search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் சுய உதவி குழு"

    • தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
    • அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சிறிய சிறிய அமைப்புகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் அந்தந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொகுதி வாரியாக இறங்கியுள்ளனர்.

    பிரதான 2 தேசிய கட்சிகள் இடையே நேரடி போட்டி மட்டுமின்றி அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மட்டுமின்றி மாநிலத்தின் முன்னணி நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    தற்போது கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அனுப்பி சிறிய சிறிய அமைப்புகள், இயக்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் நோக்கில் குறிப்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

    அப்போது குடியிருப்போர் நலசங்க அமைப்புகளிடம் இருந்து வரும் கோரிக்கைகளை கேட்கும் வேட்பாளர்கள், வெற்றிபெற்றதும் உடனே கோரிக்கையை நிறைவேற் றித் தருவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

    இதேபோல் அரசு ஊழியர்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள், மாணவர்-இளைஞர் அமைப்புகள் உள்ளிட்டோரையும் சந்தித்து வருகின்றனர்.

    முதல்கட்டமாக இந்நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்ததாக சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,504 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு விழா நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான் ஒவ்வொரு முறையும் ஈரோடு வரும்போது எல்லாம் எனது தாய் வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்னை உங்களின் மகனாக, சகோதரனாக, பேரனாக இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இது மட்டும் இன்றி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் இது. ஈரோடு மண் திராவிட இயக்கத்தின் தொட்டில் ஆகும். பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். ஏனென்றால் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை தான் நான் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். நான் மட்டும் இன்றி எனது தந்தையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அவர்களின் தயாரிப்பு அவ்வளவு தரமாக இருக்கும். திராவிட அரசின் பிராண்ட் அம்பாசிஸ்டராக மகளிர் சுய குழுக்கள் உள்ளனர்.

    2016-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக செலுத்துகிறோம். ஆனால் 2.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திருப்பி வழங்குகிறது. 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தருகிறது. இத்தகைய பொருளாதார சூழலில் தான் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் குழு பங்களிப்பு மிகப்பெரும் உதவியாக உள்ளது. காலை உணவு திட்டம், சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களில் மகளிர் குழு பங்களிப்பு பேருதவியாக உள்ளது. பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் முன்னேற்றம், நோக்கம் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.


    பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் மிச்சமாகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த அரசு பொறுப்பேற்ற பின் மகளிர் குழுவை சேர்ந்த 12 லட்சத்து 25 ஆயிரத்து 803 பேருக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 2023-24-ம் ஆண்டில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. விரைவில் இலக்கை முடிப்போம். நான் தற்போது நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேரடியாக கோவையில் இருந்து மும்பை செல்கிறேன். விளையாட்டுத்துறை மேம்பாட்டு சார்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு இன்று விருது வழங்க உள்ளனர். அதற்காக செல்கிறேன். உங்கள் அனைவர் ஆசீர்வாதத்துடன் செல்கிறேன் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டு முதல் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தும் பொருட்டு காலை உணவு தயாரிக்க கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி, அளவிலான முதன்மை குழு மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பின்வரும் நிபந்தனைகள் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அதே ஊராட்சியில், பேரூராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

    மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே தொடக்கப் பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை அப்பள்ளியில் தொடக்கப் படிப்பு முடிந்து வேறு பள்ளிக்கு சென்று விட்டால் அச்சுய உதவிக்குழு உறுப்பினர் காலை உணவு தயாரிப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு தகுதியான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார்.

    மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்த பட்சம் 10 -ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். உணவு சமைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். அதனை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சமையல் செய்வதற்கு அனுபவம் தேவை என்பது இதில் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக ஆர்வம் மட்டுமே இருந்தால் போதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் நிபந்தனையில் வயது வரம்பும் இடம்பெறவில்லை. இதனால் இப்பணியில் சேர மகளிர் சுய உதவி குழுவினர் மத்தியில் கடும் போட்டி ஏற்படும் என தெரிகிறது. 

    • மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • பயன்பாட்டை ஒழித்து மீண்டும் மஞ்சபை பயன்பா ட்டிற்கு கொண்டு வருதல் குறித்து ஆலோசிக்க ப்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சும் கணேசன் தலைமையில், செயல் அலுவலர் ஆனந்தன் முன்னிலையில் வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடன் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    திருவெண்ணைநல்லூர் கடைவீதியில் உள்ள கடைகள் மற்றும் பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்தல் குறித்து மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல், மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் கடைவீதியில் உள்ள அனைத்து கடை களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வைத்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தல். மேலும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை ஒழித்து மீண்டும் மஞ்சபை பயன்பா ட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க ப்பட்டது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரூராட்சி சார்பில் மஞ்ச ப்பை வழங்கப்பட்டது. வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவின் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இளநிலை உதவியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்

    • அமைச்சர் காந்தி வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி, 17 பயனாளிகள் மற்றும் 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 9 ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் உள்ளாட்சிக்கு முக்கியத்துவம் அளித்து மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகின்றார். மேலும் உள்ளாட்சிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டுமென அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

    உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் திட்டப்பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். பணிகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை தன்னிடம் தெரிவிக்கு மாறும் பின்னர் மாவட்ட கலெக்டரிடம் தெரியப்படுத்தி அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

    முதலமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கிட வேண்டும். அதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பை பையினை பயன்படுத்திட அறிவுருத்திட வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியாக திகழ வேண்டும். மக்களுக்கான திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் தரத்தில் எந்த ஒரு சமரசமும் இருக்கக் கூடாது. தரமானதாக இருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்களுக்கு பதவி கிடைத்திருக்கிறது என எண்ண வேண்டாம்.

