search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவா முதல்வர்"

    • தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
    • தேவர் குருபூஜை விழாவையொட்டி ேகாவா முதல்வர் கலந்துகொண்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தும்மு சின்னம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் முத்து ராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை யொட்டி பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடை பெற்றது.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை விழாவில் கலந்து கொண்ட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலை வர் அண்ணாமலை மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு அவரது நினைவி டத்தில் அமைந்துள்ள தேவ ரின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து திரும்பிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே யுள்ள தும்மு சின்னம்பட்டி பகுதியி லுள்ள தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற மாபெரும் அன்னதான விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவருந்தினர்.

    மேலும் தேவர் குருபூஜை விழாவினையொட்டி நடை பெற்ற இந்த அன்ன தான விருந்து நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை, விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டு ரங்கன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வா கிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏரா ளமானோர் கலந்துகொண்ட னர்.

    • தீபாவளிக்காக அவர்கள் தயாரித்த பொருட்களை விற்க பல்வேறு இடங்களில் ஸ்டால்களை வைத்துள்ளனர்.
    • விளக்கு, உண்ணக்கூடிய பொருட்கள் அல்லது பூக்கள் கூட எப்போதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கத் தேர்ந்தெடுங்கள்.

    கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், தீபாவளி பண்டிகைக்கு ஷாப்பிங் செய்யும்போது உள்ளூர் தயாரிப்புகளை கருத்தில் கொண்டு குடிமக்கள் "உள்ளூர்க்கான குரல்" முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கோவா முதல்வர் கூறியதாவது:-

    தெற்கு கோவாவில் உள்ள லோலியம் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பரிசளித்த தென்னை மரத்தின் இலைகளால் ஆன விளக்கை தாமே பனாஜியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்துள்ளேன்.

    மாநில அரசின் ஸ்வயம்பூர்ணா கோவா முன்முயற்சியின் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, கோவா முழுவதிலும் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் சாவந்த் உரையாற்றினார்.

    அது விளக்கு, உண்ணக்கூடிய பொருட்கள் அல்லது பூக்கள் கூட எப்போதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கத் தேர்ந்தெடுங்கள். இதன் மூலம், உள்ளூர் முன்முயற்சிக்கான குரலை ஊக்குவிக்க உதவ வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளிக்கும் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் தீபாவளிக்காக அவர்கள் தயாரித்த பொருட்களை விற்க பல்வேறு இடங்களில் ஸ்டால்களை வைத்துள்ளனர்.

    இந்த பொருட்களை வாங்குங்கள். அவை கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அவைகளை வாங்கி ஊக்குவியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடல்நலக்குறைவால் ஏற்கனவே இரண்டு முறை அமெரிக்காவுகு சென்று சிகிச்சை எடுத்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். #ManoharParrikar #GoaCM
    மும்பை:

    கோவா முதல்வராக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். மூன்று மாதங்களுக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இம்மாதம் 10-ம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா சென்று 17-ம் தேதி திரும்பினார்.

    இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்று இரவு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.  
    ×