search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்யபால் மாலிக்"

    • சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகார் எழுந்ததை தொடர்ந்து டெல்லி, காஷ்மீரில் உள்ள 8 இடங்களில் கடந்த மாதம் சி.பி.ஐ. சோதனை நடந்தது.
    • நான் ஒரு விவசாயியின் மகன். இந்த சோதனைகளுக்கு பயப்பட மாட்டேன்.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக். கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை அவர் அங்கு கவர்னராக பணியாற்றினார்.

    காஷ்மீர் கவர்னராக சத்யபால் மாலிக் இருந்தபோது 2 கோப்புகளில் கையெழுத்துப் பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் தர முயன்றனர் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

    இந்த 2 கோப்புகளில் ஒன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றில் இருந்து 624 மெகா வாட் நீர்மின் உற்பத்திக்கான ஒப்புதல் கோப்பாகும்.

    நீர்மின்சாரத் திட்ட முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

    இந்த திட்டத்தில் சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகார் எழுந்ததை தொடர்ந்து டெல்லி, காஷ்மீரில் உள்ள 8 இடங்களில் கடந்த மாதம் சி.பி.ஐ. சோதனை நடந்தது.

    இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். குர்கிராம், பாக்பத், டெல்லி ஆர்.கே.புரம் மற்றும் ஆசிய விளையாட்டு கிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சத்யபால் மாலிக்குக்கு நெருக்கமான செனாப் வேலி நிறுவன முன்னாள் தலைவர் நவீன் குமார் சவுத்ரி மற்றும் படேல் என்ஜினீயரிங் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள 30 இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினார்கள்.

    100-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை முதல் இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சோதனையின் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறும்போது, 2019-ம் ஆண்டில் கிரு நீர்மின்சாரத் திட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சுமார் 2,200 கோடி மதிப்பிலான குடிமராமத்து பணி களை ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ஒரே நேரத்தில் 30 இடங்களில் இன்று நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சோதனை தொடர்பாக சத்யபால் மாலிக் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 முதல் 4 நாட்களாக நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். ஆனாலும் எனது வீட்டை சர்வாதிகாரி அரசு நிறுவனங்கள் மூலம் சோதனை செய்கிறார்கள். எனது டிரைவர் மற்றும் உதவியாளரையும் சோதனை செய்து தேவையில்லாமல் துன்புறுத்துகிறார்கள்.

    நான் ஒரு விவசாயியின் மகன். இந்த சோதனைகளுக்கு பயப்பட மாட்டேன். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்யபால் மாலிக் சமீப காலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்னிபாத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது.
    • இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பாக்பத் :

    முப்படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக்கும் அக்னிபாத் திட்டம் தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எதிர்கால போர் வீரர்களான இளைஞர்களுக்கு அக்னிபாத் திட்டத்தில் 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் விடுப்பும் கிடைக்கிறது. மீதமுள்ள 3 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியமும் இன்றி வீடு திரும்பும் அவர்களுக்கு திருமண வரன்கள் எதுவும் அமையாது. அந்தவகையில் அக்னிபாத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது. அவர்களின் நம்பிக்கை மீதான மோசடி இது' என சாடினார்.

    எனவே ஒப்பந்த அடிப்படையில் ஆள்தேர்வு செய்யும் இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    முன்னதாக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கவர்னர் சத்யபால் மாலிக் போர்க்கொடி உயர்த்தி அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னராக சத்யபால் மாலிக்கும், பீகார் மாநில கவர்னராக லால் ஜீ தாண்டெனும் பதவியேற்றுக்கொண்டனர்.
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 13-வது கவர்னராக சத்யபால் மாலிக் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஸ்ரீநகரில் உள்ள ராஜ் பவனில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டால் முன்பு பதவியேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, மெக்பூபா முப்தி உட்பட 400 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் மத்திய ரிசர்வ் படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தற்போது கவர்னராக பொறுப்பேற்றுள்ள சத்யபால் மாலிக், பீகார் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஆவார்.

    சத்யபால் மாலீக் காஷ்மீர் கவர்னரானதை தொடர்ந்து பீகார் மாநில கவர்னராக அறிவிக்கப்பட்ட லால் ஜீ தாண்டென் பாட்னாவில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முகேஷ் ஆர் ஷா முன்னிலையில் நேற்று பதவியேற்றார்.

    இந்த பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி ஆகியோர் பங்கேற்றனர். 
    ஜம்மு காஷ்மீர், பீகார், அரியானா, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #Governors #PresidentKovind
    புதுடெல்லி:

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நரிந்தர்நாத் வோஹ்ரா கவர்னராக இருந்து வருகிறார். 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டே வந்தது. சமீபத்தில் அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இதனால், வோஹ்ரா கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

    பீகார் மாநிலத்தின் கவர்னராக இருந்த சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக முன்னாள் எம்.பி லால் ஜி டாண்டன் பீகாரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா கவர்னராக இருந்த கங்கா பிரசாத் சிக்கிம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திரிபுரா கவர்னராக இருந்த டதாகடா ராய் மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக இருந்த காப்தன் சிங் சோலாங்கி திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக சத்யதேவ் நாராயன் ஆர்யா, உத்தரகாண்ட் மாநில கவர்னராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டுள்ளனர். 
    ×