search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள போலீஸ்"

    • பேஸ்புக் கணக்கு ஹேக் செய்திருந்தால், அந்த படங்களை சைபர் கிரைம் போலீசாரால் நீக்க முடியவில்லை.
    • படங்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேஸ்புக் நடத்தும் நிறுவனத்துக்கு கேரள போலீசார் நோட்டீசு அனுப்பினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்பு அந்த டாக்டரின் ஆபாசமான படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர்.

    இதுகுறித்து அந்த பெண் மருத்துவர், போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் கேரள சைபர் கிரைம் போலீசார், பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த படங்களை அழிக்க முயன்றனர். ஆனால் அவரது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்திருந்ததால், அந்த படங்களை சைபர் கிரைம் போலீசாரால் நீக்க முடியவில்லை.

    ஆகவே பெண்டாக்டரின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்திருந்த நபரை கண்டு பிடித்து, படங்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேஸ்புக் நடத்தும் நிறுவனத்துக்கு கேரள போலீசார் நோட்டீசு அனுப்பினர். அவ்வாறு நோட்டீசு அனுப்பும் பட்சத்தில், 36 மணி நேரதிற்குள் படங்களை நீக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது.

    ஆனால் ஒரு வாரமாகியும் பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த படங்களை நீக்கவில்லை. மேலும் போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு சரியான பதிலையும் பேஸ்புக் நிறுவனம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேஸ்புக் மீது கேரள போலீசார், குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • இரு மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்கணிப்பை தீவிரம்
    • டி.ஆர்.ஓ. தலைமையில் நடந்தது

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு,ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகை

    யில் எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகளை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு ள்ளது.

    அதன்படி உணவு கடத்தல் தடுப்புபிரிவு டி.ஜி.பி. ஆபாஷ்குமார், எஸ். பி பாஸ்ரன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டி.எஸ்.பி. முத்துக்குமார் மேற்பார்வை வில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவ்வப்போது ரேசன் அரிசி கடத்தல்வாகனங்கள் சிக்கி வருகின்றன.

    போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கூட, கடத்தல்காரர்கள் பல்வேறு வகைகளில் தங்களது தொழிலை செய்து வருகிறார்கள்.

    இதை கட்டுப்படுத்தும்வ கையில் இரு மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண் கணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் குமரி-கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோ சனை கூட்டம், மாவட்ட வருவாய் அதி காரி சிவப்பிரியாதலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) ஹரிதாஸ், உணவுகடத்தல் தடுப்புபிரிவு டி.எஸ்.பி.முத் துக்குமார், குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் பாறசாலை போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    இதில் இரு மாநில போலீசார் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தப்பி செல் லும்வாகனங்களை மீட்டு கொண்டு வருவது, குற்ற வாளிகளை கைது செய் வது உள்ளிட்டநடவடிக் கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன.

    கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது நாளாக ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். பிராங்கோ முல்லக்கல் இந்த புகார் தொடர்பான இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியதன் பெயரில் அவர் நேற்று முன்தினம் ஆஜரானார். 

    கடந்த இரண்டு நாளாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், இன்று மூன்றாவது நாளாக விசாரணை தொடர்கிறது. விசாரணையின் முடிவில் இன்று அவர் கைதாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே, ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்த பிராங்கோவை கத்தோலிக்க தலமையகமான வாடிகன் பதவி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜரான பிஷப் பிராங்கோ முல்லக்கலிடம் நாளையும் விசாரணையை தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். பிராங்கோ முல்லக்கல் இந்த புகார் தொடர்பான இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியதன் பெயரில் அவர் இன்று ஆஜரானார். 

    வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய விசாரணை முடிந்த நிலையில், அவரிடம் நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ×