என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேக் சர்மா"

    • அபிஷேக் சர்மாவை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் கவலைப்படுகிறேன்.
    • கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார் என்றார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு முன் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து கவலைப்படுபவர்களைக் கண்டு நான் கவலைப்படுகிறேன்.

    அவரது ஆட்டத்தை நினைத்து ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? அவர் இன்னும் ரன் அடிக்கத் தொடங்கவில்லை என்பதால், இனி அவரை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். அவர் பெரிய ஷாட்களை ஆடத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

    இது ஒரு குழு விளையாட்டு. அணியின் தேவைக்கேற்ப அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்.

    அவர் சிறப்பாக ஆடினால் மகிழ்ச்சி. தவறினால் அதை ஈடுகட்ட நாங்கள் இருக்கிறோம்.

    கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார். இந்த முறை அவருக்காக நாங்கள் அதைச் செய்வோம் என தெரிவித்தார்.

    • சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
    • தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என்பதால் அந்த ஆட்டத்தை பார்க்க நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்.

    சென்னை:

    10-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.

    இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. உடல்நலக்குறைவால் ஒரு ஆட்டத்தில் ஆடவில்லை. மற்ற 3 ஆட்டங்களி லும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    இந்த நிலையில், அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறியதாவது,

    அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த போதிலும், அவரை அணியிலிருந்து நீக்குவது குறித்து அணி நிர்வாகத்திற்குள் எந்த விவாதமும் நடைபெறவில்லை.

    அபிஷேக் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர். இந்த போட்டி தொடரில் இதுவரை அதிர்ஷ்டவசமாக அணியின் மற்ற வீரர்கள் அதிக ரன் குவித்து வருகிறார்கள். எப்படி இருந்தாலும் அபிஷேக் ஷர்மாவும் ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். உலகக் கோப்பையில் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதால் அவர் நன்றாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    அணிக்காக மட்டுமல்ல ரசிகர்களுக்காகவும் அவர் சிறப்பாக ஆடுவார் என்பது உறுதி. எப்போதுமே தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என்பதால் அந்த ஆட்டத்தை பார்க்க நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம். அவர் பந்தை நன்றாக அடித்து ஆடுகிறார். அவருக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்தால் போதும் சிறந்த நிலைக்கு திரும்பி விடுவார்' என்றார்.

    • தொடக்கத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
    • அவரிடம் பலவிதமான ஷாட் திறமை இருப்பதால், அவர் களத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு ஆடலாம்.

    மும்பை:

    இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. உடல்நலக்குறைவால் ஒரு ஆட்டத்தில் ஆடவில்லை. மற்ற 3 ஆட்டங்களி லும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    இந்த நிலையில் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது:-

    அபிஷேக் ஷர்மா அருமையான ஒரு வீரர். ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அவருக்கு அதிக அழுத்தத்தை கொடுப்பதாக நினைக்கிறேன். அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை அவர் சிறப்பாக தொடங்கி இருந்தால் இப்போது நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். அவரிடம் பலவிதமான ஷாட் திறமை இருப்பதால், அவர் களத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு ஆடலாம். இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க முயற்சிக்க கூடாது. அதே நேரம், விரட்டுவதற்கு உகந்த பந்தாக வந்தால் அடிக்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் வேண்டுமென்றே பெரிய ஷாட் ஆடக்கூடாது. முதலில் ரன் எடுத்து கணக்கை தொடங்க வேண்டும். அதற்கு 4 பந்து விரயமானாலும் பரவாயில்லை. அதை பிறகு அவரால் சரி செய்ய முடியும். தொடக்கத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

    ஒன்று அல்லது 2 ஓவர் நின்று விட்டால், அதன் பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். முதல் ரன் தான் முக்கியம். ஒரு ரன் எடுத்து விட்டாலே அனைத்தும் நன்றாக அமையும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டியில் முதல் ஓவரின் 3-வது பந்தில் அபிஷேக் சர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

    தொடக்க ஓவரை நெதர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் தத் வீசினார். அந்த ஓவரில் 3-வது பந்தில் அபிஷேக் சர்மா கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

    இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறி உள்ளார். அமெரிக்காவுடன் முதல் பந்திலும் பாகிஸ்தானுடன் 4-வது பந்திலும் ஆட்டமிழந்தார். நமீபியாவுடன் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபிஷேக் சர்மா 4 பந்துகளில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
    • இஷான் கிஷன் 25 பந்தில் 42 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்தில் இஷான் கிஷன் ஒரு ரன் அடித்தார். அடுத்த 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காத அபிஷேக் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் கூட அடிக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 25 பந்தில் 42 ரன்களுடனும், திலக் வர்மா 7 பந்தில் 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

    • அபிஷேக் சர்மா நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.
    • பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நாளை இரவு நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் கொழும்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, உடல்நிலை சரியில்லாத காரணத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிஸ்சார்ஜ் ஆகி அணியில் இணைந்துள்ளார்.

    ஆனால், நாளைய போட்டியில் அவர் விளையாடலாம் எனத் தெரிகிறது. ஆனால், அணி நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. அபிஷேக் சர்மா இடம் பெறவில்லை என்றால் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பார். இவர் நமீபியாவுக்கு எதிராக விளையாடினார்.

    இந்த நிலையில் அபிஷேக் சர்மா குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறுகையில் "அபிஷேக் சர்மா பெஸ்ட் (Best). மிகவும் எதிர்பார்க்கக் கூடிய இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் அவர் இடம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் சிறந்த வீரருக்கு எதிராக விளையாட விரும்புகிறோம்" என்றார்.

    • அபிஷேக் சர்மா வயிற்று போக்கு, அஜீரணம் போன்ற சில பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பாகிஸ்தானுடன் வரும் 15-ம் தேதி இந்திய அணி மோதுகிறது.

    டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை வரும் 15-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வயிற்று போக்கு, அஜீரணம் போன்ற சில பிரச்சனைகளால் அவதிப்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

    அபிஷேக் சர்மா முழுமையாக குணமடைந்து விட்டபோதிலும் அவர் உடல் பலவீனமாக உள்ளதாக கூறப்படுகிறது. வயிற்று போக்குக்கு பிறகு உடல் எடை சில கிலோ குறைந்து விட்டதாக அபிஷேக் சர்மாவே தெரிவித்து இருக்கிறார்.

    இதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் கூறுகின்றன. நமீபியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு அபிஷேக் சர்மா ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மிஸ் ஆகலாம் என கேப்டன் சூர்யகுமார் கூறியிருந்தார்.

    இதனால் அபிஷேக் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக 100% விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. நமீபியாவுக்கு எதிராக சஞ்சு சாம்சன் சொதப்பினாலும் 3 சிக்சர்களுடன் 8 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். இதனால் அவரை கிஷான் கிஷனுடன் ஒப்பனிங்கில் விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியா- நமீபியா அணிகள் நாளை மோதுகிறது.
    • அபிஷேக் சர்மா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணி மோதிய முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி 2-வது லீக் போட்டியில் இன்று நமீபியாவுடன் மோதவுள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவிற்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் நாளை நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும், சஞ்சு சாம்சன் ஓப்பனராக களமிறங்க வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டிக்குள் அவர் குணமடைந்து திரும்புவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 8 அன்று பயிற்சியாளர் கம்பீர் தனது வீட்டில் இந்திய அணிக்கு இரவு விருந்து அளித்தார். அப்போது அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக் குறைவு (வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல்) ஏற்பட்டதால், மற்ற வீரர்கள் வெளியேறுவதற்கு முன்பே அவர் முன்கூட்டியே கிளம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன் குவிப்பவராக இருப்பார்.
    • இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா முக்கியமானவர் என்றார்.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா பிப்ரவரி 7-ம் தேதி மும்பையில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிக ரன்கள் குவிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார். ஐ.சி.சி. ரிவ்யூ நிகழ்ச்சியில் ரிக்கி பாண்டிங் பேசியதாவது:

    அபிஷேக்கின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் நான்தான். 17 வயதில் அறிமுகமாகி முதல் பந்திலேயே நேராக பவுலர் தலைக்கு மேல் பவுண்டரி விளாசினார். அந்த கிளாசிக்கல் ஸ்ட்ரெயிட் பேட் ஷாட் இவர் சாதாரண வீரர் அல்ல என்பதை எனக்குக் காட்டியது.

    அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலேயே தக்கவைக்க வேண்டும் என உரிமையாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினேன். அவரை டிரேட் செய்ய வேண்டாம் என பலமுறை சொல்லிப் பார்த்தேன். இவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகப் போகிறார் என அப்போதே தெரிந்தது. இப்போது அதுதான் நடந்திருக்கிறது.

    அவர் இந்த 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன் குவிப்பவராக இருப்பார், தொடரிலேயே சிறந்த வீரராகவும் மாறக்கூடிய அளவுக்கு திறமை கொண்டவர். அவர் அப்படி விளையாடினால் இந்திய அணியை தோற்கடிப்பது இன்னும் கடினமாகும். இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் முக்கியமானவர் என தெரிவித்தார்.

    • நியூசிலாந்து அணி 215 ரன்கள் குவித்துள்ளது.
    • சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.

    இதனால் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா முதல் பந்தை எதிர்கொண்டார். மாட் ஹென்றி முதல் ஓவரை வீசினார். முதல் பந்தை அபிஷேக் சர்மா இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்தார். பந்தை பேட்டில் எட்ஜ் ஆகி Third Man திசையில் மேல்நோக்கி பறந்தது. அங்கு நின்றிருந்த கான்வே அபாரமாக கேட்ச் பிடித்தார். இதனால் அபிஷேக் சர்மா கோல்டன் டக் உடன் ஏமாற்றம் அடைந்தார்.

    அடுத்து சூர்யகுமாயர் யாதவ் களம் இறங்கினார். அவர் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

    • இந்திய பேட்டிங் வரிசை முழுவதும் சவால்கள் நிறைந்ததாக உள்ளன.
    • சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள மூன்று பேரையும் சாய்ப்பது எளிதாக காரியம் அல்ல.

    இந்தியா- நியூசிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இவர்கள் 250-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடுகிறார்கள். இதனால் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் அமைதியாக இருந்து திட்டத்தை செயல்படுத்துவதில் குழப்பம் உள்ளது என நியூசிலாந்து பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜேக்கப் ஓரம் கூறியதாவது:-

    மைதானத்தில் எல்லா திசைக்கும் பந்துகள் பறந்து கொண்டிருந்தால், எங்களுக்கு தொடர்ந்து அமைதியாக இருந்து, திட்டங்களை நியாபகப்படுத்தி, அவற்றை வெளிப்படுத்துவதில் மைதானத்தில் சற்று குழப்பம் நிலவியது. ஆனால், நான் மீண்டும் சொல்கிறேன், இது எல்லாம் கற்றுக் கொள்வதின் ஒரு பகுதி.

    இதேபோல்தான் 1900 முதல் 2000 வரை ஜெயசூர்யா அதிரடியாக விளையாடினார். இது விளையாட்டின் இயல்பான வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன்.

    நீங்கள் பார்ப்பது என்னவென்றால், பந்துவீச்சாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது. பந்துவீச்சுப் பயிற்சியாளராக அதுவே இப்போது எங்களுக்குள்ள சவால். மேலும் இது குறித்து நிறைய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

    ஆனால் விஷயம் என்னவென்றால், அபிஷேக் சர்மா மட்டும் தனியாக இல்லை. சூர்யகுமார் சிறப்பாக விளையாடியுள்ளார். இரண்டாவது போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். இந்திய பேட்டிங் வரிசை முழுவதும் சவால்கள் நிறைந்ததாக உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள மூன்று பேரையும் சாய்ப்பது எளிதாக காரியம் அல்ல.

    இவ்வாறு ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார்.

    • டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
    • 3 ஆவது டி20 போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார்

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.

    நேற்று நடைபெற்ற 3 ஆவது டி20 போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார். இதன்மூலம் யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதையடுத்து பேசிய அபிஷேக் ஷர்மா, "12 பந்துகளில் அரை சதம் என்ற யுவராஜின் சாதனையை முறியடிப்பது சாத்தியமற்றது" என்று தெரிவித்தார்.

    டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×