search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கட்சி"

    புதிய அரசியல் கட்சியை தொடங்கிய வி.ஹெச்.பி. முன்னாள் தலைவரான பிரவீன் தொகாடியா, வரும் பாராளுமன்ற தேர்தலில் அயோத்தி தொதியில் போட்டியிடுகிறார். #PravinTogadia #HinduSthanNirmanDal #Ayodhya
    புதுடெல்லி:

    வி.ஹெச்.பி. முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் பிரவீன் தொகாடியா. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீரவேண்டும் என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர்.

    இந்நிலையில், பிரவீன் தொகாடியா புதிய அரசியல் கட்சியை இன்று தலைநகர் டெல்லியில் தொடங்கினார். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தொகாடியா இந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற புதிய அரசியல் கட்சியை அறிவித்தார்.

    மேலும், வரும் பொது தேர்தலில் உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தின் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரவீன் தொகாடியா கூறுகையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியா தொகுதியில் போட்டியிட உள்ளேன். பொய்யான வாக்குறுதிகளை அளிக்கப் போவதில்லை. நம்பகத்தன்மையுடன் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். #PravinTogadia #HinduSthanNirmanDal #Ayodhya
    நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கி செயல்படுத்தி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று புதிய கட்சி தொடங்கினார்.#ActorKarthik

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் புதிய கட்சியை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ‘மக்கள் உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவித்து, அதற்கான கொடியையும் அறிமுகம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு நாடாளும் மக்கள் கட்சி செயல்படவில்லை. அந்த கட்சியை கலைத்து விட்டு தற்போது மக்கள் உரிமைகளை வென்றெடுக்க ‘மக்கள் உரிமை காக்கும் கட்சி‘ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கட்சியை விரைவில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளேன்.

    அதன் பிறகு அம்பையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தப்படும். அப்போது தமிழக மற்றும் இந்திய அரசியல் குறித்து பேசுவேன். சுதந்திர இந்தியாவில் மனித உரிமைகளை போராடி பெற வேண்டி உள்ளது. எனவே கட்சிக்கு இத்தகைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அரசியலில் சிறிது இடைவெளி ஏற்பட்டு விட்டது. இனி அரசியலைவிட்டு ஒருபோதும் போகமாட்டேன்.வருகிற தேர்தல்களில் கண்டிப்பாக போட்டியிடுவோம். தனித்து போட்டியா?, கூட்டணி அமைத்து போட்டியா? என்பது தேர்தலின் போது அறிவிக்கப்படும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும். ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு 13 பேரின் உயிர்களை இழந்து விட்டோம். இனிமேல் போராட்டத்தினால் மனித உயிர்களை இழக்க கூடாது. மக்கள் உரிமை காக்கும் கட்சி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும்.

    கஜா புயல் நிவாரண பணிகளை தமிழக அரசு முறையாக செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு முழுமையாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார். #ActorKarthik

    புதிய கட்சி தொடங்க நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. #Rajinikanth #ChandrababuNaidu

    சென்னை:

    ரஜினிகாந்த் கடந்த தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி வருகிறார். கட்சிக்கான 90 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    ரஜினி நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 2.0 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி பேசும்போது ’லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும். வந்தா நிச்சயமாக அடிக்கவேண்டும். நமது வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று’ என்று பேசிவிட்டு ‘நான் படத்தை சொன்னேன்’ என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஆனால் அவர் அரசியலை தான் குறிப்பிட்டார் என்று அனைவருக்கும் தெரியும். அவர் பதுங்கிப்பாய்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    ரஜினி சமீபகாலமாக ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினி தரப்பில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:-

    ரஜினிக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் எப்போதுமே நல்ல நட்பு இருந்து வருகிறது. என்.டி.ராமராவ் சிவபார்வதி திருமணத்திற்கு பிறகுதான் கட்சியை உடைத்து கொண்டு வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு. பிறகு கட்சியும் ஆட்சியும் சந்திரபாபு நாயுடு வசமானது.


