search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபரிநீர்"

    • மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கொட்டி தீர்த்து வந்த மழை தற்பொழுது சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப் பட்டுள் ளது. சிற்றாறு 1, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் கோதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்துக்கொட்டி வருகிறது. சிறுவர் பூங்காவை மூழ்க டித்து தண்ணீர் செல்வதால் அருவியில் குளிப்பதற்கு இன்று 7-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தடை விதிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணை நீர்மட்டம் 54.12 அடி எட்டி யதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீரை உபரிநீராக வெளியேற்றி வருகிறார்கள்.

    தற்பொழுது அணைக்கு 26 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 26 கன அடி தண்ணீரையும் உபரி நீராக திறந்து விடப்பட் டுள்ளது. அணையின் நீர்மட் டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.98 அடி யாக உள்ளது. அணைக்கு 485 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 106 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.29 அடியாக உள்ளது. அணைக்கு 555 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.07 அடியாக உள்ளது. அணைக்கு 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 536 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் தொ டர்ந்து முழு கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    அணையில் இருந்து நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை
    • முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நிரம்பி வழிகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

    மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி உள்ளது. அணைகள், குளங் கள் நிரம்பி உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகள் மற்றும் குளங் கள் நீர்மட்டத்தை கண் காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ சாணி அணை பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து அணை யில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீரின் அளவையும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அதிகரித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று அணையிலிருந்து வெளி யேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட் டுள்ளது.

    அணையில் இருந்து 401 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 355 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு 1 அணை யிலிருந்தும் 129 கன அடி உபரிநீரும், 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழி யாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் இன்று 3-வது நாளாக குளிக்க தடை விதிக் கப்பட்டுள்ளது. அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டதால் சுற்றுலா பணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக உள்ளது. அணைக்கு 595 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது. அணைக்கு 460 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றார்-1 அணை யின் நீர்மட்டம் 15.81 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.91 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நிரம்பி வழிகிறது.

    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
    • 2-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. பூதப்பாண்டி, சிவலோகம், கன்னிமார், தக்கலை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு என அனைத்து பகுதிகளி லும் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.15 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 774 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் மதகுகள் வழியாக 503 கன அடி தண்ணீரும், உபரிநீராக 107 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 73.21 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 707 கன அடி தண்ணீர் விநாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணைக்கு 190 கன அடி நீர்வரத்து உள்ளதால் மதகுகள் வழியாக 100 கன அடியும், உபரிநீராக 129 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன.

    இதனால் இந்த அணை களுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்ப டுகிறது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோதையாறு, பழையாறு, தாமிரபரணி, வள்ளியாறு என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. எனவே அங்கு கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 2-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 15.4, பெருஞ்சாணி 22, சிற்றார் 1-15.8, சிற்றார் 2-17.8, களியல் 12.2, கொட்டாரம் 26.4, குழித்துறை 10, மயிலாடி 26.2, புத்தன அணை 17.8, தக்கலை 23.2, பாலமோர் 15.4, மாம்பழத்துறையாறு 17, திற்பரப்பு 14.4, அடையாமடை 8, முள்ளங்கினாவிளை 29, ஆணைக்கிடங்கு 17.6, முக்கடல் 15.6, பூதப்பாண்டி 10.2, நாகர்கோவில் 23.4, ஆரல்வாய்மொழி 16.2.

    • குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புத்தேரி ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது.
    • ஏரி தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலை அருகே புத்தேரி ஏரி உள்ளது. ஆரம்பத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த ஏரி தண்ணீர் தற்போது சுற்றி உள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்திற்காக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பெய்துவரும் மழை காரணமாக புத்தேரி ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இந்த ஏரியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புத்தேரி ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்லாவரம், நாகல்கேனி பகுதியை சுற்றி உள்ள லெதர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் ஜி.எஸ்.டி. சாலையை கடந்து புத்தேரி ஏரியில் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன்காரணமாக கடந்த சில நாட்களாக புத்தேரி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் இடம் நுரையாக காணப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கிறார்கள்.

    தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனகழிவு நீரும், சுற்றி உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரும் ஏரியில் கலப்பதால் இந்த பிரச்சினை உருவாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    எனவே தாம்பரம் மாநாகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக ஏரி தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    புத்தேரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சுமார் ரூ.40 லட்சம் செலவில் மேம்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொது மக்கள் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்கள் ஏரி கரையில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இந்த ஏரியை சுற்றி வசிப்பவர்களுக்கு பல சுகாதார பிரச்சினைகள் உள்ளது.

