search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏலக்காய்"

    • அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்பட்டு வருகிறது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள் மற்றும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்பட்டு வருகிறது. கடலோர காவல் படையினர், இந்திய கடற்படையினர் அதனை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வந்தபோதிலும் சட்டவிரோத கடத்தல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் நேற்று இரவு இந்திய கடற்படை லெப்டினன்ட் கர்னல் விஜய்குமார் நர்வால் தலைமையில் கடலோர காவல் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் சுமார் 20 கிலோ எடை கொண்ட இரண்டு பிளாஸ்டிக் மூட்டைகள் மற்றும் சுமார் 10 கிலோ எடை கொண்ட ஒரு பிளாஸ்டிக் மூட்டையையும் கொண்டு சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது மூட்டைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த டிராவல் பேக்கையும் அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    அவர்கள் விட்டுச்சென்ற மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் சுமார் 45 கிலோ ஏலக்காய் இருந்தது. இதையடுத்து அவற்றை கைப்பற்றி அவர்கள் மண்டபம் கடலோர காவல் படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல், டிராவல் பேக்கை பரிசோதனை செய்த போது அதில் திருவள்ளுர் காரம்பாக்கம் பொன்னிநகர் சி.வி.கே. தெருவை சேர்ந் ஜான்சன் மகன் மார்ட்டின் (40) என்பவரது முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை மற்றும் ஆடைகள் மற்றும் இலங்கை பணம் 1,500 இருந்தது.

    இதுகுறித்து மண்டபம் மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான நபர்களையும் தேடி வருகின்றனர்.

    • ரூ.50 லட்சத்தை இழந்ததால் ஏலக்காய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
    • விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் டி.சி. கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 52 ) ஏலக்காய் வியாபாரி. இவர் பங்குச்சந்தை வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் தனது பூர்வீக வீட்டை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனை எண்ணி மிகவும் வேதனை அடைந்த அருண்குமார் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழப்பதற்கு நான் மட்டும்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அவரது மனைவி கார்த்திகா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏலக்காய் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
    • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தோட்டங்கள் தேவியாறு, காவு, நகரை யாறு, பச்சையாறு குளிராட்டி, சேத்தூர், பூலாமலை, கோட்டமலை உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன.

    இந்த தோட்டங்களில் பிரதானமாக ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இதுதவிர காப்பி, மிளகு, கிராம்பு போன்றவைகளும் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தோட்டங்கள் மிகவும் அதிகமான ஏலக்காயை உற்பத்தி செய்து விருதுநகர் உள்பட பல்வேறு சந்தைகளுக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

    ஏலக்காய் தோட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். ராஜபாளையத்தை தலைமை இடமாக கொண்டு ஏலக்காய் வாரியம் செயல்பட்டு வந்தது. பின்னர் அது ஸ்பைசஸ் போர்டு என்று மாற்றப்பட்டது. ஏலக்காய் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகள், மானிய விலையில் உரம், பூச்சி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையை முதலில் சாம்பல் நிற அணில் சரணாலயமாக மாற்றி ஏலக்காய் தோட்டத்திற்குள் தொழிலாளர்கள் மற்றும் யாரும் உள்ளே நுழையாதபடி வனத்துறையினர் கெடுபிடி செய்து வந்தனர். அதன் பின்னர் தற்போது மேகமலை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டு யாருமே உள்ளே நுழைய முடியாத அளவிற்கு வனத்துறையினர் கடுமையாக சட்ட திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏலத் தோட்டத்திற்குள் உரிமையாளர்கள் சென்று பார்க்கவோ தொழிலாளர்களை வைத்து வேலை செய்யவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தவிர ஏலக்காய் தோட்டத்திற்குள் முன்பு பாதுகாப்புடன் செல்வதற்கு இருந்து வந்த நிலை மாறி தற்போது 2பேர் அல்லது 3 பேர் மட்டும் செல்ல அனுமதி கிடைத்து வருவதால் வழியில் கரடி, யானைகள் மற்றும் பாம்பு குறுக்கிடுவதால் உள்ளே செல்ல மக்கள் அஞ்சுகிறார்கள். மேலும் மிகவும் கடினமான சூழலில் 7 முதல் 8 கி.மீட்டர் வரை மலை மீது ஏறி சென்று விவசாய பணிகளை செய்வதற்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை.

    ஏலக்காய் தோட்டங்களில் விளையும் பொருட்களை கீழே கொண்டு வருவதற்கு சுமந்து வருவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இதன் காரணமாக ஏல தோட்டங்கள் மிகவும் நலிவடைந்து காணப்ப டுகின்றன. புதர் மண்டி கிடக்கும் அவலம் நிலவுகிறது. களை எடுத்தல், பூச்சி மருந்து அடித்தல் போன்ற பணிகளை செய்யஆட்கள் கிடைக்காத நிலை தொடர்கிறது.

    எல்லாவற்றிற்கும் மேலாக யானை கூட்டங்கள் ஏலக்காய் தோட்டத்திற்குள் புகுந்து ஏலச் செடிகளை நாசம் செய்தும், அங்குள்ள இதர குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரிசி போன்ற உணவுப் பொருட்களை நாசம் செய்தும் வருவதால் தொழிலாளர்கள் யாரும் அங்கு தங்குவதற்கு முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பைசஸ் போர்டு இங்கிருந்து மாற்றப்பட்டு போடி கொண்டு செல்லப்பட்டது.

    இங்குள்ள ஏலத்தோட்ட விவசாயிகள் ஆலோசனை பெறுவதற்கு நேரடியாக பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இயலாத நிலை தற்போது உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விவசாயிகளின் ஏலத் ேதாட்ட விவசாயத்தை பாதுகாக்கவும், அதை மேம்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஏலத்தோட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சபரிமலையில் நேற்று மாலை அரவணை விற்பனை நிறுத்தப்பட்டது.
    • ஏலக்காய் இல்லாத அரவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு பணியும் தொடங்கி விட்டது.

    திருவனந்தபுரம், ஜன. 12-

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் முக்கிய பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் இதனை வாங்கி வீட்டுக்கு வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இதனால் அரவணை பிரசாதம் டின்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் பிரசாதம் வாங்குவதை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடு இல்லாமல் இருக்க லட்சக்கணக்கான அரவணை டின்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு அதிக வருவாயும் வருகிறது.

    இந்த நிலையில் அர வணையில் சேர்க்கப்ப டும் ஏலக்காய் தரம் குறைந்திருப்பதாகவும் அதில் பூச்சிக்கொல்லி மருந்து அளவு அதிகமாக இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக தனியார் நிறுவனம் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அரவணை பிரசாதத்தை ஆய்வுக்கு உட்படுத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் நடத்த ப்பட்ட ஆய்வில், அரவணை தயாரிப்பில் தரமற்ற ஏலக்காய் பயன் படுத்தி இருப்பதும், அதில், பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது.

    இதற்கிடையில் 350 கிலோ அரவணையில் 750 கிராம் ஏலக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது மொத்தப் பொருட் களில் வெறும் 0.20 சதவீதம் தான் என தெரிவிக்கப்ப ட்டது. மேலும் அர வணை 200 டிகிரிக்கு மேல் வெப்பநிலையில் தயாரிக்கப்படுவதால் அது தீங்கு விளைவிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஓத்தி வைக்கப்பட்டது.

    அதே நேரம் தரமற்ற ஏலக்காயில் தயாரிக்கப்பட்ட அரவணை விற்பனையை நிறுத்துமாறு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், பிஜி அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து சபரிமலையில் நேற்று மாலை அரவணை விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 6½ லட்சம் டின் அரவணைகள் வீணானது. இதன் மதிப்பு சுமார் ரூ.6½ கோடியாகும்.

    இதுகுறித்து திருவிதா ங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஆனந்த கோபன் கூறுகையில், ஐகோர்ட் உத்தரவுப்படி ஏற்க னவே தயாரித்து இருப்பு வைக்கப்ப ட்டிருந்த அரவணை விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. ஏலக்காய் இல்லாத அரவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு பணியும் தொடங்கி விட்டது. 2½ லட்சம் டின்கள் அர வணையை ஓரே நேரத்தில் தயார் செய்யலாம். ஆர்கானிக் ஏலக்காயை கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். அப்படி கொள்முதல் செய்யப்பட்டால், அது அரவணை தயாரிக்கப் பயன்படுத்தப்படும். ஆனால் நாம் முதலில் தரத்தை சரி பார்க்க வேண்டும் என்றார்.

    அதன்படி புதிதாக ஏலக்காய் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட அரவணை இன்று முதல் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

    போடியில் ஏலக்காய் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    போடி:

    போடி முந்தல்சாலையில் இந்திய நறுமண பொருட்கள் வாரியம் சார்பில் ஏலக்காய் ஏல மையம் உள்ளது. இங்கு விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த ஏலக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். போடி, கம்பம், பட்டிவீரன்பட்டி, விருதுநகர், மும்பை, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் இவற்றை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    ஏலக்காய் ஆக்‌ஷன் கம்பெனி நடத்திய ஏலத்தில் 82,314 கிலோ ஏலக்காய் விற்பனையானது. ஒருகிலோ ரூ.2253க்கு உச்சபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டது. சராசரி விலையை விட ரூ.1230 கூடுதலாக விற்பனை யானதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஒரே நாளில் ரூ.603 வரை விலை உயர்வு ஏற்பட்டதால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். கேரளாவில் புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் ஏலக்காயை பதிவு செய்வதில் குழப்பம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், ஏலக்காய் வியாபாரிகள் ஆக்‌ஷன் சென்டரில் எடுத்த ஏலக்காயை மீண்டும் ஏலம் எடுத்து பதிவு செய்வதால் கூடுதல் விலை ஆகிறது. ஏலக்காய் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்காத நேரத்தில் இந்த விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது.

    மேலும் அதிகவிலையில் தொழில்செய்ய அச்சமாக உள்ளது. திடீரென விலை குறைந்தால் கடும் நஷ்டம் ஏற்படும். இதனால் சில வியாபாரிகள், பங்குதாரர்கள் மொத்தமாக வாங்கி திடீரென விலையை உயர்த்தி விடுகின்றனர். இதனால் சிறுவியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே ஏலம் விடப்பட்ட ஏலக்காய்களை மீண்டும் பதிவு செய்ய மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்றனர்.

    ×