search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொசுக்கள்"

    • வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.
    • சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன.

    சென்னை:

    மழைக்காலம் முடிந்து மீண்டும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி உள்ளது. பருவ காலம் தற்போது மாறி வரும் நிலையில் சென்னையில் கொசுக்கடி பாதிப்பும் பெருகியுள்ளது.

    பனியும் குளிரும் குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இனி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என்பதால் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

    கொசுக்கள் உற்பத்தியும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டால் சென்னை மக்களை கொசுக்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என்ற அடிப்படையில் இந்த பணியை இந்த மாதம் இறுதியில் தொடங்க அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    சென்னையில் 248 கி.மீ. தூரத்திற்கு நீர்வழிப் பாதைகள் உள்ளன. இவற்றில் 'டிரோன் மூலம் கொசு மருந்து அடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர சிறிய கால்வாய்களிலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்கப்பட உள்ளது. 6 டிரோன்கள் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல், மழையால் கொசு ஒழிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் இறுதியில் மீண்டும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. நீர்நிலைகளில் படகுகளில் சென்று குப்பைகளை அகற்றுதல், ஆகாய தாமரை அகற்றப்படும். சென்னையில் ஓடும் முக்கிய 3 நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படும்.

    இது தவிர 3,300 பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணி செய்யப்படுகிறது. வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.

    மேலும் கொசுக்கள் உற்பத்தி யாகும் மழை நீர் கால்வாய்களில் அடைப்புகளை திறந்து கொசு மருந்து அடிக்கப்படுகிறது. வரும் நாட்களில் கொசுக்கள் இன்னும் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதனால் அவற்றை தொடர்ந்து மருந்து அடிப்பதன் மூலம் ஒழிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன. தற்போது கூடு தலாக 600 கால்வாய்கள் கட்டப்பட்டு மொத்தம் 2,200 கால்வாய் கள் வழியாக மழைநீர் வெளியேறுகிறது.

    மழைக் காலங்களில் கொசு பொதுவாக பெருகுவது இல்லை. மழை முடிந்த பிறகு தான் அதிகளவில் உற்பத்தியாகும். மழை நீர் கால்வாய்களின் மூலம் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

    மழை நீர் கால்வாய்களில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டல்கள், டீக்கடைகள், தொழில் நிறுவனங்களின் கழிவு நீர் மழைநீர் கால்வாய்களில் விடப்படுவதால் மழை இல்லாத காலத்தில் கொசு உற்பத்திக்கு காரணமாக அமைகிறது.

    எனவே மழைநீர் கால் வாய்களில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தினால் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க முடியும். மாநகராட்சி அதிகாரிகள் மழை நீர் கால்வாய்களையும் இக்காலக் கட்டத்தில் கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • வீட்டில் பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து வீதிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    எனினும் பொது மக்களது ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்தப் பணியை முழுமையாக செயல்படுத்த முடியும். வீட்டில் குப்பைகள், பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

    எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும். பொது மக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். இந்தநிலையில் அந்த தண்ணீரை அப்புறப்படுத்துமாறு கூறினாலும், பொது மக்கள் கேட்பதில்லை. நிறைய வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் 'டயர்'களில் தண்ணீர் தேங்கி, அதில் கொசு உற்பத்தியாகிறது.

    வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற சாக்கடைகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் சாக்கடையில் குப்பை போன்றவற்றை போட்டுவிடுவதால் அங்கு கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாகி விடுகிறது. இதுபோன்ற நிலையை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • யானைகள் உடுமலை மூணாறு செல்லும் வழித்தடத்தில் இருக்கும் பசுமையான முச்செடிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன.
    • சாலையோரம் வரும் யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை வனப்பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகரித்து இருப்பதால் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருகின்றன என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை அமராவதி வனச்சரகபகுதிகளில் யானைகள், மான்கள், சிறுத்தை, புலி, கரடி, உடும்பு பாம்பு, காட்டுமாடு, சென்னாய்கள், காட்டு யானைகள் என்று ஏராளமான வசித்து வருகின்றன தற்போது பருவமழை அடிக்கடி பெய்து வருவதாலும் பருவநிலை அடிக்கடி மாறுவதால் வனப்பகுதிகளில் கொசுக்கள் அதிகரித்து யானைகளை கடித்து வருவதால் அவற்றிலிருந்து தப்பிப்பதற்காக யானைகள் உடுமலை மூணாறு செல்லும் வழித்தடத்தில் சாலையோரம் இருக்கும் பசுமையான முச்செடிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன.பகல் முழுவதும் சாலையோரம் போல வரும் யானைகளை கண்டு வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

    உடுமலை மூணார் சாலையில் காம ஊத்துபள்ளம், ஏழுமலையான் கோயில் பிரிவு ஆகிய பகுதிகளில் யானைகள் உலா வருவதால் வனத்துறையினர் வாகன ஓட்டுனர்ளை எச்சரிக்கையுடன் பயணிக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

    • மழையால் உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.
    • வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனைப்பயன்படுத்தி, விவசாயம் சார்ந்த பணிகள் வேகமெடுத்துள்ளன.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.அதேநேரம் கிராம ஊராட்சிகளில் நோய்த்தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, ஊராட்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அபேட் மருந்து தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பது போன்ற பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த கிராம ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காய்ச்சல், வயிற்றுப்போக்கு என நோய் பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டால் பொது மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×