search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோப்ரா ஆர்ச்சர்"

    • எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. உங்களைப் போன்ற நபர்கள் தான் எனக்கு பிரச்சனையே தருகிறீர்கள்.
    • குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    ஐபிஎல் மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

    ஜோப்ரா ஆச்சர் காயம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பை அணிக்காக வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இருந்தாலும் அவருக்கு காயம் இன்னும் குணமடையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய பெல்ஜியம் வரை செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகி மீண்டும் ஒரு வாரத்திற்குள் அணிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது.

    எனினும் இந்த தகவலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையாளரை கடுமையாக சாடி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மை என்னவென்று தெரியாமல் என்னை பற்றியும், என் அனுமதி இல்லாமலும் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இது சுத்த பைத்தியக்காரத்தனம். இந்த செய்தியை வெளியிட்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.

    ஏற்கனவே ஒரு வீரருக்கு காயம் அடைந்த தருணம் கவலையும் சிக்கல்களையும் கொடுக்கக்கூடிய நேரம் ஆகும். இந்த நேரத்தில் கூட உங்களுடைய சொந்த நலனுக்காக என்னை பயன்படுத்திக் கொள்வது கேவலமான விஷயம். எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. உங்களைப் போன்ற நபர்கள் தான் எனக்கு பிரச்சனையே தருகிறீர்கள்.

    என்று ஜோப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

    இதனால் ஜோப்ரா ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டது உண்மையா? இல்லையா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    கிம்பர்லி:

    தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் மலான், கேப்டன் ஜோஸ் பட்லர் சதம் அடித்தனர்.

    மலான் 114 பந்தில் 118 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பட்லர் 127 பந்தில் 131 ரன்னும் 16 பவுண்டரி, 7 சிக்சர், மொய்ன் அலி 23 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நிகிடி 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 43-ஓவர்களில் 287 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதல் 2 போட்டியிலும் தோற்ற இங்கிலாந்து ஏற்கனவே தொடரை இழந்து இருந்தது.

    இதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

    ஹென்ரிச் கிளாசன் 62 பந்தில் 80 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்னும் 6 பவுண்டரி) எடுத்தனர்.

    ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஆதில் ரஷூதுக்கு 3 விக்கெட் கிடைத்தது.

    3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ×