search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணூர்"

    • பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க யஷ்வந்த்பூர் கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
    • இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, படுக்கை வசதி , பொதுப்பிரிவு, பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க யஷ்வந்த்பூர்-கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.தமிழகம், கேரளாவில் தொடர் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக, யஷ்வந்த்பூர்-கண்ணுார் இடையே(வ.எண்:06283) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நாளை காலை, 7:40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு, 8:30க்கு கண்ணுார் சென்றடையும். நாளை இரவு, 11:00க்கு கண்ணுாரில் இருந்து புறப்படும் ரயில்(06284) மறுநாள் மதியம், 1:00க்கு யஷ்வந்த்பூர் அடைகிறது. இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, 6, படுக்கை வசதி, 7, பொதுப்பிரிவு, 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பனஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துார், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், சொரணுார், திரூர், கோழிக்கோடு உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    ×