search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரேகால்புதூர் அப்டா மார்க்கெட் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
    X

    தேரேகால்புதூர் அப்டா மார்க்கெட் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

    • அப்டா திட்டம் மற்றும் மேம்பாடு பொன்னம்பலம் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார்.
    • அப்டா மார்க்கெட் தலைவர் பால்ராஜ் ஏற்புரை வழங்கினார்.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் தேரே கால்புதூர் விவசாய விளைபொருள் உற்பத்தியா ளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் (அப்டா) 2023-2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று அப்டா மார்க்கெட் அலுவலக சங்க கூட்ட அரங்கத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் அப்டா சங்க கவுரவ ஆலோசகர் வர்க்கீஸ் வரவேற்று பேசினார். புதிய தலை வராக பால்ராஜ், பொதுச்செயலாளராக சுதேசன், பொருளாளராக சிவசங்கர், துணை தலை வர்களாக ராதாகிருஷ்ணன், கிருஷ்ணதங்கம், துணை செயலாளர்களாக ராஜா, கர்ணன், செயற்குழு உறுப்பி னர்களாக கோபால கிருஷ்ணன், வைகுண்ட மணி, சுந்தர்ராஜ், அய்யப் பன், செந்தில்குமார், சாகுல்ஹமீது, சண்முக வேல், மணிகண்டன், முருகன், சொர்ணம் பிள்ளை, ராஜேந்திரன், டேவிட், கணேசன், தங்கத்துரை, விஜயகுமார், பாபு, சுயம்புலிங்கம், பொன்லிங்கம் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    பதவி ஏற்ற புதிய நிர்வாகிகளுக்கு வெற்றி சான்றிதழ்களை தேர்தல் குழு தலைமை அதிகாரி வக்கீல் இளம்பரிதி, அப்டா மார்க்கெட் சட்ட ஆலோசகர் வக்கீல் பெறி ஆகியோர் வழங்கினர்.

    இவர்களுக்கு அப்டா திட்டம் மற்றும் மேம்பாடு பொன்னம்பலம் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார். அப்டா மார்க்கெட் தலைவர் பால்ராஜ் ஏற்புரை வழங்கினார்.

    தேரேகால்புதூர் பஞ்சா யத்து தலைவர் சோமு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில செயல் தலைவர் டேவிட்சன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ், தேர்தல் குழு தலைமை அதிகாரி இளம்பரிதி, அப்டா மார்க்கெட் சட்ட ஆலோசகர் வக்கீல் பெறி மற்றும் அப்டா பொதுக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள், உற்பத்தி யாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் குடும்பத்தினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் அப்டா துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×