search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய நிர்வாகிகள்"

    • அப்டா திட்டம் மற்றும் மேம்பாடு பொன்னம்பலம் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார்.
    • அப்டா மார்க்கெட் தலைவர் பால்ராஜ் ஏற்புரை வழங்கினார்.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் தேரே கால்புதூர் விவசாய விளைபொருள் உற்பத்தியா ளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் (அப்டா) 2023-2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று அப்டா மார்க்கெட் அலுவலக சங்க கூட்ட அரங்கத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் அப்டா சங்க கவுரவ ஆலோசகர் வர்க்கீஸ் வரவேற்று பேசினார். புதிய தலை வராக பால்ராஜ், பொதுச்செயலாளராக சுதேசன், பொருளாளராக சிவசங்கர், துணை தலை வர்களாக ராதாகிருஷ்ணன், கிருஷ்ணதங்கம், துணை செயலாளர்களாக ராஜா, கர்ணன், செயற்குழு உறுப்பி னர்களாக கோபால கிருஷ்ணன், வைகுண்ட மணி, சுந்தர்ராஜ், அய்யப் பன், செந்தில்குமார், சாகுல்ஹமீது, சண்முக வேல், மணிகண்டன், முருகன், சொர்ணம் பிள்ளை, ராஜேந்திரன், டேவிட், கணேசன், தங்கத்துரை, விஜயகுமார், பாபு, சுயம்புலிங்கம், பொன்லிங்கம் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    பதவி ஏற்ற புதிய நிர்வாகிகளுக்கு வெற்றி சான்றிதழ்களை தேர்தல் குழு தலைமை அதிகாரி வக்கீல் இளம்பரிதி, அப்டா மார்க்கெட் சட்ட ஆலோசகர் வக்கீல் பெறி ஆகியோர் வழங்கினர்.

    இவர்களுக்கு அப்டா திட்டம் மற்றும் மேம்பாடு பொன்னம்பலம் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார். அப்டா மார்க்கெட் தலைவர் பால்ராஜ் ஏற்புரை வழங்கினார்.

    தேரேகால்புதூர் பஞ்சா யத்து தலைவர் சோமு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில செயல் தலைவர் டேவிட்சன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ், தேர்தல் குழு தலைமை அதிகாரி இளம்பரிதி, அப்டா மார்க்கெட் சட்ட ஆலோசகர் வக்கீல் பெறி மற்றும் அப்டா பொதுக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள், உற்பத்தி யாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் குடும்பத்தினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் அப்டா துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட் டார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமினம் செய்துள்ளார்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் நியமிக்கப்பட்டுள் ளார். அண்ணா தொழிற் சங்க செயலாளர் வைகுண்ட மணி, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் பா லமுருகன், சிறுபான்மை யினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ரசாக், அமைப்பு சாரா ஓட்டுநர் மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சந்திரன், கலை பிரிவு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மணி கண்டன் ஆகியோர் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளராக முத்துக்குமார், அகஸ்தீஸ்வ ரம் வடக்கு ஒன்றிய செயலா ளர் ஜெஸீம், தெற்கு ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள் ளனர். பொதுக்குழு உறுப்பி னராக மகாராஜா பிள்ளை, ராஜாக்கமங்கலம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளராக சிவ கந்தன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயலாளராக சுடலையாண்டி, தென்தா மரைகுளம் பேரூராட்சி செயலாளராக டானியல், மாநில மகளிர் அணி துணை செயலாளராக ராணி, மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் தாணு பிள்ளை, மாநில இலக்கிய அணி இணை செயலாளராக சந்துரு என்ற ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். நாகர்கோவில் மாநக ராட்சி வடக்கு பகுதி செய லாளராக ஸ்ரீலிஜா நிய மிக்கப்பட்டுள்ளார். வடக்கு பகுதியாளராக நியமிக்கப் பட்டுள்ள ஸ்ரீலிஜா தமிழ கத்திலேயே அ.தி.மு.க.வில் முதல் பகுதி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    • விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழி–லதிபர் பி.டி.ஆர்.டேனியல் கலந்து கொண்டார்.