    புத்தேரி ஏரியில் இருந்த வெளியேறும் உபரி நீர் கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரிக்கும் செல்கிறது. எனவே புத்தேரி ஏரி தண்ணீரை மாசுபடாமல் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, புத்தேரி ஏரியை சுற்றி உள்ள பகுதியில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர் ஏரியில் கழிவுநீர் கலப்பது முழுவதும் தடுக்கப்படும். தற்போது ஏரியில் கலந்து வரும் தண்ணீர் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பருவ மழையில் பூண்டி ஏரி நிரம்பும் போது கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும்.
    • கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும் குடிநீருக்கு பயன்படுத்தும் வகையிலும் உபரிநீரை தேக்கி வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகரப் பகுதியில் 2035-ம் ஆண்டுக்குள் தினசரி குடிநீர் தேவை 2,522 மில்லியன் லிட்டராக உயரும் என்று அதிகாரிகள் கணக்கிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் ஆதாரங்களை அதிகரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.

    பருவ மழையில் பூண்டி ஏரி நிரம்பும் போது கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும். இதனால் பல லட்சம் கனஅடி உபரி நீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. மேலும் அதிக அளவு உபரி நீர் திறக்கப்படும்போது கரையோர குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பலத்த வெள்ள சேதமும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும் குடிநீருக்கு பயன்படுத்தும் வகையிலும் உபரிநீரை தேக்கி வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஆய்வுகள் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீரை சேமித்து வைக்க பூண்டி ஏரியில் இருந்து மேல்நிலை மற்றும் கீழ்நிலை பகுதிகளில் மொத்தம் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள மானாவூர் ரெயில் பாதை மற்றும் காவேரிப்பாக்கம் குளம், பட்டரை பெருமந்தூர் இடையே 2 இடங்களில் தடுப்பு அணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    பூண்டி நீர்த்தேக்கத்தின் கீழ்நிலையில் இருளிப்பட்டு தடுப்பணைக்கும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கும் இடையிலும், பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் அணைக் கட்டுக்கு இடையே 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பணிக்காக ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    உபரி நீரை தேக்குவதன் மூலம் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதுடன், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல், வட சென்னையில் சடையங் குப்பம்-எடையஞ்சாவடியில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் 600 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்படும் இந்த ஆய்வு இன்னும் 6 மாதங்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
    • திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.

    அவினாசி :

    ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்ற பெயரில் அத்திக்கடவில் இருந்து அவினாசிக்கு வாய்க்கால் வெட்டி, அதன்மூலம் வறண்ட பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளை நீரால் நிரப்பும் திட்–டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் அறிவிப்பாகவே பல ஆண்டுகளாக இருந்தது. தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

    அத்திக்கடவில் இருந்து கால்வாய் வெட்டுவதற்கு பதிலாக, ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம், காலிங்கராயன் அணைக்கட்டை ஒட்டிய பகுதியில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீர் எடுக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஏரி, குட்டை, குளங்களில் நீர் நிரப்பும் வகையில் இந்த பணி தொடங்கியது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றதும், இந்த பணியை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதுமட்டுமின்றி திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவை 15 ஏரிகள், 243 குட்டைகள் என 258 நீர்நலைகள், திருப்பூரில் 43 ஏரிகள், 385 குட்டைகள் என 428 நீர்நிலைகள், ஈரோடு மாவட்டத்தில் 16 ஏரிகள், 343 குட்டைகள் என்ற 359 நீர்நிலைகள் இந்த திட்டத்தில் எடுக்கப்பட்டன. இதன் படி நீர்வளத்துறை ஏரிகள் 32, ஒன்றிய ஏரிகள் 42, குட்டைகள் 971 என மொத்தம் 1,045 நீர்நிலைகள் மூலம் நிலத்தடி நீர் செறிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மொத்தம் 24 ஆயிரத்து 487 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். ஈரோட்டில் மட்டும் 8 ஆயிரத்து 767 ஏக்கர் பயன்பெற உள்ளது.

