search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாமாபாத்"

    • அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்.
    • வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் உள்பட அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும், தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் விழிப்புடன் செயல்படவும், அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நகரம் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலம் முழுவதும் அங்கு அத்தியாவசியமற்ற மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பயணங்களை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இஸ்லாமாபாத்தின் அமைதியை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நகர துணை கமிஷனர் இர்பான் நவாஸ் மேமன் தெரிவித்துள்ளார்.

    நெதர்லாந்தில் முகம்மது நபி குறித்து எம்.பி ஒருவர் நடத்தும் கார்டூன் போட்டிக்கு பாகிஸ்தான் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    நெதர்லாந்தில் வலதுசாரி கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கீர்ட் வில்டெர்ஸ் முகம்மது நபி குறித்து கார்டூன் போட்டி நடத்த திட்டமிட்டிருந்தார். போட்டியில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும், கார்டூன்களை பாராளுமன்றத்தில் உள்ள தனது அறையில் வைக்க இருப்பதாகவும் வில்டெர்ஸ் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த கார்டூன் போட்டிக்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று கூடிய அந்நாட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இது தொடர்பாக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

    இதனை அடுத்து பேசிய பிரதமர் இம்ரான் கான், இது போன்ற செயல்களால் முஸ்லிம்கள் எவ்வளவு மனவேதனை அடைவார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை என கூறினார். மேலும், ஆளும் பிடிஐ கட்சி நெதர்லாந்து எம்.பி.ஐ கண்டித்து லாகூர் முதல் இஸ்லாமாபாத் வரை கண்டன பேரணி நடத்த உள்ளனர். 


    கீர்ட் வில்டெர்ஸ்

    இதற்கிடையே, வில்டெர்ஸின் கார்டூன் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்து வெளியுறவு மந்திரியிடம் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி பேசியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    மேலும், ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலும் இது தொடர்பாக முறையிடப்படும் எனவும் குரேஷி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப்பின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கப்பட்டதை ரத்து செய்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. தற்போது அவர் துபாயில் தஞ்சமடைந்துள்ளார். பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியததால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 

    இந்நிலையில், அந்நாட்டு தேசிய தகவல் பதிவு மையத்தின் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில், முஷாரப்பின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. முஷாரப் நாடு திரும்ப வேண்டும், வழக்கை சந்திக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.
    ×