search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலோக் வர்மா"

    சிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியதை அடுத்து இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்க உள்ளது. #CBI #RanjanGogoi #SC
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

    இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவை மத்திய அரசு நியமித்தது.

    இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக்வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும் அலோக்வர்மா குறித்து இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர் நிலை குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்ற 2 நாட்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலை குழு அறிவித்தது.

    அதனை தொடர்ந்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் கடந்த 11-ந்தேதி மீண்டும் பொறுப்பு ஏற்றார்.

    அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார்.


    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக காமன்காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ்கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீரென விலகினார்.

    புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இடம் பெற்று இருப்பதால் இந்த வழக்கை தன்னால் விசாரிக்க முடியாது என்று கூறி அதில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகாய் விளக்கம் அளித்தார்.

    நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கை வருகிற 24-ந்தேதி வேறு அமர்வு விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். #CBI #RanjanGogoi #SC
    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அலோக் வர்மா டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். #AlokVarma #CBIDirector
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர்.

    இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.



    இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும், ஊழல் விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பையடுத்து அலோக் வர்மா இன்று காலை டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #AlokVarma #CBIDirector
    சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்பதால் ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #AlokVerma #Rafaleprobe #Rahulgandhi
    புதுடெல்லி:

    மத்திய அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  23-ம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா அந்தப் பதவியில் தொடர சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு வெளியானதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றம் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. இயக்குனர் அலோக்  வர்மா தொடரவிருந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் சுப்ரீம் கோர்ட்டால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். நீதி நிலைநாட்டப்பட்டதன் மூலம் எங்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.


    அவர்கள் ரபேல் விவகாரத்தில் இருந்து ஓடிப்போக முடியாது. அது நடக்காது. மக்கள் மன்றத்தில் விவாதம் நடத்தாமல் மோடி ஓடினார். ரபேல் விவகாரத்தில் உண்மை இருப்பதால் உண்மையிடம் இருந்து யாரும் தப்பியோடி விட முடியாது.

    ரபேல் ஒப்பந்தத்தில் மக்களின் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து தனது நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்தது சந்தேகத்தின் நிழல் துளிகூட இல்லாமல் இந்த விசாரணையில் தெரியவரும். அடுத்து இனி என்ன நடக்கும்? என்று பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CBIDirector #AlokVerma #Rafaleprobe #CBIenquiry #Rahulgandhi #AnilAmbani
    மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா அந்தப் பதவியில் தொடர சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #CBIDirector #AlokVerma
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இதைதொடர்ந்து, அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எடுத்த இந்த நடவடிக்கையால் அவரை கட்டாய விடுப்பில் வைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது.

    சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்கி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு உத்தரவிட்டது

    எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடத்திவரும் விசாரணை முடிவடையும்வரை அவர் கொள்கை அடிப்படையிலான எவ்விதமான முக்கிய முடிவும் எடுக்கக்கூடாது என கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

    இவ்விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட தேர்வு குழுவின் முடிவுக்கு விட்டிருக்கலாம் எனவும் கோர்ட் சுட்டிக்காட்டியது.

    இன்றைய தீர்ப்பு தொடர்பாக டெல்லி போலீசாருக்கான சிறப்பு சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் உயரதிகாரம் கொண்ட குழு இன்னும் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வரும் 31-ம் தேதியுடன் தனது இரண்டாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அலோக் வர்மா இந்த உத்தரவு மூலம் அதுவரை மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  #CBIDirector  #AlokVerma 
    சி.பி.ஐ. இயக்குநருக்கு லஞ்சப்பணம் கைமாறிய விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். #Delhicourt #ManojPrasad #ManojPrasadbail #briberycase
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநராக முன்னர் இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். லஞ்சப்பணம் கைமாறிய இவ்விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை விசாரணை காவலில் அடைத்து வைத்திருந்தனர்.

    ராகேஷ் அஸ்தானா

    தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனோஜ் பிரசாத் முன்னர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்நிலையில்,  மனோஜ் பிரசாத்தை இன்று ஜாமினில் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி சந்தோஷ் ஸ்நேஹி மான் உத்தரவிட்டுள்ளார். #Delhicourt #ManojPrasad #ManojPrasadbail #briberycase
    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். #AlokVerma #CBIDirector #SupremeCourt
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக தலையிட்டது. அவர்கள் 2 பேரது அதிகாரத்தையும் பறித்து விடுப்பில் அனுப்பியது. சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக எம். நாகேஸ்வரராவை நியமித்தது.



    மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

    அந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. அலோக் வர்மாவுக்காக மூத்த வக்கீல் பாலி நாரிமன், மத்திய அரசுக்காக அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்காக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

    நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிவுக்கு வந்தது. தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். #AlokVerma #CBIDirector #SupremeCourt 
    பதவி நீக்கத்தை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #CBI #CVC #AlokVerma
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நீதிபதி பட்நாயக் மேற்பார்வையில் மத்திய ஊழல் தடுப்பு குழு ஒன்றை நியமித்து கடந்த 26-10-2018 சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.

    விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் வழக்கறிஞர் துஷார் மேத்தா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு மறுவிசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.



    இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விசாரணை அறிக்கையின் நகலை சீலிட்ட உறையில் வைத்து அலோக் வர்மாவிடம் வழங்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.