    ஏரி–கள் குளங்களை இணைக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பவானி ஆற்று உபரி தண்ணீரை நீரேற்றம் செய்ய பவானி காலிங்கராயன்பாளையம், நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் என 6 இடங்களில் தலைமை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீரேற்று நிலையங்களை இணைக்கும் பிரதான குழாய்கள் 106.8 கிலோ மீட்டர் அளவுக்கும், ஏரிகள், குளங்களை இணைக்கும் கிளை குழாய்கள் 958.5 கிலோ மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்பட உள்ளன.

    சுமார் 6 மாத காலமாக திட்டப்பணிகள் எப்போது முடியும் என்ற கேள்வி இருந்த நிலையில் அத்திக்கடவு- அவினாசி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார்.

    பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:- அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் 99 சதவீதம் நிறைவு பெற்று விட்டது. முன்னதாகவே இந்த பணிகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் உபரி நீர் வருகை குறைவாக இருந்ததால் சோதனை ஓட்டம் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இன்னும் 5 நாட்களில் தேவையான அளவு உபரி நீர் கிடைக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே சோதனை ஓட்டப்பணிகள் விரைவாக முடிக்கப்படும். இதன் மூலம் அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சோதனை ஓட்டமானது ஒவ்வொரு தலைமை நீரேற்று நிலையம் வாரியாக நடைபெறுகிறது. அந்தந்த பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் செலுத்தி, கசிவுகள், உடைப்புகள் சரி செய்யப்பட்டு முழுமை செய்யப்படுகின்றன. தற்போதைய திட்டத்தின் படி 1045 குளம், ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட குளங்களில் தடையின்றி தண்ணீர் சேர்க்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இன்னும் கூடுதலாக குளங்களை இந்த திட்டததில் சேர்க்க கோரிக்கைகள் வரப்பட்டு இருக்கின்றன. இதற்காக தனியாக திட்ட மதிப்பீடு தயார் செய்து வருங்காலங்களில் நீட்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

    • மழை குறைந்ததையடுத்து நடவடிக்கை
    • நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பியுள்ளது.மீதியுள்ள 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    அணைகளின் நீர்மட்டம் நிரம்பி வழியும் நிலையில் மழையோர பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வந்ததையடுத்து பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டது. கடந்த 3 நாட்களாக உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வந்ததால் கோதை ஆறு குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. மலையோர பகுதி களிலும், அணை பகுதி களிலும் மழை குறைந்துள்ள தையடுத்து பேச்சிபாறை அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரி நீர் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக மட்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    பேச்சிபாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதையடுத்து கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந் துள்ளது. திற்பரப்பு அருவி யிலும் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. என்றாலும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்றும் அனுமதி வழங்கவில்லை.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43. 73 அடியாக உள்ளது. அணைக்கு 850 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 788 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 73.54 அடியாக உள்ளது. அணைக்கு 214 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.68 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.77அடியாகவும் பொய்கை அணை நீர்மட் டம் 17.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 49.38 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.70 அடிைய எட்டியுள்ளது.

    அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதை எடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மழை குறைந்ததையடுத்து நடவடிக்கை
    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. கோழிபோர்விளை, குருந்தன்கோடு, ஆணைக்கிடங்கு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அணை பகுதிகளில் மழை சற்று குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு 1084 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.60 அடியாக உள்ளது.

    அணைக்கு 703 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 381 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும் 1084 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.31 அடியாக உள்ளது.

    அணைக்கு 401 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .பேச்சி பாறை அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆறு குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் இன்றும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க முதல்வர் வேட்பாளராக ராமதாஸை முன்னிறுத்த உள்ளோம்.
    • ராஜராஜசோழன் இந்துவாக இருந்தால் என்ன, மராட்டியராக இருந்தால் என்ன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாக்கம்.சக்திவேல் தலைமை வகித்தார்.வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க.அய்யாசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி. பழனிச்சாமி, மாவட்ட தலைவர் அன்பழகன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் ஐயப்பன், முன்னாள் சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் மணி, மாநில செயற்குழு உறுப்பினர் தேனூர்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் துரை.முத்து வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது பேசிய அவர் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க முதல்வர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்னிறுத்தி நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம். ஆகவே நாங்கள் இப்பொழுதே பிரச்சாரத்தை தைரியமாக துவங்குவோம்.

