search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிடிஎப் வாசன்"

    • 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது.
    • வாசனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

    சென்னை:

    யூடியூபர் டி.டி.எப். வாசன் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து டிடிஎப் வாசன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து 2-வது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேலும் வாசனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

    இதையடுத்து யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 வாரங்களுக்கு தினமும் காவல் நிலையத்தில் டி.டி.எப். வாசன் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • டிடிஎப் வாசனின் யூடிப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி நீதிபதி கருத்து தெரிவித்தார் இருந்தார்.
    • அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய யூடியூர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து.

    யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்த மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து டிடிஎப் வாசன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, டிடிஎப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, யூடிப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய யூடியூர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் 2033 அக்டோபர் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.

    • புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    • விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும் என் தெரிவித்தார்.

    சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், யூ டியூபர் டி.டி.எப்.வாசன், செப்டம்பர் 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு டி.டி.எப்.வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கிஷோர்குமார், யூடியூபில் 45 லட்சம் பேர் மனுதாரரை பின் தொடர்கிறார்கள் என்றும், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில், இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் இந்த விபத்தில் உயிர் தப்பி இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    இதைப் பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் விலையுள்ள பைக்கை வாங்கி கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள்... சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும் என் தெரிவித்தார்.

    டிடிஎப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி நீதிபதி கார்த்திகேயன் கருத்து தெரிவித்தார்.

    • டி.டி.எப்.வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ந்தேதி மனு தாக்கல் செய்தார்.
    • நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து டி.டி.எப்.வாசனின் ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார்.

    காஞ்சிபுரம்:

    பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் கடந்த 17-ந்தேதி காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் செய்ய முயன்றார். அப்போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ந்தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் யூ-டியூபர் வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் அவருக்கு நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து அவரது ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார்.

    • காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்றபோது வீலிங் சாகசத்தில் வாசன் ஈடுட்டார்.
    • யூடியூபர் வாசன் ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    சென்னை:

    அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி சிறுவர்களையும், மாணவர்களையும் கவர்ந்து வருபவர் டி.டி.எப்.வாசன். இவர் தனது மோட்டார் சைக்கிள் சாகசங்களை யூடியூப்பில் வெளியிட்டு அதன்மூலம் பிரபலமானவர்.

    காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்றபோது வீலிங் சாகசத்தில் வாசன் ஈடுட்டார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் சாலையில் தேய்ந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாசனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    அவர் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் யூடியூபர் வாசன் ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அவரது மனு நீதிபதி செம்மல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி யூ டியூபர் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.

    • டி.டி.எப்.வாசன், தனக்கு கைஎலும்பு முறிவு ஏற்பட்ட இடம் மற்றும் இடுப்பு பகுதியில் அதிகம் வலி எடுப்பதாக கூறியதாக தெரிகிறது.
    • சிகிச்சை முடிந்ததும் டி.டி.எப்.வாசன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    ராயபுரம்:

    பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன். இவர் கடந்த 17-ந்தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்தார்.

    அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது மோட்டார் சைக்கிள் பல அடிதூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.

    இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து டி.டி.எப். வாசனை நேற்று காலை பாலுசெட்டிசத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல், மரணம் விளைவிக்கும் வகையில் குற்றம் செய்தல், மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டி.டி.எப்.வாசனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே டி.டி.எப்.வாசன், தனக்கு கைஎலும்பு முறிவு ஏற்பட்ட இடம் மற்றும் இடுப்பு பகுதியில் அதிகம் வலி எடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று இரவு டி.டி.எப்.வாசனை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

    அங்கு அவருக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    • டி.டி.எப்.வாசன் கதாநாயகனாக நடிக்கும் 'மஞ்சள் வீரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
    • இப்படத்தில் அனிருத் பாடல் பாடவுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.



    இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இயக்குனர் செல்அம் இயக்கத்தில் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் நடிக்கிறார். தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கும் இப்படத்திற்கு அனிவி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் 'மஞ்சள் வீரன்' படத்தின் அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடவுள்ளதாக கூறப்படுகிறது. 

    • டி.டி.எப்.வாசன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.
    • இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.



    இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். இயக்குனர் செல்அம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டி.டி.எப் வாசனின் பிறந்த நாளான நேற்று வெளியானது.




    'மஞ்சள் வீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் டி.டி.எப்.வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல இடம்பெற்றுள்ளது. மேலும் முதல் தோற்ற போஸ்டரில் '299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

    • டி.டி.எப்.வாசன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.
    • இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.


    இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். அதாவது, இயக்குனர் செல்அம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டி.டி.எப் வாசனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'மஞ்சள் வீரன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. டி.டி.எப்.வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல உள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் '299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.



    • யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர் டி.டி.எப் வாசன்.
    • இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

    இந்நிலையில், யூடியூபர் டி.டி.எப் வாசன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். அதாவது, இவர் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் 29-ஆம் தேதி டி.டி.எப்.வாசன் பிறந்தநாள் அன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனல் செய்தியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசி, டி.டி.எப் வாசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனல் நிறுவனம் சார்பில் காரமடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25).

    இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்த நிலையில் பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனல் செய்தியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் காரமடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் டி.டி.எப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவர் மீது ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சில வழக்குகளில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் குழந்தைகள் இவரது யூடியூப் பக்கத்தை பாலோ செய்வதால் அவரை மாதிரியே தாங்களும் வாகனங்களை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

    மேலும், இதுவரை தனது யூடியூப் பக்கத்தில் தனக்கு எதிராக யாராவது பேசினால் அவர்களுக்கு எதிராக வசனம் பேசி வீடியோ வெளியிட்டு வந்த அவர், தற்போது தனியார் யூடியூப்பை சேர்ந்த ஒருவரை மிரட்டுகிறார். எனவே அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×