    மதுரை

    தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ. காலனி அலுவலகத்தில் புதிய நிர் வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் அங்கீகார சான்றிதழ், சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநில தலை–வர் டாக்டர் எம்.பாரீஸ், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் கா.கவியரசு, மாநில ஒருங்கி–ணைப்பாளர் டாக்டர் பிச்சைவேல், மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர்.செல்வ–குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழி–லதிபர் பி.டி.ஆர்.டேனியல் தங்கராஜ், திரைப்பட நடிகர் டாக்டர் எம்.செல்வம், சேது திரைப்படத்தின் தயாரிப்பா–ளர் கந்தசாமி, சேது நல்ல–மணி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முருகன் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநிலச்செ–யலாளர் கீதாமுருகன், மாநில செயலாளர் சிக்கந்தர், மாநில ஆலோசகர் டாக்டர் குசலவன், மாநில மகளிரணி துணைத்தலைவி குருலட்சுமி, மாநில துணை பொதுச்செயலாளர் ஷர்மி–ளாபானு, மாநில துணைச்செயலாளர் ஜெக–நாதன் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, ராமன், முருகேச–பாண்டி, பொன்.முருகன், விஜயா, ராஜன், சங்க–ரேஸ்வரி உள்பட ஏராளமா–னோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பா–டுகளை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் சின்ன–சாமி, பிர–காஷ், தெற்கு மாவட்ட தலைவர் சங்கர் பிரபு, செயலாளர் பவர்.ராஜேந்திரன், வடக்கு புறநகர் மாவட்ட தலைவர் திருப்பதி, செயலாளர் விஜயராஜா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
    • துணை அமைப்பாளர்களாக பிரிட்டோ ஷாம், விஜய், பொன் ஜான்சன், பிரபு, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமைப்பாளராக வக்கீல் அகஸ்தீசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக பிரிட்டோ ஷாம், விஜய், பொன் ஜான்சன், பிரபு, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கு மாவட்ட அமைப்பாளராக ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளராக ஜெயச்சந்திர பூபதி, ஆல்வின் பினோ, தோலடி விஜி, பைஜு, ஜான் ஜெபார்சன், லிஜிஷ் ஜீவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில செயலாளர் அடையாறு பாஸ்கர் வெளியிட்டார்.
    • 4 சட்டமன்ற தொகுதியிலும் தலா 100 கொடிக்கம்பங்கள் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும் என்று கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ஜக்காரியா தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் ஏராளமானோர் போட்டியிட்டனர்.

    தற்போது முதற்கட்டமாக மாவட்டத்தில் நகரம் மற்றும் வட்டார அளவிலான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு ள்ளனர்.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளரும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளருமான அடையாறு பாஸ்கர் ராமநாதபுரத்தில் நகர் மற்றும் வட்டார தலை வர்களின் புதிய பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி ராமநாதபுரம் நகர் தலைவராக கோபி, ராமேசுவரம் நகர் தலைவராக ராஜீவ் காந்தி, பரமக்குடி நகர் தலைவராக அஹமத் கபீர், கீழக்கரை நகர் தலைவராக அஜ்மல் கான் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    வட்டார அளவிலான தலைவர்களாக திருவா டானை வடக்கு தட்சணா மூர்த்தி, திருவாடானை தெற்கு கணேசன், ஆர்.எஸ்.மங்கலம் வடக்கு மனோகரன், ஆர்.எஸ்.மங்க லம் தெற்கு சுப்பிரமணியன், ராமநாதபுரம் சேகர், மண்ட பம் மேற்கு அன்வர்அலி.

    மண்டபம் கிழக்கு செல்லசாமி, திருப்புல்லாணி கிழக்கு சேதுபாண்டியன், திருப்புல்லாணி மேற்கு கந்தசாமி, முதுகுளத்தூர் கிழக்கு ராமர், முதுகுளத்தூர் மேற்கு புவனேஸ்வரன், கடலாடி கிழக்கு தனசேகரன், கடலாடி மேற்கு அப்துல் சத்தார், கடலாடி வடக்கு சுரேஷ் காந்தி, கமுதி தெற்கு கோவிந்தன், கமுதி வடக்கு ஆதி, பரமக்குடி மேற்கு சுப்பிரமணியன், பரமக்குடி கிழக்கு வேலுசாமி, நயினார் கோவில் கார்மேகம், போக லூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அடையாறு பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியிலும் தலா 100 கொடிக்கம்பங்கள் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி ராமநாதபுரம் தொகுதிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் செல்லதுரை அப்துல்லா, திருவாடானை தொகுதிக்கு கருமாணிக்கம் எம்.எல்.ஏ, முதுகுளத்தூர் தொகுதிக்கு மாவீரன் வேலுச்சாமி, பரமக்குடி தொகுதிக்கு செந்தாமரை கண்ணன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பணி ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஜனவரி 15-ந்தேதிக்குள் குறிப்பிட்ட அளவில் கொடி கம்பங்கள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடார் மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
    • தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.