    அப்போது ரஜினி ஐதராபாத் சென்று நாயுடுவை சந்தித்துப் பேசினார். நாயுடுவுக்கு ஆதரவாக ரஜினியிடம் இருந்து ஒரு அறிக்கையும் வந்தது. அந்த சமயத்தில் ரஜினி நடித்த பெத்தராயுடு படம் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் ரஜினியின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. அந்த நட்புதான் இன்றுவரை தொடர்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நிகழ்த்திவரும் மக்கள் நல திட்டங்களுக்கு நாடு முழுவதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    ரஜினி சந்திரபாபு நாயுடுவிடம் அடிக்கடி பேசி கட்சி தொடர்பாக ஆலோசனைகள் கேட்டுக்கொள்கிறார். முக்கியமாக கட்சியின் அடிப்படை கொள்கைகள், நோக்கங்கள், ஆட்சிக்கு வரும்போது கொண்டு வர வேண்டிய நலத்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகள் கேட்டுக்கொள்கிறார்.

    கட்சி தொடங்குவதை வெறும் கட்சி அறிவிப்பாக மட்டுமே வெளியிட ரஜினி விரும்பவில்லை. பதிலாக இந்த வி‌ஷயங்கள் அனைத்தையும் சேர்த்தே வெளியிட தயாராகிறார்.

    ரஜினியின் அரசியல் அறிவிப்பு வந்த உடனேயே அவரது கொள்கைகள் பற்றி கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்தன. கட்சி அறிவிப்பின்போது அப்படி எதுவும் வந்து விடாமல் இருக்க கவனமாக அடியெடுத்து வைக்கிறார். ரஜினி சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைகளை கேட்பது என்பது பாஜகவுக்கு தான் கோபத்தை ஏற்படுத்தும். ஆனால் ரஜினி அதைப்பற்றி கவலைப்படவில்லை

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Rajinikanth #ChandrababuNaidu 

    புதுவையில் முன்னாள் அமைச்சர் கண்ணன் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். #FormerMinister #Kannan
    புதுச்சேரி:

    புதுவை மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்பவர் முன்னாள் அமைச்சர் கண்ணன்.

    காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர், எம்.பி. என பதவிகள் வகித்தார். காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் முரண்பாடு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி அவ்வப்போது புதிய கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலை கண்ணன் எதிர்கொள்வார்.

    கடந்த 1996-ம் ஆண்டு தமிழகத்தில் மூப்பனார் காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.கா.வை தொடங்கினார். அப்போது கண்ணன் புதுவையில் த.மா.கா.வை தொடங்கி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.

    1996-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சராக இருந்தார். இதனையடுத்து தமிழகத்தில் மூப்பனார் காங்கிரசில் இணைந்து போது புதுவையிலும் கண்ணனும் காங்கிரசில் இணைந்தார்.

    தொடர்ந்து 2001-ம் ஆண்டு 2-வது முறையாக மீண்டும் காங்கிரசில் இருந்து, வெளியேறி புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

    2006-ம் ஆண்டு மீண்டும் கண்ணன் காங்கிரசில் இருந்து வெளியேறி புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், ஆட்சியை அமைக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்த கண்ணனுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது. 2015-ம் ஆண்டு வரை காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த கண்ணன் மீண்டும் காங்கிரசில் இருந்து வெளியேறினார்.

    2016-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வில் இணைந்து ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதன் பிறகு கடந்த 2 ஆண்டு காலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் கண்ணன் ஒதுங்கி இருந்தார்.

    தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை கண்ணன் வெளியிட்டுள்ளார் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான பணிகள் டெல்லியில் தேர்தல் கமி‌ஷனில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் முடிவடைந்த பிறகு கட்சியின் பெயர், கொடி ஆகியவை குறித்த முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்ணன் வெளியிட உள்ளார்.

    புதிய கட்சி தொடங்குவதற்கான காரணம் குறித்து கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநில அரசியல் சூழலில் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளேன். நான் புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன். அந்த கட்சியின் பெயர், அமைப்பு, சின்னம், எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னர் கட்சியின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிவிப்பேன்.

    சில காலம் நான் அமைதியாக இருந்தேன். இதற்கு காரணம் எதுவும் இல்லை. அமைதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டதால் அமைதியாக இருந்தேன். எந்த முடிவையும், அவசரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தான் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

    மக்களின் பிரச்சினைகள், கஷ்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை பார்த்தால் அதிகமாக உள்ளது. இதனால் விலைவாசி ஏறிக் கொண்டே செல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள் தான். எனவே எதையாவது செய்து தான் ஆகவேண்டும் என்ற நெருக்கடி நிலை உருவானது. அதனால் தான் புதிதாக கட்சி தொடங்கி உள்ளேன்.

