என் மலர்
நீங்கள் தேடியது "NAB"
வீட்டு வசதி வாரியத்தில் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் ஷாபாஸ் ஷரிப் 10 நாள் விசாரணை காவலில் அடைக்கப்பட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும், தற்போதைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தபோது ஷாபாஸ் ஷரிப்புக்கு பல ஊழல்களில் தொடர்பிருப்பதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.

முன்னதாக பாகிஸ்தானில் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தலையிடக்கூடும் என்று குற்றம்சாட்டிய போலீசார் தடுப்புக் காவல் சட்டப்படி லாகூர் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷாபாஸ் ஷரிப் பலத்த காவலுடன் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனை ஏற்ற நீதிபதி நஜமுல் ஹஸன் 10 நாள் விசாரணை காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும், தற்போதைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தபோது ஷாபாஸ் ஷரிப்புக்கு பல ஊழல்களில் தொடர்பிருப்பதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடுகளை கட்டித்தரும் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆஷியான் வீட்டுவசதி’ திட்டத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ததாகவும் இதன்மூலம் ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவருக்கு எதிராக பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தானில் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தலையிடக்கூடும் என்று குற்றம்சாட்டிய போலீசார் தடுப்புக் காவல் சட்டப்படி லாகூர் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷாபாஸ் ஷரிப் பலத்த காவலுடன் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனை ஏற்ற நீதிபதி நஜமுல் ஹஸன் 10 நாள் விசாரணை காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif
ஆசியானா இ இக்பால் வீட்டுவசதி திட்ட ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் தம்பியும், பாக். முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷரீப் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். #ShehbazSharif
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷரீப், முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆசியானா இ இக்பால் வீட்டுவசதி திட்டத்தில் விதிமுறைகளை மீறி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் அளித்ததாக புகார் இருந்தது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தம்பியான இவர் இன்று திடீரென தேசிய பொறுப்புடைமை துறை அதிகாரிகளால் லாகூரில் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, நவாஸ் ஷரீப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பின்னர் பதவியை இழந்து சமீபத்தில் அவரது தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. ஆதாரத்தின் அடிப்படையில் ஷாபாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் அரசு தலையிடாது என இம்ரான் கான் அரசில் செய்தி தொடர்பு துறை மந்திரியாக உள்ள பாவத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.






