search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பேரணியில் பிரியங்கா காந்திக்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்... காரணம் தெரியுமா?
    X

    பேரணியில் பிரியங்கா காந்திக்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்... காரணம் தெரியுமா?

    • மத்திய பிரதேசத்தில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

    இந்தூர்:

    மத்திய பிரதேசத்தில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். இந்த பேரணி காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

    அப்போது, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பிரியங்கா காந்திக்கு பூங்கொத்து கொடுத்துள்ளார்.

    ஆனால், அதனை வாங்கிப் பார்த்த பிரியங்கா காந்திக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பூங்கொத்தில் ஒரு பூவை கூட காணவில்லை. அது காலியாக இருந்தது. இதனைப் பார்த்த அவர் மேடையிலேயே சிரித்துவிட்டார். அவருடன் மற்றவர்களும் சேர்ந்து சிரித்தனர்.

    இதுதொடர்பாக வெளியான வீடியோவில், காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக சென்று பிரியங்கா காந்திக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். அவர்களை புன்னகையோடு வரவேற்று, அவர் திருப்பி அனுப்புகிறார். சிலர் அவருக்கு ரோஜாக்களை வழங்கினர். வேறு சிலர் அவருடன் ஒன்றாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

    அப்போது ஒருவர், பூங்கொத்து கொண்டு வந்து கொடுக்கிறார். அதனைப் பார்த்த பிரியங்கா, இதில் பூக்கள் எங்கே? என அவரிடம் கேட்கிறார். சிரித்துக்கொண்டே அவர் பின்னால் சென்று மறைகிறார். இதனை கவனித்த கட்சி தொண்டர்கள் இடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×