    மதுரை

    நாடார் மகாஜன சங்கம், நா.ம.ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை மற்றும் நா.ம.ச. காமராஜ் தொழில்நுட்ப கல்லூரி பரிபாலன சபை ஆகிய சங்கங்களுக்கு செயற்குழு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மதுரை நாகமலை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் நடந்தது.

    இதில் நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டு மரங்களில் பல்வேறு வகை இருந்தாலும் அதில் பனைமரம் மட்டுமே மிகப்பெரிய புயல், மழையை யும் தாங்கி உறுதிப்பிடிப்பு டன் நிலைத்து நிற்கும் தன்மை உடையது. அதுபோலவே நாடார் மகாஜன சங்கமானது தனிச்சிறப்புடன், தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.

    நிகழ்ச்சிக்கு மதுரை வேளாண் உணவு வர்த்தக மைய தலைவர்

    மற்றும் மேலாண்மை இயக்குநர் ரத்தினவேலு, நீதிபதி வணங்காமுடி, சிவகாசி காளீஸ்வரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.பி.செல்வராஜன், தூத்துக்குடி டைமண்ட் சீ புட்ஸ் நிர் வாக இயக்குநர் பால்பாண்டி, மதுரை

    கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நிறுவனர் தனுஷ்கரன் முன்னிலை வகித்தனர்.

    நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், தலைவர் வி.எஸ்.பி.குருசாமி, பொரு ளாளர் ஏ.சி.சி.பாண்டியன், செயலாளர்(மேன்சன்கள்) மாரிமுத்து, செயலாளர் (அச்சகம்) கிப்ட்சன், செயலாளர் (பள்ளிகள்)ஐசக் முத்துராஜ், மண்டல செயலாளர்கள் சேகர் பாண்டியன், சுப்பிரம ணியன், கனகரத்தினம், ஈஸ்வரன், பிரபாகரன், முருகேசபாண்டியன் மற்றும் பலர் பேசினர்.

    இதில் நாடார் வெள்ளைச்சாமி கல்லூ ரியின் தலைவர் ஏ.எம்.எஸ். ஜி.அசோகன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர் பொன்னு சாமி, செயலாளர் சுந்தர், பொருளாளர் நல்லதம்பி, இணைசெயலாளர் ஆனந்த குமார், காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி பரி பாலன சபையின் தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் வனராஜன், செயலாளர் சுரேந்திரகுமார், பொருளா ளர் வஞ்சிக்கோ, இணைச் செயலாளர் விவேகானந்தன் மற்றும் மாவட்ட, மாநக ராட்சி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பங்கேற்பு
    • புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் வணிகர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும்

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் நகர வணிகர் சங்க புதிய நிர் வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

    பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு விழா தக்கலையில் உள்ள லலிதா மகால் திரு மண மண்டபத்தில் நடந் தது. குமரி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அலெக்சாண்டர், இணை செயலாளர் விஜயன். மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் விஜயகோபால் வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து புதிய நிர்வா கிகள் பதவியேற்றனர். தலைவராக ஜெகபர் சாதிக் பொதுச்செயலாளராக விஜயகோபால், பொரு ளாளராக தாணுமூர்த்தி, துணைத்தலைவர்களாக சண்முகம், சுரேஷ்குமார், செயலாளர்களாக மோசஸ் ஆனந்த், எபனேசர், கவுரவ தலைவராக ஆனந்தம் சி.குமார் செயற்குழு உறுப் பினர்களாக ஜெயகுமார், பத்மதாஸ், ஹமாம், ஸ்ரீராம், ஹரி பாலாஜி, வர்க்கீஸ், இளங்கோ, ஜலால், சங்கர மூர்த்தி ஜூட்ஸ் பெர்லின், சேத்திரபாலன், ராஜூ, செய்தி தொடர்பாளராக ஜோஸ்வா ஆகியோர்பதவி யேற்றனர்.