    வன்னியர்களுக்கான 10.5சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு ராமதாஸ் அறிவிக்கும் அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்றார்.

    மேலும் ராஜராஜ சோழன் இந்துவாக இருந்தால் என்ன, மராட்டியராக இருந்தால் என்ன.

    சோழன் நாட்டை ஆண்டான்.

    அவர் இந்துவா என்ற சர்ச்சையை ஏன்? கிளப்ப வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு உபரி நீர் சென்று கடலில் கலந்தது அதனைப் பற்றி யாரும் பேசவில்லை.

    ராஜராஜ சோழன் இந்துவா என்று ஏன் பேச வேண்டும் என்றார்.

    நிறைவில் சீர்காழி நகர வன்னியர் சங்க தலைவர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    • நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நடவடிக்கை
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு கணிச மான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து அணை யின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யில் இருந்து உபரி நீர் இன்று மதியம் 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் களியல், திற்பரப்பு அருவி மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    திற்பரப்பு அருவியில் வெள்ளம் அதிகளவு வரும் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    48அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.64 அடியாக இருந்தது. அணைக்கு 1560 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 575 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 1000 கனஅடி உபரிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.27 அடியாக உள்ளது .அணைக்கு 1127 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.63 அடியாக உள்ளது. அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.73 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

    • 120 ஏக்கர் வரை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது‌.
    • 24 ஆண்டுகளுக்கு முன் மழைநீரால் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கத்தாங்கன்னி பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் கத்தாங்கன்னி குளம் அமைந்துள்ளது‌. கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் இக்குளம் வெட்டப்பட்டு, நொய்யல் ஆற்றில் அணைப் பாளையம் அருகே கற்களால் கட்டப்பட்ட தடுப்பணை மூலம் பருவமழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் வெட்டி குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் பாசனத்துக்கு அப்போது தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இக்குளத்தின் மூலம் சுமார் 120 ஏக்கர் வரை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது‌.

    பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கத்தாங்கன்னி குளம் இறுதியாக கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் மழைநீரால் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி உள்ளது. திருப்பூர் தொழில் வளர்ச்சி காரணமாக சாய நீர் தொடர்ச்சியாக சுத்திகரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டதால், ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்கள் மற்றும் பாசன நிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 2009-ஆம் ஆண்டு குளங்களுக்கு நீர் செல்வதை தடுக்க நொய்யல் தடுப்பணைகள் உடைக்கப்பட்டு குளத்துக்கு நீர் வருவது தடுக்கப்பட்டது.

    கடந்த 2010 க்கு பின் குளங்களுக்கு தண்ணீர்‌ திறக்கப்படாமல் இருந்த நிலையில், திருப்பூர் சாய ஆலைகள் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் நொய்யல் ஆற்றில் சாய நீர் கலப்பது குறைந்தது. இதனை அடுத்து மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வரும் மழை நீரை குளங்களுக்கு திறக்கக் கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக நொய்யலில் வரும் வெள்ள நீரின் டிடிஎஸ்.ஐஅளவீடு செய்து, மழைநீர் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களுக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை நீர் சென்று கொண்டிருக்கும் நிலையில்,நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் 23 தடுப்பணைகள் வழியாக 31 குளங்களுக்கு தண்ணீர் சென்று வருகிறது.

    இதில் இறுதி 31-வது குளமான கத்தாங்கன்னி குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழைநீர் திறக்கப்பட்டதால் குளத்தின் மொத்த உயரமான 18 அடியை நோக்கி நீர் வேகமாக நிரம்பி வந்தது.நேற்று காலை குளம் முழுமையாக நிரம்பியதை அடுத்து, வெள்ளப் போக்கி பகுதி வழியாக 24 ஆண்டுக்கு பின் உபரி நீர் வெளியேறியது. இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் உபரி நீர் வெளியேறுமிடத்தில் மலர் தூவி தண்ணீருக்கு மரியாதை செய்தனர். பல ஆண்டுக்கு பின் கத்தாங்கன்னி குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதை சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயி பொன்னுசாமி கூறுகையில், பல ஆண்டுக்கு பின் மழை நீரால் குளம் முழுமையாக நிரம்பி வழிகிறது. இதன் மூலம் இப்பகுதியில் பருத்தி, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட உள்ளோம். குளம் முழுமையாக நிரம்பி வழிவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    ×