search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபகரிப்பு"

    • கலெக்டரிடம் புகார்
    • 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கீழ்குளம் ஆனான் விளையை சேர்ந்தவர் ரெங்கபாய் (வயது 70). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை என் சகோதரிக்கு சொந்தமான நிலத்தை எனக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். தற்போது 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.

    இதுதொடர்பாக நில அபகரிப்பு போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த நிலத்தை வேறொரு நபர் பெயரில் மீண்டும் பத்திரம் பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் என்னிடம் வெட்டுகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இது தொடர் பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எனக்கு சொந்தமாக ரூ.60 கோடி மதிப்பில் 2 ஏக்க ர் விவசாய நிலம் உள்ளது.
    • அந்த நிலத்தை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மோகன் சேலம் மநாகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது-

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எனக்கு சொந்தமாக ரூ.60 கோடி மதிப்பில் 2 ஏக்க ர் விவசாய நிலம் உள்ளது. இதில் தற்போது தென்னை மரங்கள் உள்ளன. இந்த நிலத்தை ஜெயராமன் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளேன்.

    இந்தநிலையில் அந்த நிலத்தை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். நேற்று அவர் உள்பட 20 பேர் தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்போவதாக கூறி எனது விவசாய நிலத்திற்குள் உள்ளே நுழைந்தனர். இதனை தடுத்து நிறுத்திய நான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன்.

    அவர்களும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எனவே அத்து மீறி விவசாய விளை நிலத்தை அபகரிக்க தொடர்ந்து முயற்சிக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.  

    • மறைந்த நண்பரின் 2 பேருந்துகளை எடுத்து சென்றவர் திருப்பி தர மறுப்பு
    • திருப்பி கேட்ட நண்பரின் மனைவிக்கு கொலை மிரட்டல்

    ராம்ஜிநகர்,

    திருச்சி மாவட்டம் தீரன்நகர் வாஞ்சிநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமோகன்(வயது56). இவரது மனைவி சித்ரா(45) . இவர் வங்கியில் கடன் வாங்கி இரண்டு ஆம்னி பேருந்துகளை வைத்து டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். மணிமோகன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார்.இந்த நிலையில் மணிமோகனின் நண்பர் மணப்பாறையைச் சேர்ந்த தனியார் கல்லூரியின் பங்குதாரர் கலைச்செல்வன் என்பவர் மணிமோகனின் மனைவி சித்ராவிடம் சென்று திருச்சியில் 2 ஆம்னி பேருந்துகளும் இருப்பது பாதுகாப்பாக இருக்காது என்றும் எனவே தனது பாதுகாப்பில் மணப்பாறையில் இருக்கட்டும் என்றும் கூறி பேருந்துகளை மணப்பாறைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்தைக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படையுங்கள் நான் வங்கி கடனை அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு கலைச்செல்வன் உனது கணவர் பல பேரிடம் கடன் வாங்கியுள்ளார். எனவே பேருந்து என்னிடமே இருக்கட்டும் அதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறிவந்துள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக கரூரில் தங்களது ஆம்னி பேருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதை அறிந்த சித்ரா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கலைச்செல்வனிடம் கேட்டபோது, அவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம் . இச்சம்பவம் குறித்து சித்ரா திருச்சி கமிஷனர் சத்யபிரியாவிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துவிட்ட நண்பனின் மனைவியை ஏமாற்றி ஆம்னி பேருந்துகளை அபகரித்துச் சென்றது. டிரான்ஸ்போர்ட் நடத்தி வருபவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    • திருச்சி தாயனூரில் தாயை ஏமாற்றி வீடு, நிலத்தை அபகரித்த மகள் வெளியேறச் சொல்லி வீட்டை சேதப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்
    • போலீசார் மகள் சந்திரா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள தாயனூர் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 72). இவருக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான மகள் சந்திரா, வெள்ளையம்மாளிடம் இரண்டு சென்ட் நிலம் கேட்டுள்ளார்.இதற்கு அவர் ஒப்புக் கொண்டு சந்திரா தயார் செய்த ஆவணங்களில் கையெழுத்துள்ளார்.

    அப்போது மூதாட்டிக்கு தெரியாமல் அவரை ஏமாற்றி வீடு மற்றும் மொத்த நிலத்தையும் சந்திரா அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சந்திரா தனது கணவர் சங்கன், மகன்கள் கார்த்திக், பாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளையம்மாளை வீட்டிலிருந்து வெளியேறச் சொல்லி வீட்டை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளையம்மாள் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் மகள் சந்திரா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்
    • நவல்பட்டு அருகே பரபரப்பு

    திருச்சி,

    திருச்சி இ.பி. ரோடு கருவாட்டு பேட்டை பகுதி–யைச் சேர்ந்த குப்புசாமி மனைவி முத்தம்மாள், கீரைக்கொல்லை தெரு கிருஷ்ணன் ரோடு பகுதியை சேர்ந்த ராஜாத்தி, திருச்சி பூலோகநாதர் கோவில் தெருவை சேர்ந்த நீலா, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியி–ருப்பதாவது:-

    நாங்கள் மேற்கண்ட முக–வரியில் வாடகை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு தமிழக அரசால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சென்ட் நிலம் வீதம் நவல்பட்டு பூலாங்குடி கிராமத்தில் இலவச வீட்டு மனையாக வழங்கப்பட்டது.அப்போது எங்களுடன் சேர்த்து மொத்தம் 250 பேருக்கு பட்டா வழங்கப்பட் டது. இந்த நிலையில் தற் போது அரியமங்கலம் உக் கடை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பட்டா ஆவணங்களை அடயாட்களை வைத்து மிரட்டி பிடுங்கி வருகிறார். மேலும் நிலம் என்னுடைய பூர்வீக இடம். உங்களுக்கு யாருக்கும் இதில் உரிமை இல்லை. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் தருகிறேன் என மிரட்டி எங்களிடமிருந்து பட்டாக்களை பறித்து வைத்துக் கொண்டு வேறு நபர்களுக்கு இரண்டு லட்சம், 3 லட்சம் என விற்பனை செய்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் எங்களது இடத்தில் எந்தவித இடை–யூறும் இல்லாமல் வீடு கட்டி வசிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நாங்கள் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
    • தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் என்னுடைய பட்டா நிலத்தை அவரது பெயரில் எழுதிக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ராயர் பாளையம் பகுதியை சேர்ந்த கூத்தன் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். எனது 2-வது மகன் வெங்கடேசன் எனக்கு உதவியாக விவசாயத்தை கவனித்து வந்தார்.

    இதற்கிடையே விவசாய செலவிற்கு கடன் பெறுவதற்காக நிலத்தை அடமானம் வைக்க வேண்டும் என்று என்னிடம் கூறி வெங்கடேஷ் கெங்கவல்லி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் என்னுடைய பட்டா நிலத்தை அவரது பெயரில் எழுதிக் கொண்டார்.

    பின்னர் வெங்கடேசனும் அவரது மனைவியும் சேர்ந்து அனைத்து நிலங்களையும் அவர்கள் பெயரில் எழுதிக் கொண்டு எங்களை அடித்து வெளியேற்றி விட்டனர் .இதனால் நாங்கள் மூத்த மகன் ராமசாமி வீட்டில் வசித்து வருகிறோம். எனவே இந்த பத்திர பதிவை ரத்து செய்து எங்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    ×