    விழாவின் சிறப்பு விருந் தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் வணிகர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும். வியா பாரிகள் பல கஷ்டங்கள், நஷ்டங்களை சந்தித்து வியா பாரம் செய்கிறார்கள் வணி கவரித்துறை, உணவு பாது காப்பு துறை போன்றவற் றால் ஏற்படும் பிரச்சினை களை சட்டரீதியாக நாம் சந்திக்க வேண்டும்.

    இதுபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மை முடக் கும் விதமாக முதலில் வியா பாரிகளிடம் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுத்தார்கள். அதை விபாபாரிகள் ஓட்டல்கள், டீக்கடை போன்றவற்றிற்கு வியாபாரம் செய்தனர்.

    இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விற்கிறார்கள். இதனால் நம் வியாபாரிகள் பாதிக்கப்படு கிறார்கள் இதற்கு முடிவுகட் டுவதற்காக இளம் தொழில் முனைவோர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. நம் குறைகளை அரசிடம் முறை யிடுவோம் அதற்கு செவி சாய்க்கவில்லை என்றால் போராடுவோம். நமக்குள் ஒருவருக்கு பிரச்சினை என் றால் அனைவரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.

    விழாவில் நெல்லை மாவட்ட தலைவர் சின்ன துரை, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் காமராஜ், மண்டல தலைவர் வைகுண்டராஜன், பத்ம நாபபுரம் நகராட்சி தலை வர் அருள் சோபன், ஆணை யர் லெனின், தேர்தல் அதி காரி முருகேசன், சமூகசேவ கர் தக்கலை சந்திரன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

    முடிவில் சங்க தலைவர் ஜெகபர் சாதிக் நன்றி கூறினார். இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • தளி- வே. உதயகுமார், சூளேஸ்வரன்பட்டி- எம். எஸ் ஆறுச்சாமி, ஜமீன் ஊத்துக்குளி- அ. அகத்தூர்சாமி,
    • சென்னிமலை கிழக்கு- சி. பாபு , சென்னிமலை மேற்கு- எஸ். ஆர். எஸ். செல்வம், காங்கேயம் வடக்கு- சி. கருணை பிரகாஷ்,

    தாராபுரம்:

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு:-

    திருப்பூர் தெற்கு மாவட்டம்

    அவைத்தலைவர்: இரா. ஜெயராமகிருஷ்ணன் ,செயலாளர்- இல. பத்மநாபன், துணை செயலாளர் (பொது) முத்துவேல், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்)- சக்திவேல், துணை செயலாளர் (மகளிர்)- பிரபாவதி, பொருளாளர் -முபாரக்அலி.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள்

    கே. எஸ். தனசேகர், சி. சியாம் பிரசாத், வி. மகாலிங்கம்,

    பொதுக்குழு உறுப்பினர்கள்

    எம். ஆர். பாபு, ஆ. இராமலிங்கம், யு. என்.பி. குமார், கே. எஸ். கருணாகரன், ஆர். சிவக்குமார், எம். கே. கார்த்திகேயன், சா. மெய்யப்பன், பருவதவர்த்தினி.

    ஒன்றிய செயலாளர்கள்

    சென்னிமலை கிழக்கு- சி. பாபு , சென்னிமலை மேற்கு- எஸ். ஆர். எஸ். செல்வம், காங்கேயம் வடக்கு- சி. கருணை பிரகாஷ், காங்கேயம் தெற்கு- கே. கே. சிவானந்தன், வெள்ளக்கோவில்- சந்திரசேகரன், குண்டடம் கிழக்கு-சி. செந்தில்குமார், குண்டடம் மேற்கு-எஸ். சந்திரசேகரன், தாராபுரம்- செ. வே. செந்தில்குமார், குடிமங்கலம் மேற்கு- எம். எஸ். முரளி, மடத்துக்குளம் கிழக்கு- எம்.எ. சாகுல் அமீது, மடத்துக்குளம் மேற்கு- கே. ஈஸ்வரசாமி, உடுமலை மேற்கு-தி. செழியன், உடுமலை மத்தியம்- க. செந்தில்குமார், பொள்ளாச்சி வடக்கு- எஸ். என். காணியப்பன், பொள்ளாச்சி தெற்கு- கதிர்வேல், பொள்ளாச்சி மத்தியம்- என். கமலக்கண்ணன்,

    நகரச்செயலாளர்கள்

    காங்கேயம்- நா. சேமலையப்பன், வெள்ளக்கோவில்- எஸ். முருகானந்தம், தாராபுரம்- எஸ். முருகானந்தம், உடுமலை - செ. வேலுச்சாமி.

