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கியது காங்கிரஸ்
    X

    ம.பி.: சொந்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி- 39 தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கியது காங்கிரஸ்

    • சீட் கொடுக்காததால் சில தலைவர்கள், சொந்த கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டி
    • முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரை அதிரடியாக நீக்கியுள்ளது காங்கிரஸ்

    மத்திய பிரதேசத்தில் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகளும் களத்தில் உள்ளன.

    பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட சீட் கிடைக்காத தலைவர்களில் சிலர், காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட முடிவு செய்தனர். சில தலைவர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். சில தலைவர்கள் சமாஜ்வாடி, பகுஜன் சமா, ஆம் ஆத்மி கட்சிகளில் இணைந்து போட்டியிடுகின்றனர்.

    இவ்வாறு சொந்த கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்யிடும் 39 தலைவர்களை காங்கிரஸ் கட்சி, கமல்நாத்தின் நேரடி உத்தரவின்பேரில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

    இதில் முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குட்டு (அலோட்), முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் அந்தர் சிங் தர்பார் (மோவ்), யாத்வேந்த்ர சிங் (நகோட்) ஆகியோர் அடங்குவர். மேலும், மாநில கட்சி செய்தி தொடர்பாளர் அஜய் சிங் யாதவ் (கர்காபுர்), நசிர் இஸ்லாம் (போபால் வடக்கு), அமிர் அக்யீல் (போபால் வடக்கு) ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×