search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண மோடி"

    ராஜபாளையம் அருகே மில் அதிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த வடமாநில வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் முத்து கலசலிங்கம் (வயது45). இவர் அதே பகுதியில் பேண்டேஜ் ரக துணியை உற்பத்தி செய்யும் மில் நடத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு இவரிடம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த புத்தேஷ்‌ஷர்சா என்ற வியாபாரி பல தவணைகளில் ரூ.7 லட்சத்து 8 ஆயிரத்து 350 மதிப்புள்ள பேண்டேஜ் துணிகளை வாங்கினார்.

    ஆனால் அதற்கான பணத்தை திருப்பித்தரவில்லை. பலமுறை கேட்டும் முத்துகலசலிங்கத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தி ரூ.7 லட்சம் மோசடி செய்த வடமாநில வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    கோவை மாவட்டம் அன்னூரில் வங்கியில் கடன் பெற்றுதருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    அன்னூர்:

    அன்னூர் அருகே உள்ள நாகமாபுதூரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி ராஜம்மாள் (வயது 52).

    இவர் தனது பேரனின் மருத்துவ படிப்புக்காக மகன் மற்றும் மருமகன் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற முயற்சி செய்து வந்தார்.

    அப்போது கோவையை சேர்ந்த தன்ராஜ், ஜெசிந்தா மேரி ஆகிய 2 பேர் ராஜம்மாளை தொடர்பு கொண்டனர். தன்ராஜ் வங்கியில் வேலை செய்வதாக கூறிய அவர்கள் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதை நம்பிய ராஜம்மாள் கோவை வங்கிக்கு சென்று அசல் பத்திரம் மற்றும் கடன் பெற தேவையான ஆவணங்களை கொடுத்து கையெழுத்து போட்டுள்ளார்.

    அப்போது சில வாரங்களில் ரூ.50 லட்சம் ராஜம்மாள் கணக்கில் வந்துவிடும் என தெரிவித்து உள்ளனர். பல மாதங்கள் ஓடி விட்டன. பணம் வங்கி கணக்கில் வரவில்லை.

    ஆனால் வங்கியில் இருந்து ரூ.50 லட்சத்துக்கு வட்டி செலுத்த வேண்டும் என ராஜம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தன்ராஜ் மற்றும் ஜெசிந்தா மேரி மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.
    ×