search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றார்
    X

    சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றார்

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அலோக் வர்மா டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். #AlokVarma #CBIDirector
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர்.

    இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.



    இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும், ஊழல் விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பையடுத்து அலோக் வர்மா இன்று காலை டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #AlokVarma #CBIDirector
    Next Story
    ×