என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ் வாகனம்"
- மேலும் ஒருவர் தலைமறைவு
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது 24).
இவர் கருங்கல் பஸ் நிலையம் அருகே உள்ள வேன் ஸ்டாண்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அஸ்வின் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது போலீஸ் வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அஸ்வினை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றது.
இந்த கும்பல் மீது அஸ்வினுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அஸ்வின் போலீஸ் வாகனத்தையும் அதிலிருந்த கும்பலையும் செல்போனில் படம்பிடித்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் தப்பி சென்று விட்டது. நடந்த சம்பவம் குறித்து அஸ்வின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அஸ்வின் செல்போனில் பதிவு செய்திருந்த அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அஸ்வினிடம் பணம் பறித்த கும்பல் பயன்படுத்தியது குலசேகரம் போலீஸ் நிலைய வாகனம் என்பது தெரிய வந்தது. குலசேகரம் போலீஸ் நிலையத்தில் உள்ள வாகனத்தை பழுது நீக்குவதற்காக ஒர்க் ஷாப் ஒன்றில் விட்டு இருந்தனர்.
வேலை முடிந்த பிறகு அந்த வாகனத்தை அங்கு நிறுத்தி இருந்தனர். அந்த வாகனத்தை சிலர் எடுத்து செல்வது போன்ற காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் போலீஸ் வாகனத்தை எடுத்துச் சென்றது காஞ்சிரக்கோடு பகுதியைச் சேர்ந்த போஸ்கோ டைசிங் (38), ரூபன் (38), விஷ்ணு (27), கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் (45)என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போஸ்கோ டைசிங், ரூபன், விஷ்ணு ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனத்தை அந்த பகுதியில் இருந்து எடுத்து சென்று கருங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றதாகவும் திரும்பி வரும் வழியில் அஸ்வினிடம் பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள ஹிட்லரை தேடி வருகி றார்கள். போலீஸ் வாகனத்தில் சென்று வாலிபரி டம் பணம் பறித்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- கைதிகளை அழைத்து செல்லும் போலீஸ் வாகனத்தின் சீட் சேதமடைந்தும், வாகனத்தின் உள்ளே உள்ள நடைபாதையில் பெரிய ஓட்டையும் உள்ளது.
- ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
காரைக்கால் சிறையில் இருந்த தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளின் வழக்குகள் காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனால், கைதிகளை அவ்வப்போது ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் புதுவை சிறையில் இருந்து காரைக்கால் நீதிமன்றத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம்.
கைதிகளை அழைத்து செல்லும் போலீஸ் வாகனத்தின் சீட் சேதமடைந்தும், வாகனத்தின் உள்ளே உள்ள நடைபாதையில் பெரிய ஓட்டையும் உள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இது குறித்து போலீசாரிடம் கேட்டதற்கு, கைதிகளை ஏற்றி செல்லும் பல வாகனங்களின் நிலை இதுதான். இது பற்றி காவல் வாகன அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் முடிந்தால் இருக்கும் வாகனத்தில் எஸ்கார்ட் பணிக்கு சென்று வாருங்கள் இல்லை என்றால் செல்ல வேண்டாம் என கூறி வருவதாக வேதனை தெரிவித்தனர்.
போலீஸ் துறையை நவீனப்படுத்த பல கோடி ஒதுக்கீடு, 1000 போலீசார் நியமனம் என அடிக்கடி ஆட்சியாளர் கூறி வருகிறார்கள். ஆனால் அடித்தளம் பலமாக இல்லை என்பதை சுட்டி காட்டியும் சீரமைப்பதில்லை என சமூக வலைதளத்தில் மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- அதிகாலை அவிநாசி பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றது.
- போலீஸ் வாகனத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசாரம் படுகாயம் அடைந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்வாளன் மாயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கடலூரில் இருந்து இந்த பாதுகாப்பு பணிக்காக கோவை நோக்கி நேற்று மாலை போலீஸ் வாகனத்தில் சுமார் 16 போலீசார் குழு உடன் சென்றனர். போலீஸ் வாகனத்தை மோகன் (வயது 27) என்பவர் ஓட்டி சென்றார்.
இன்று அதிகாலை அவிநாசி பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனம் முன்பகுதி பலத்த சேதமானது. போலீஸ் வாகனத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசாரம் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அவிநாசி போலீஸ் டிஎஸ்பி எஸ் பி மற்றும் போலீஸார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த போலீசர்களை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்