    எங்களை பொறுத்தவரை எங்களுக்கு எந்த கட்சியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பக்கம் நாங்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேவைப்பட்டால் நான் போட்டியிடுவேன். அல்லது நல்ல வேட்பாளர் யாராவது போட்டியிட்டால் அவருக்கு ஆதுரவு கொடுப்பேன். தேர்தல் வரும் போது அதனை அறிவிப்பேன்.

    இவ்வாறு கண்ணன் கூறினார். #FormerMinister #Kannan
    முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் நாளை மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கட்சி தொடங்கும் முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #FormerMPKannan
    புதுச்சேரி:

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் புதுவை அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்ந்து வந்தார்.

    சமீப காலமாக அரசியலில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் எதிலும் தீவிரம் காட்டாமல் இருந்து வந்தார்.

    சமீபத்தில் அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் கண்ணன் மவுனம் காத்து வந்தார்.

    இந்த நிலையில் கண்ணன் நாளை மாலை தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளார். அதில், விரிவாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. அப்போது கட்சி தொடங்கும் முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த கண்ணன் மூப்பனார் தலைமையில் த.மா.கா. கட்சி உதயமானபோது அந்த கட்சிக்கு சென்றார்.

    பின்னர் 2 தடவை தனியாக கட்சி தொடங்கி நடத்தி வந்தார். ஒவ்வொரு தடவையும் கட்சியை கைவிட்டு விட்டு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்தார்.

    கடைசியாக காங்கிரஸ் கட்சியில் மேல்-சபை எம்.பி.யாக இருந்தார். பின்னர் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ராஜ்பவன் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகவும் களம் இறங்கினார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.

    இதன்பிறகு அ.தி.மு.க.விலும் அவர் எந்த கட்சி பணியிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இப்போது புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலின் போது இந்த கட்சி தேசிய கட்சிகள் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம். சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் இறங்கும் திட்டத்துடன் கட்சியை நடத்துவார் என கருதப்படுகிறது. #FormerMPKannan

    ரஜினி தனது கட்சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கிய விதிகள் அடங்கிய புத்தகம் வெளியாகி இருப்பது விரைவில் அவர் தனிக்கட்சி தொடங்க இருப்பதை உறுதிபடுத்தி உள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு வருவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார்.

    கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

    ரஜினி மக்கள் மன்றத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கடந்த சில தினங்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    இந்நிலையில் ரஜினி தனது கட்சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கிய விதிகள் அடங்கிய 36 பக்க புத்தகம் வெளியானது. ஆகஸ்டு முதல் வாரத்தில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட இந்த புத்தகம் இந்த வாரம் தான் உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    ரஜினி மக்கள் மன்ற விதிகளில் முக்கியமானவை:-

    நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். பொது மக்கள் குறிப்பாக பெண்கள், முதியோர்கள் இடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். மன்ற கொடிக்கு துணியால் செய்த கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலிமாசு குறித்த அரசின் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூம்பு வடிவக் குழாய் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துதல் கூடாது. ஒலி பெருக்கிப் பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    நிகழ்ச்சிகள் சிக்கனமாகவும் ஆடம்பரம் இன்றியும் நடத்தப்பட வேண்டும். எந்த மன்றக் கூட்டங்களிலும் சால்வைகள் மாலைகள் பூங்கொத்துகள் பரிசு பொருட்கள் பகிர்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    நிகழ்ச்சி முடிந்த உடனேயே பேனர்கள், தோரணங்கள், பிற விளம்பரப் பதாகைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகி இதனை உறுதி செய்ய வேண்டும். கூட்டம் முடிந்த பிறகு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டே ஒப்படைக்க வேண்டும்.

    தலைமையின் அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பரப்பதாகைகள் அரசின் உரிய அனுமதி பெற்றே வைக்க வேண்டும். பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் அமைத்தல் வேண்டும்.

    நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சமூக வலைதளங்களில் கவனமாக கருத்துகளை பதிவிட வேண்டும். நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது. ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணியில் திருநங்கைகளும் எவ்வித பாகுபாடின்றி சேரலாம். நிர்வாக பொறுப்புக்களையும் வகிக்கலாம். மன்ற நிர்வாகிகளை மதித்து நடக்க வேண்டும்.

    நிர்வாகிகளின் நடவடிக்கைகளில் குறை ஏதேனும் இருந்தால் மன்ற உள்கூட்டங்களில் அதைப்பற்றி விவாதிக்க வேண்டுமேயன்றி பொதுவில் ஒருபோதும் எந்த விமர்சனமும் செய்யக்கூடாது.



    விவசாய அணியின் குறிக்கோளாக ‘தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான விவசாயத்தை கேள்விக்குறியாக்கி உள்ள பாசன நீர் பற்றாக்குறையை போக்க நதிகள் இணைப்பு, தமிழக ஆறுகள் இணைப்பு, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். மேற்கண்டவாறு கட்டுப்பாட்டில் கூறப்பட்டு உள்ளது.

    இதுபோலவே மீனவர் அணி, வழக்கறிஞர் அணி, வணிக அணி, மருத்துவர் அணி, நெசவாளர் அணி, தொழில்நுட்ப அணி என்று அணிகளை பிரித்து அவர்களுக்கு கொள்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

    ரஜினியின் இந்த விதிகள் புத்தகத்துக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது திட்டமிடலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

    ரஜினியின் இந்த புதிய விதிகள் பற்றி நிர்வாகிகள் கூறியதாவது:-

    ரஜினி கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடனே அவரது கொள்கை என்ன என்று கேட்டு கிண்டல் செய்தார்கள். இப்போது இந்த விதிகள் புத்தகத்தின் மூலம் அவர்களுக்கு பதில் கூறிவிட்டார்.

    கொள்கையை விட கட்சிக்கு கட்டுப்பாடு முக்கியம் என்பதால் தான் மாற்றத்தை எங்களிடம் இருந்தே தொடங்கி இருக்கிறார். ரஜினியின் அரசியலில் வேகமும் விவேகமும் இருக்கிறது என்பதன் வெளிப்பாடே இந்த விதிகள். கட்சி கொள்கைகள் தனியாக புத்தகமாக வெளியிடப்படும்.

    விரைவில் தனிக்கட்சி தொடங்க இருப்பதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. அக்டோபரில் கட்சியை தொடங்கி நவம்பரில் மாநாடு நடத்த ஒரு திட்டம் இருக்கிறது.

    பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு இரண்டையும் வைத்து தேதியில் மாற்றம் வரலாம். ஆனால் இன்னும் 3 மாதத்துக்குள் ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் உறுதி’ என்றார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    முலாயம்சிங் யாதவ் தம்பியும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஷிவ்பால் யாதவ் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். கட்சிக்கு மதசார்பற்ற சமாஜ்வாதி மோர்ச்சா என பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளார். #ShivpalYadav
    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவின் தம்பி ஷிவ்பால் யாதவ். முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர், கட்சியில் இருந்து ஷிவ்பால் யாதவ் ஓரங்கட்டப்பட்டார்.



    அதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பாவான ஷிவ்பால் யாதவுக்கும் இடையே கடும் பனிப்போர் நடைபெற்று வந்தது. கட்சியிலும், குடும்பத்திலும் பிரச்சினை எழுந்தது.

    இந்த நிலையில் ஷிவ்பால் யாதவ் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். அதற்கு மதசார்பற்ற சமாஜ்வாதி மோர்ச்சா என பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “கட்சியில் எனக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை. எனவே “மதசார்பற்ற சமாஜ்வாதி மோர்ச்சா” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க இருக்கிறேன்.

    சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என நீண்ட காலமாக விரும்பினேன். கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களை வரவேற்கிறேன்” என்றார்.

