search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கல்வி"

    • பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும்
    • பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

    நேற்று (பிப் 18) புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 44 லட்சம் செலவில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா சென்றிருந்தார்.

    அன்று பள்ளியின் ஆண்டு விழாவும் நடைபெற்றதால், தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய எம்.எம். அப்துல்லா, "சிறுபான்மைச் சமூகத்தில் இருந்தும் மீனவ சமூகத்தில் இருந்தும் பெருவாரியான குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.. எனவே அதை மனதில் வைத்து "பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும் என்று கூறி படித்து நீங்கள் எல்லாம் பெரும் பெரும் பொறுப்புகளுக்கு வர வேண்டும்" என பேசினார்

    பின்பு தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 15 மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கினார். பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

    பரிசு பொருட்களை வழங்கிய பிறகு மீண்டும் மாணவர்களிடம் பேசிய அப்துல்லா, "சற்று முன்னர்தான் உங்களிடம் படிப்பு ஒன்றுதான் பெண்ணடிமைத் தனத்தில் இருந்து உங்களை விடுதலை செய்யும்.. அடுப்படி மறந்து நீங்கள் எல்லாம் பெரிய பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் எனப் பேசினேன்.. ஆனால் என் கையாலேயே பரிசு பொருட்களாக சட்டி பானைகளை உங்களுக்கு வழங்க வைத்து விட்டார்கள்.

    அப்போதே மாட்டேன் என்று மறுத்தால் மேடை நாகரீகமாக இருக்காது.. எனவே அந்தப் பரிசுகளைக் குடுத்து நானும் அவர்களின் தப்புக்கு துணை போனேன்! அதற்கு பிராயச் சித்தமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாகத் தருகிறேன்.. வந்து பெற்றுக் கொள்ளுங்கள்" என அறிவித்தேன். பெற்றுக் கொண்ட அந்தக் குழந்தைகளும் நானும் மகிழ்வோடு விழா முடிந்து திரும்பினோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • சுமார் 20 வருட காலத்திற்கு பிறகு தலிபான், ஆட்சியை கைப்பற்றியது
    • பெண்ணிய சிந்தனையாளர்களின் எதிர்ப்பை தலிபான் புறக்கணித்தது

    ஆப்கானிஸ்தானில் 1996 முதல் தலிபான் அமைப்பினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

    ஆனால், 2001ல் அமெரிக்க ராணுவம் அவர்களை ஆட்சியிலிருந்து தூக்கியடித்ததும், அவர்கள் பலவீனமடைந்திருந்தனர்.

    கடந்த 2021ல் அமெரிக்க படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறின. தொடர்ந்து தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

    சுமார் 20 வருடகாலம் கடந்து ஆட்சியை கைப்பற்றிய தலிபான் அந்நாட்டு மக்களுக்கு; குறிப்பாக பெண்களுக்கு, பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    தலிபானின் புதிய சட்டங்களின்படி பெண் குழந்தைகள் கல்வி கற்பது ஆறாம் வகுப்புடன் நிறுத்தப்படும். இதற்கு பல உலக நாடுகளும் பெண்ணிய சிந்தனையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் அவற்றை ஆப்கானிஸ்தான் புறக்கணித்தது.

    இந்நிலையில், பதின் வயதுகளில் 6-ஆம் வகுப்பை முடிக்கவுள்ள பல சிறுமிகள் இத்துடன் தங்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு முடிந்து போவதை எண்ணி அழுகின்றனர்.

    கடந்த வாரம், இது குறித்து ஐ.நா. சபையின் சிறப்பு தூதர் ரோசா ஒடுன்பயேவா (Roza Otunbayeva), "ஒரு தலைமுறையை சேர்ந்த பெண்களின் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒவ்வொரு நாள் கடக்கும் நிலையில் பறிக்கப்படுகிறது" என கவலை தெரிவித்தார்.

    ஏழாம் வகுப்பிற்கு செல்வோம் என நம்பியிருந்த பல மாணவிகள் தங்கள் கல்வியே முடிவடைவதால், எதிர்காலம் குறித்த அச்சத்திலும், தாங்கள் சாதிக்க நினைத்தவற்றை இனி அடைய முடியாத துக்கத்திலும் அழுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    • நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது.
    • புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.

    நாகர்கோவில்:

    மாவட்ட அளவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்வளர்த்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரை தாங்கி நிற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படவில்லை, இக்கல்லூரியில் படித்தவர்களுக்கு ஆளுநர் விரைவில் பட்டம் வழங்க வேண்டும்.

    இந்திய அளவில் பெண் கல்வி 28 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழகம் 78 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள்ளது. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×