search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி கடத்தலை தடுக்க குமரி, கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
    X

    ரேசன் அரிசி கடத்தலை தடுக்க குமரி, கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

    • இரு மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்கணிப்பை தீவிரம்
    • டி.ஆர்.ஓ. தலைமையில் நடந்தது

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு,ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகை

    யில் எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகளை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு ள்ளது.

    அதன்படி உணவு கடத்தல் தடுப்புபிரிவு டி.ஜி.பி. ஆபாஷ்குமார், எஸ். பி பாஸ்ரன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டி.எஸ்.பி. முத்துக்குமார் மேற்பார்வை வில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவ்வப்போது ரேசன் அரிசி கடத்தல்வாகனங்கள் சிக்கி வருகின்றன.

    போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கூட, கடத்தல்காரர்கள் பல்வேறு வகைகளில் தங்களது தொழிலை செய்து வருகிறார்கள்.

    இதை கட்டுப்படுத்தும்வ கையில் இரு மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண் கணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் குமரி-கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோ சனை கூட்டம், மாவட்ட வருவாய் அதி காரி சிவப்பிரியாதலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) ஹரிதாஸ், உணவுகடத்தல் தடுப்புபிரிவு டி.எஸ்.பி.முத் துக்குமார், குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் பாறசாலை போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    இதில் இரு மாநில போலீசார் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தப்பி செல் லும்வாகனங்களை மீட்டு கொண்டு வருவது, குற்ற வாளிகளை கைது செய் வது உள்ளிட்டநடவடிக் கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன.

    Next Story
    ×