    பேரூர் செயலாளர்கள்

    முத்தூர்- கு. குப்புசாமி, ருத்ராவதி- எஸ். அன்பரசு, கன்னிவாடி- கோ. சுரேஷ், மூலனூர்- தண்டபாணி, கொளத்துப்பாளையம்- கே. கே. துரைசாமி, சின்னக்காம்பாளையம்- ரா. பன்னீர்செல்வம், மடத்துக்குளம்- என். பாலகிருஷ்ணன், குமரலிங்கம்- எம். ஆச்சிமுத்து, சங்கராமநல்லூர்- ஆர். எ. சாதிக்அலி, தளி- வே. உதயகுமார், சூளேஸ்வரன்பட்டி- எம். எஸ் ஆறுச்சாமி, ஜமீன் ஊத்துக்குளி- அ. அகத்தூர்சாமி, சமத்தூர்- கே. காளிமுத்து.

    • ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க 26-வது மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்
    • தமிழ்நாட்டின் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட இந்திரா கணேசன் கல்வி குழும செயலாளர் ராஜசேகரை கெளரவித்தனர்

    திருச்சி:

    ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க 26-வது மகாசபையில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சி திருவானைக்கோவில் தலைமை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சி.செந்தில்குமார் இறைவணக்கம் பாடினார். விழாவிற்கு ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். டி.ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.

    நிர்வாகிகள் பெரியசாமி, சுப்பையாபிள்ளை, தேவராஜன், ராஜசேகரன், லோகநாதன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மங்கள் அண்டு மங்கள் உரிமையாளர் பி.மூக்கப்பிள்ளை புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக சிவானி கல்லூரி சேர்மன் டாக்டர் பி.செல்வராஜ், உபதலைவராக டி.சாத்தனூர் பி.புரவி, செயலாளராக ஆலம்பட்டி என்ஜினீயர் சதீஸ்வரன், பொருளாளராக புத்தனாம்பட்டி செந்தில்குமார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

    அவர்களிடம் பொறுப்புகளை மூக்கப்பிள்ளை ஒப்படைத்து தலைவருக்கு செங்கோல் கொடுத்து கௌரவித்தார்.

    தமிழ்நாட்டின் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட இந்திரா கணேசன் கல்வி குழும செயலாளர் ராஜசேகரை கெளரவித்தனர். புதிதாக தலைவராக பதவியேற்றக் கொண்ட சிவானி கல்லூரி சேர்மன் டாக்டர் பி.செல்வராஜ் ஏற்புரை நிகழ்த்தினார்.

    விழாவில் இலங்கை புஷ்பநாதன், மூர்த்தி, நாமக்கல் செல்வராஜ், பெங்களூர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சண்முகசுந்தரம், முசிறி ரமேஷ்பாபு, வி.சிதம்பரம், செந்தில் (எ) சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வாழ்த்துரை வழங்கினார்கள்.

    முடிவில் துணைத்தலைவர் புரவி நன்றி கூறினார்.

    • புதிதாக தேர்வான 2022-2023 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி சங்கத் தலைவராக கலியமூர்த்தி, செயலாளராக தில்லைநாயகம், பொருளாளராக துரைராஜ், சங்க ஆலோசகர்களாக ராஜேந்திரன், ஜெயபிரகாசம், பாலசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.
    • டாக்டர் சீனிவாசன் கௌரவ விருந்தினராக பங்கேற்கிறார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று மாலை துறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு தலைமை விருந்தினராக ஆனந்த ஜோதி ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கௌரவ விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3000-ன் பப்ளிக் இமேஜ் சேர்மன் டாக்டர்.சீனிவாசன் கலந்து கொள்கிறார்.

    சிறப்பு விருந்தினராக ராஜா கோவிந்தசாமி கலந்து பங்கேற்கிறார். விழாவில் புதிதாக தேர்வான 2022-2023 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி சங்கத் தலைவராக கலியமூர்த்தி, செயலாளராக தில்லைநாயகம், பொருளாளராக துரைராஜ், சங்க ஆலோசகர்களாக ராஜேந்திரன், ஜெயபிரகாசம், பாலசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகிகள் மகேஸ்வரன், அசோக் பெரியசாமி, மணிகண்டன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் ஏழை, எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    ×