    அவரது இந்த அறிவிப்பால் சமாஜ்வாதி கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் அதிருப்தியாளர்கள் ஷிவ்பால் யாதவ் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #ShivpalYadav
    திவாகரன் பூமிக்கு அடியில் அதாவது பதுங்கு குகையில் தான் இன்னும் இருந்து வருகிறார். அவரது புதிய கட்சிக்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறினார். #TTVDhinakaran #Divakaran
    முத்துப்பேட்டை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காவிரி பிரச்சனைக்காக ஜெயலலிதா பல்வேறு வகையிலும் போராடி உறுதியான நிலையை ஏற்படுத்தி கொடுத்தார். அவரது பெயரை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் இப்போது விசித்திரமான ஆட்சி நடந்து வருகிறது. யாருக்கோ இவர்கள் கைக்கட்டி சேவகம் செய்து வருகிறார்கள் என்பது இங்குள்ள குழந்தைகளுக்கு கூட தெரியும்.

    விதி எண் 110-ஐ பயன்படுத்தி பல்வேறு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இல்லை என சொல்லி தட்டிக் கழிக்கவெல்லாம் முதல்வர், விதிஎண் 110-ஐ இப்போது பயன்படுத்துகிறார்.

    மத்திய அரசின் பாதுகாப்பில் இந்த அரசு ஓடிக்கொண்டுள்ளது. இவர்களது ஆட்சியில் தொடர முடியாமல் தான் 18 எம்.எல்.ஏ.க்களும் வெளியே வந்தனர். இவர்கள் கட்சி நலனுக்காக தியாகம் செய்துள்ள அனைவரும் இன்றைக்கே ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளனர்.

    இந்த ஆட்சியின் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் தான் எல்லா போராட்டமும் நடக்கும். அதன் பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்துவிடும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளும் ஆர்.கே.நகர் போலவே மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளன.

    வரும் தேர்தலில் 39 இடங்களிலும் வெற்றி பெற்று மத்தியில் யார் ஆட்சியமைப்பது என்பதை தமிழகம் தான் தீர்மானிக்கும்.

    தனியரசு, கருணாஸ், தமிமூன் அன்சாரி 3 பேரும் தகுந்த நேரத்தில் முடிவெடுப்பார்கள். அவர்கள் மூவேந்தர்கள் போல சுதந்திரமாக உள்ளனர்.



    மன்னார்குடியில் புதிய கட்சி உதயம், கொடியேற்றம் குறித்தெல்லாம் எதுவும் சொல்வதிற்கில்லை. இந்த மாதத்தில் கேட்ட சிறந்த ஜோக்குகளில் புதிய கட்சி தகவலும் நல்ல ஜோக்ஸ் என்பதை தவிர, அந்த கட்சி குறித்து வேறெதுவும் எதுவும் சொல்வதற்கில்லை,

    திவாகரன் பூமிக்கு அடியில் அதாவது பதுங்கு குகையில் தான் இன்னும் இருந்து வருகிறார். கட்சி பெயரை கேட்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அண்ணாவிற்கு இவருக்கும் என்ன சம்பந்தம்? அ.தி.மு.க.வில் அவர் உறுப்பினர் கூட கிடையாது. எப்படி கட்சியினர் அவர் பக்கம் செல்வார்கள்? அவர் என்றும் தனிமரம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TTVDhinakaran #Divakaran
    ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து பெண் வேட்பாளரை நிறுத்த அவர் முடிவு செய்துள்ளார். #JusticeKarnan
    கொல்கத்தா:

    கொல்கத்தா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன். சென்னை ஐகோர்ட்டின் நீதிபதியாக இருந்த கர்ணனை பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் தனது பணியிடம் மாற்றத்துக்கான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தார். இதையடுத்து அவருக்கு வழக்குகளை ஒதுக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குறி வைக்கப்படுகிறேன் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இதையடுத்து கர்ணன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 6 மாத சிறை தண்டனை காலம் முடிந்து வெளியே வந்துள்ள முன்னாள் நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:-


    அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் எனது கட்சி சார்பில் பெண் வேட்பாளர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளேன். எனது கட்சியை முறைப்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வேன்.

    நாட்டிலிருந்து ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே என் கட்சியின் நோக்கம். மோடி எம்.பி.யாக உள்ள வாரணாசி தொகுதியில் நான் போட்டியிட போவதில்லை. அங்கு எனது கட்சி சார்பில் பெண் வேட்பாளரை நிறுத்துவேன்.

    நாடு முழுவதும் தலித்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தலித்துக்களை சிறுபான்மையினரை அனைத்து மாநில அரசும் மத்திய அரசும் பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JusticeKarnan #Karnan #CSKarnan #NewParty
    ×