என் மலர்

    நீங்கள் தேடியது "Vanangan"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பில் துணை நடிகை ஒருவர் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அதன்பின்னர் இப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படம் அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் பாலா இயக்கி வருகிறார்.

    வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து, துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார்.

     

    துணை நடிகை லிண்டா

    துணை நடிகை லிண்டா

    இப்படத்தின் படப்பிடிப்பு 3 நாட்கள் முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை துணை நடிகை லிண்டா என்பவர், ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடித்து வந்தார்.
    • இந்த படத்தில் சூர்யா கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன்படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இதிலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாகவும் ஆனாலும் 'வணங்கான்' திரைப்படத்தின் பணிகள் தொடரும் என்றும் இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

     

    அருண் விஜய்

    அருண் விஜய்

    இதனைத் தொடர்ந்து சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவாது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆர்யா நடிக்கலாம் என்று கூறப்பட்டது. பிறகு அதர்வா இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், சூர்யாவுக்கு பதிலாக வணங்கான் படத்தில் அருண் விஜய்யை நடிக்க வைக்க பாலா பரிசீலிப்பதாக புதிய தகவல் பரவி உள்ளது. இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடித்தி வருவதாகவும் இதன் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் பாலா ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா சமீபத்தில் விலகினார்.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன்படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாகவும் ஆனாலும் 'வணங்கான்' திரைப்படத்தின் பணிகள் தொடரும் என்றும் இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.


    வணங்கான்

    இதனைத் தொடர்ந்து சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவாது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆர்யா நடிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அதர்வா இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடித்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன்பு பாலா இயக்கிய 'பரதேசி' திரைப்படத்தில் அதர்வா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.
    • இது நடிகர் சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார். இந்த அறிவிப்பு சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

    என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

    எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

    நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

    ×