    இதுவரை பெறப்பட்ட விசாரணை அறிக்கையில் காணப்படும் சில விபரங்கள் திருப்திகரமாகவும், சில அதிருப்தியான வகையிலும் காணப்படுவதால் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த அறிக்கை தொடர்பான தனது பதிலை தெரிவிக்குமாறு அலோக் வர்மாவை அறிவுறுத்தி, மறுவிசாரணையை ஒத்திவைத்தனர். அலோக் வர்மா தனது பதிலை எழுத்துப்பூர்வமாக நேற்று தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ‘உங்களுக்கு எல்லாம் விசாரணையே தேவை இல்லை என்று கருதுகிறோம்’ என்று கடுமையான கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இவ்வழக்கின் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #CBI #CVC #AlokVerma
    சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது. #CBI #CVC #AlokKumar #CBIDirector
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நீதிபதி பட்நாயக் மேற்பார்வையில் மத்திய ஊழல் தடுப்பு குழு ஒன்றை நியமித்து கடந்த 26-10-2018 சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.


    இந்நிலையில், விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் வழக்கறிஞர் துஷார் மேத்தா இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு மறுவிசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #CBI #CVC #AlokKumar #CBIDirector
    ஊழல் புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியது சட்டவிரோதம் என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டிருப்பதாகவும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். #CBIDirector #AlokVerma
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் செல்லும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. தற்காலிக இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமனம் செய்யப்பட்டார்.

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா விசாரணை நடத்த தகவல்களை சேகரித்ததால் தான் அவர் பதவி பறிக்கப்பட்டதாக ராகுல் தெரிவித்தார்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் பதவி நீக்கம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை காங்கிரஸ் நாடி உள்ளது. காங்கிரஸ் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பும் மத்திய அரசின் முடிவு சட்ட விரோதமானது என்றும், சிபிஐ இயக்குனர் பதவி நீக்கம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக கார்கே கூறியதாவது:-

    பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட கமிட்டி மட்டும்தான் சிபிஐ இயக்குனரை நியமிப்பது குறித்தோ, நீக்குவது குறித்தோ முடிவு செய்ய வேண்டும். சிபிஐ இயக்குனரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்தது சட்டவிரோதம். 

    அதுமட்டுமல்லாமல், கமிட்டியில் உள்ள மூன்று பேரையும், அதாவது பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் என்னை அழைத்து ஆலோசனை நடத்தி முடிவு செய்திருக்க வேண்டும். கமிட்டியின் ஒப்புதல் இல்லாமல் இரவோடு இரவாக அவரை (சிபிஐ இயக்குனர்) காலவரையற்ற விடுப்பில் செல்லும்படி உத்தரவிட்டுள்ளனர். 

    இது சிபிஐ சட்ட விதிகளை மீறிய செயலாகும். இந்த விஷயத்தில் மத்திய ஊழல் கண்காணிப்பகமும் சட்டத்தை மீறி உள்ளது. இதன்மூலம் தன்னாட்சி அமைப்புகள் மீது பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிடுவது தெளிவாகி உள்ளது. அதனால்தான் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார். #CBIDirector #AlokVerma
    சிபிஐ இயக்குனர் நீக்கம் செய்யப்பட்டதால் அவரை பணியில் அமர்த்த கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #congress #cbidirector #supremecourt

    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சுமத்தினார்கள். இதையடுத்து கடந்த மாதம் 24-ந்தேதி அவர்கள் இருவரையும் மத்திய அரசு அதிரடியாக பதவி நீக்கம் செய்தது.

    சி.பி.ஐ. புதிய இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமனம் செய்யப்பட்டார்.

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா விசாரணை நடத்த தகவல்களை சேகரித்ததால் தான் அவர் பதவி பறிக்கப்பட்டதாக ராகுல் தெரிவித்தார்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் பதவி நீக்கம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை காங்கிரஸ் நாடி உள்ளது. காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர் மல்லிகார்ஜுனகார்கே இன்று சுப்ரீம்கோர்ட்டில் இது தொடர்பாக மனு செய்துள்ளார்.


    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டது சட்ட விரோதமாகும். இந்த முடிவு தவறான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு துறை தவறாக செயல்பட்டு உள்ளது.

    எனவே சி.பி.ஐ. இயக்குனர் பதவி நீக்கம் ரத்து செய்ய வேண்டும். அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. #congress #cbidirector #supremecourt

    ஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாரை ரொக்க ஜாமினில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. #CBIDSP #DevenderKumar #DevenderKumarbail
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய  சி.பி.ஐ.  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.  தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கைதான டி.எஸ்.பி. தேவேந்திர குமாரை கடந்த 23-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக்கொண்டனர்.

    இதைதொடர்ந்து, அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காவல் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து தேவேந்திர குமார் மற்றும் இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு தேவேந்திர குமார் முன்னர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி 50 ஆயிரம் ரூபாய் சொந்தப் பணம் மற்றும் அதே தொகைக்கான மற்றொருவரின் காப்புறுதியில் தேவேந்திர குமாரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.  #CBIDSP #DevenderKumar #DevenderKumarbail  
    ஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #CBIDSP #DevenderKumar #DevenderKumarcustody
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய  சி.பி.ஐ.  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.  ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா டெல்லி நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவாகும் வரை  ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து, மறுவிசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    நேற்று நடைபெற்ற மறுவிசாரணையின்போதும் ராகேஷ் அஸ்தானா மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதற்கிடையில், பிரபல தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சித்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.


    இந்நிலையில், கைதான டி.எஸ்.பி. தேவேந்திர குமாரை கடந்த 23-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக்கொண்டனர்.

    இதைதொடர்ந்து, அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து தேவேந்திர குமார் மற்றும் இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #CBIDSP #DevenderKumar #DevenderKumarcustody
    ×