    மக்கள் உங்களுக்கெல்லாம் ஒரு பொறுப்பினை வழங்கியுள்ளார்கள் என எண்ணி அதனை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு அரசின் திட்டப்பணிகளை நிறைவேற்றி, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

    முதலமைச்சர் மக்க ளுக்கு என்னவெல்லாம் செய்ய நினைக்கின்றாரோ அதனை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • மகளிர் தின விழா திருத்துறைப்பூண்டி ரயிலடி பள்ளிவாசல் தெருவில் கொண்டாடப்பட்டது.
    • விழாவில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரயிலடி பள்ளிவாசல் தெருவில் உள்ள ஸ்ரீ பாலநாகம்மாள் மகளிர் சுய உதவி குழு சார்பில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் அப்பகுதியில் வசிக்கும் மைக்கேல் ராஜ், ரம்யா குடும்பத்திற்கு குழுவின் உறுப்பினர் பிரதிநிதி ஜான்சிராணி, தேன்மொழி ஆகியோரின் தலைமையில் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    • சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, வங்கி கடனும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
    • பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன், நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அதே நேரத்தில் தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அந்தந்த மாவட்ட சுய உதவிகளுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டது.

    அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் திருச்சி நிகழ்ச்சியை அகன்ற திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

    பின்னர் திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கிய பின்னர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

    இதில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., தலைமை கொறடா கோவி செழியன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமை தாங்கி சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    தஞ்சை மாவட்டத்தில் 491 சுய உதவி குழுக்களுக்கு ரூ.21.99 கோடி கடன் உதவி, 280 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.120.96 கோடி மதிப்பிலான வங்கி கடனும் ஆக கூடுதல் ரூ.142.95 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் 771 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திர சேகரன், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது.

    அவினாசி :

    கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழாவையொட்டி அரசு பள்ளியில் படிக்கும் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற பிரிவை சார்ந்த பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் கருத்தரங்கில் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மேலாளர் கலந்து கொண்டு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57 லட்சம் அளவில் கடன் வழங்கப்பட்டது.

    மேலும் கனரா வங்கியின் மூலம் கரவலூர் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்திற்கு ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். 

    • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார்.
    • தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது மற்றும் தொழில் பயிற்சி வழங்குவது சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு முன்னிலை வகித்தார்.

    தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது பற்றியும் தொழில் பயிற்சி வழங்குவது பற்றியும் பேசினார்.

    மேலும் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் மகளிர் சுய உதவி குழு மூலம் தொழில் தொடங்கி மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்துவது பற்றியும் பயிற்சி வழங்கினார்.

    மேலும் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்க்கவும் மஞ்சள் பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசுரமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் 18 மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், மாரியம்மாள், சீதாலெட்சுமி மற்றும் மகளிர் சமுதாய வழ பயிற்றுனர்கள் உமா மகேஸ்வரி, சந்திரலேகா, சுபா ராஜேஸ்வரி, மேரி ஆனந்த பாஸ்கலின், விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் குருமலை மற்றும் குழிபட்டி செட்டில் மென்டில் வாழும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006 ன் படி தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டது.

    மேலும், 102 நபர்களுக்கு ரூ .71.26 லட்சம் மதிப்பீட்டில் தொழில் முதலீட்டுக்கான அரசு மானிய விடுவிப்பு உத்தரவு ஆணைகள் மற்றும் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

    வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிகாலத்தில் தர்மபுரியில் தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன.

    மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் , மலைவாழ் மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு குறைந்தது 8 ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆகையால், மலைவாழ் மக்கள் கண்டிப்பாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். இதுவரை பொதுத்தேர்தலில் மட்டும் வாக்களித்து வந்தீர்கள். இப்பொழுது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களிலும் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மலைவாழ் மக்கள் அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது .

    அந்த வகையில் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தொழில் தொடங்க தாட்கோ மூலம் மானியம் வழங்கப் படுகிறது. தாட்கோ மூலம் 2022-2023 நிதியாண்டில் கறவை மாடு வாங்குதல், வாகனம் வாங்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட தொழில் தொடங்கும் நடவடிக்கைகளுக்கு வங்கி மூலம் கடனும் , தாட்கோ மூலம் மானியமும் வழங்கப்படுகிறது .

    பொதுமக்கள் அடிப்படை தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. செட்டில் மென்ட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவைகள் குறித்து கேட்டறிந்து பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்றைய தினம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 26 நபர்களுக்கு ரூ .38.43 லட்சம் மதிப்பீட்டில் மானியமும் , வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு இளைஞர்களுக்கான ரூ .18.85 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 50 நபர்களுக்கு ரூ 11.50 லட்சம் மானியமும், நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ .0.91 லட்சம் மானியமும் என மொத்தம் 102 நபர்களுக்கு தாட்கோ மூலம் ரூ .71.26 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    வருவாய்த்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும் மற்றும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணமும் என மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார் .

    இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ரவிச்சந்திரன் , தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஷ்வந்த் கண்னண் . வட்டாட்சியர் கணேசன் ,ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் கனிமொழி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் , மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ×