search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்லம்"

    • கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
    • தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ரெயில் எண்:06772 கொல்லம் சந்திப்பு-கன்னியாகுமரி மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06773 கன்னியாகுமரி-கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06429 கொச்சுவேளி-நாகர் கோவில் சந்திப்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06430 நாகர்கோவில் சந்திப்பு-கொச்சுவேளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:16366 நாகர்கோவில் கோட்டயம் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் நவம்பர் 17, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஒரு மணிநேரம் தாமதமாக ஓடும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

    • நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்படும்.
    • தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம் சென்ட்ரல்- நாகர்கோவில் சந்திப்புப் பிரிவில் உள்ள நேமம்- நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகளுக்காக, அக்டோபர் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் எண்: 06772 கொல்லம் சந்திப்பு- கன்னியாகுமரி மெமு எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்: 06773 கன்னியாகுமரி- கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்: 16366 நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக அன்று 2.30 மணிக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

    ரெயில் எண்: 06429 கொச்சுவேளி- நாகர்கோவில் சந்திப்பு முன்பதிவில்லா எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் கொச்சுவேளியில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக கொச்சுவேளியில் இருந்து 3.10 மணிக்கு(1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும்.

    இவ்வாறு செய்தி கூறியிருப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இருக்கும் கிணற்றில் 55 வயது கன்னியாஸ்திரி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala #Nun
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் மவுண்ட் தாபோர் கான்வென்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்த சுஷான் மேத்யூ (55) என்ற கன்னியாஸ்திரி இன்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    காலை 9 மணிக்கு கிணற்றின் சுற்றுச்சுவறில் ரத்தக்கறை இருந்ததை கண்டெறிந்த பள்ளி ஊழியர்கள், கிணற்றின் உள்ளே பார்க்கும் போது சுஷான் சடலமாக மிதந்துள்ளார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

    நேற்று, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ  மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
    ×