என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டிட்லி புயல்
நீங்கள் தேடியது "டிட்லி புயல்"
டிட்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். #TitliCyclone #ChandrababuNaidu #NaveenPatnaik
ஐதராபாத் :
வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர். ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டம், பராஹரா கிராமத்தில், கனமழையை தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, குகை ஒன்றில் தங்கியிருந்த 12 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை. அவர்கள், மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதிள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது :-
டிட்லி புயலால் ஆந்திராவில் 3 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மாநில அரசு நிவாரணப்பணிகள் மேற்கொண்டு வருகின்றது. சுமார் 2800 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 1200 கோடி வழங்க வேண்டும்
என சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சம், கஜாபதி, ராயகாடா உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சம் பகுதிகளில் உள்ள 4-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு நிவாரண உதவியாக தலா ரூ. 3000 அரசு சார்பில் வழங்கப்படும்.
நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணி துரிதமாக நடைப்பெற்று வருகிறது’ என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். #TitliCyclone #ChandrababuNaidu #NaveenPatnaik
வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர். ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டம், பராஹரா கிராமத்தில், கனமழையை தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, குகை ஒன்றில் தங்கியிருந்த 12 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை. அவர்கள், மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதிள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது :-
டிட்லி புயலால் ஆந்திராவில் 3 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மாநில அரசு நிவாரணப்பணிகள் மேற்கொண்டு வருகின்றது. சுமார் 2800 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 1200 கோடி வழங்க வேண்டும்
என சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சம், கஜாபதி, ராயகாடா உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சம் பகுதிகளில் உள்ள 4-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு நிவாரண உதவியாக தலா ரூ. 3000 அரசு சார்பில் வழங்கப்படும்.
நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணி துரிதமாக நடைப்பெற்று வருகிறது’ என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். #TitliCyclone #ChandrababuNaidu #NaveenPatnaik
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X