search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவாஸ் ஷரீப்"

    • பிரதமரான 3 முறையும் நிறைவு காலத்திற்கு முன்பே பதவியை இழந்தார்
    • கார்கில் ஊடுருவலை எதிர்த்ததால் பதவியை இழந்தேன் என்றார் நவாஸ்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், வரும் 2024 பிப்ரவரி 8 அன்று அந்நாட்டு பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர் முகமது நவாஸ் ஷரீப் (73). மூன்று முறையும், இவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே பல்வேறு காரணங்களால் ஆட்சியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக உள்ள நவாஸ் ஷரீப், அடுத்த வருட தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக தீவிரமாக களமிறங்கி உள்ளார்.

    இந்நிலையில், அண்டை நாடுகள் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    1999ல் இந்தியாவிற்கு எதிராக ஜெனரல் முஷாரப் கார்கில் பகுதியில் ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நான் எதிர்த்தேன். அதனால் நான் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவுடன் நேர்மறையான உறவு வேண்டும் என விரும்புபவன் நான். 3 முறை பிரதமராக இருந்த போதும், நியாயமற்ற காரணங்களுக்காக பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன்.

    எனது ஆட்சி காலத்தில்தான் இந்திய பிரதமர்களான வாஜ்பாய் அவர்களும் (1999), மோடி அவர்களும் (2015) பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். அதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து எந்த அதிபரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்ததில்லை.

    தனது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது வருத்தம் அளிக்கிறது. அண்டை நாடுகள் எங்களுடன் வருத்தத்தில் இருந்தால் உலக அளவில் மதிப்புமிக்க நாடாக நாங்கள் எப்படி மாற முடியும்? நாங்கள் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் சுமூக உறவு நிலவுவதையே விரும்புகிறோம்.

    இவ்வாறு ஷரீப் கூறினார்.

    நவாஸ் ஷரீப்பின் இந்த கருத்து இந்தியா-பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும் நல்ல நோக்கமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் அதிபர் பதவிக்கு நடக்க உள்ள தேர்தலில் பிரதமர் இம்ரான் கான் நிறுத்தியுள்ள வேட்பாளரை எதிர்த்து, நவாஸ் ஷரீப் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சி பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் மம்னூன் உசைனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், செப்டம்பர் 4-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் தனது பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் ஆரிப் அல்வியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. 

    இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் ஆண்ட கட்சிகளான நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து அதிபர் தேர்தலி பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன.
    பாகிஸ்தானின் பிரதமராக நாளை பதவியேற்க உள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன. 

    பாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.

    ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே கடந்த திங்கள் அன்று பாராளுமன்றம் கூடியது. இம்ரான் கான் உள்பட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். கூட்டணி அமைக்கும் வேலைகள் முடிந்த நிலையில், நாளை இம்ரான் கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வரும் நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடந்தது. 

    பாராளுமன்றத்தின் உள்ளே வந்த இம்ரான் கானுக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷரீப் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வாக்கெடுப்பை புறக்கணிக்கப்போவதாக முதலில் அறிவித்தது. இதனை அடுத்து, அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அவரை பாக். முஸ்லிம் லீக் கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.

    இதற்கிடையே, பல தொகுதிகளில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சில பாக். முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் நிலவியது. 

    ஆட்சியமைக்க 137 இடங்கள் தேவை என்ற நிலையில், இம்ரான் கான் கூட்டணி வசம் 151 எம்.பி.க்கள் இருந்தனர். ஆட்சியமைப்பதற்கான உரிமை மசோதாவை பிடிஐ கட்சி தாக்கல் செய்தது. 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 

    பாக். முஸ்லிம் லீக் கட்சிக்கு 96 வாக்குகள் கிடைத்தன. பூட்டோவின் பாக். முஸ்லிம் லீக் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதன் மூலம் அவர் ஆட்சியமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார்.
    பெரும்பான்மை இல்லை என்றாலும் சிறிய கட்சிகள் ஆதரவுடன் பிரதமராக உள்ள இம்ரான்கானுக்கு புதிய தலைவலியாக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன. 

    ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

    ஒரு வழியாக கூட்டணி அமைந்த நிலையில், வரும் 11-ம் தேதி இம்ரான்கான் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. பாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.



    பிரதமராக பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 137 இடங்கள் அவரின் வசம் இருப்பதால் அதில் சிக்கல் இருக்காது என கூறப்பட்டது. இந்நிலையில், தோல்வியடைந்த இரு முக்கிய கட்சிகளும் தற்போது கைகோர்த்துக்கொண்டு இம்ரானுக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன.

    பாக். முஸ்லிம் லீக் மற்றும் பாக். மக்கள் கட்சி வசம் 107 இடங்கள் தற்போது உள்ளன. போட்டி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற கூடுதலாக 30 இடங்கள் தேவை என்பதால், இந்த இடத்திலும் சிறிய கட்சிகளின் தயவை இரு கட்சிகளும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

    எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை சாத்தியமாகாது என உறுதியாக கூற முடியும் என்றாலும், இம்ரான்கான் பக்கம் உள்ள சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிகள் பக்கம் கைகோர்க்கும் நிகழ்வும் நடக்கலாம். இதனால், வாக்கெடுப்பு நடந்து முடியும் வரை இம்ரான்கானுக்கு தூக்கம் இருக்காது.



    சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கினால் அவர்களை திருப்திபடுத்தலாம் என்ற திட்டமும் இம்ரான்கானின் மனதில் உள்ளது. எனினும், தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராணுவமும் இம்ரான்கானின் பக்கம் நிற்பதால், அவர் ஆட்சியமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    பிரதமராக இம்ரான்கான் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடலாம். இதனை அவர் எப்படி கையாள போகிறார் என்பது போக போக தெரியவரும்.

    ஆனாலும், பாகிஸ்தானின் அரசியல் என்பது யாரும் எப்போதும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பதால் அந்நாட்டு அரசியல் சூழல் தொடர்ந்து உற்றுநோக்கப்பட்டு வருகிறது. 
    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.

    ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்தது. பெரும்பாலான இடங்களில் அந்த கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெற்று வந்தனர். அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின்  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது.  பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.  

    272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 102 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 43 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

    இன்னும் சில மணிநேரத்தில் வெற்றி நிலவரங்கள் வர தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1996-ம் ஆண்டு கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை போட்டியிட்ட மூன்று பொதுத்தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள வெற்றி அந்த கட்சியினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #PakistanElection #ElectionPakistan2018
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.

    ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின்  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது.  பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.  

    குறிப்பாக இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட இம்ரான்கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ஷாகித்கான் அப்பாஸியை விட சுமார் 800 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என கூறப்படுகிறது. 272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும். 
    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் குண்டுவெடிப்பு, வன்முறை பரபரப்புகளுக்கு இடையே வாக்குப்பதிவு 6 மணியளவில் முடிந்தது. #PakistanElections2018
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேசிய சபையில் உள்ள 270 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மேலும், மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. அரசியல் பரபரப்பு, ராணுவ ஆட்சி அச்சுறுத்தல், பயங்கரவாதிகளின் தாக்குதல் என பல நிகழ்வுகளுக்கு இடையே இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    பாராளுமன்ற இடங்களுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டுப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

    பாதுகாப்பு பணியில் 4 லட்சம் போலீசாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலும், குவெட்டா பகுதியில் வாக்குசாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 31 பேர் பலியாகினர். மேலும், சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.



    6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. 24 மணிநேரத்துக்குள் முழு வெற்றி நிலவரமும் தெரிய வரும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி உள்ளது.
    பனாமா ஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், சிறையில் சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Panamapapers #Nawazsharif
    லாகூர்:

    பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு 10 ஆண்டும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டும், மருமகன் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டும் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில், கைது செய்யப்பட்ட இவர்கள் இஸ்லாமா பாத்தில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், சிறையில் உள்ள நவாஷ் ஷரிப், சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர் உடல்நிலையை மருத்துவ குழு நேற்று பரிசோதனை செய்தது. பரிசோதனைக்கு பிறகு நவாஷ் ஷரிப் சிறுநீரங்கள் செயலிழக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது. 

    அவரது இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்து, அவர் கடும் உடல் சோர்வுடன் காணப்படுவதாகவும் அவரது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், சிறைச்சாலையில் உரிய சிகிச்சையளிக்கும் வசதிகள் இல்லாததால், நவாஸ் ஷரிப் நிலைமை இன்னும் மோசமாகலாம், எனவே அவரை ஆடிலா சிறையில் இருந்து மருத்துவமனைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் குழு பரிந்துரை செய்துள்ளது. 

    ஆனால், நவாஸ் ஷரீப்புக்கு சிறை நடைமுறைகளின்படி வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாசின் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #Panamapapers #Nawazsharif
    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் மற்றும் மரியம் இருவரும் சிறை விதிமுறைகளை மீறி சந்தித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், சிறையில் உள்ள நவாஸ் ஷரிப்பை சந்தித்து பேசிய பிறகு பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் மூத்த தலைவர் பர்வேஸ் ரஷித் அடிடாலா சிறை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :- 

    நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு சிறை விதிமுறைகளுக்கு மாறாக முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். 

    அவர்களின் இலக்கை அடைவதற்கும், வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரிக்கை வைப்பதற்கும் சிறை தண்டனை அவர்களுக்கு ஒரு தடையாக இருக்காது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், அவரது மகள் மர்யம் நவாஸ் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
    இஸ்லாமாபாத்:

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

    தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நவாஸ் ஷரிப் மீதுள்ள மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 

    நிலுவையில் இருக்கும் மேலும் இரு ஊழல் வழக்குகளை தற்போதைய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர் விசாரிக்க கூடாது. ஏற்கனவே, இந்த வழக்குகளின் சாதக-பாதகங்கள் பற்றி அவர் வெளிப்படையாக பொதுவெளியில் விமர்சித்துள்ளதால் முஹம்மது பஷீருக்கு வேறு நீதிபதியிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் சப்தர் சார்பில் நேற்று 7 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், மேற்கண்ட மனுக்கள் மீதான விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்டில் இன்று நடந்தது. ஜாமின் கோரிய நவாஸ் ஷெரீப், மர்யம் நவாஸ்,  சப்தர் ஆகியோரது மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நவாஸ் ஷெரீப் ஜாமீனில் வெளிவருவார் என எதிர்பார்த்த அவரது ஆதரவாளர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

    நவாஸ் ஷரீப்புக்கு தண்டனை வழங்கிய தேசிய பொறுப்புடமை நீதிபதி பஷீர், அவர் மீதான மற்ற இரு வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஊழல் வழக்கில் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகளுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி, நவாஸ் மீதான மற்ற இரு வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விலகியுள்ளார். #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

    தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நவாஸ் ஷரிப் மீதுள்ள மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 

    நிலுவையில் இருக்கும் மேலும் இரு ஊழல் வழக்குகளை தற்போதைய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர் விசாரிக்க கூடாது. ஏற்கனவே, இந்த வழக்குகளின் சாதக-பாதகங்கள் பற்றி அவர் வெளிப்படையாக பொதுவெளியில் விமர்சித்துள்ளதால் முஹம்மது பஷீருக்கு வேறு நீதிபதியிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் சப்தர் சார்பில் நேற்று 7 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்க உள்ள நிலையில், தேசிய பொறுப்புடமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர், நவாஸ் ஷெரீப் மீதான மற்ற இரு வழக்குகளையும் விசாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். 

    இந்த விலகல் முடிவு தொடர்பாக இஸ்லாமாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு பஷீர் எழுதியுள்ள கடிதத்தில், நவாஸ் மீதான மற்ற இரு வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை வேறு நீதிபதிக்கு மாற்றுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
    ×