search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director Bala"

    • மமிதா பைஜு இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து உள்ளார்
    • மலையாள நடிகை மமிதாபைஜு முதலில் நடித்து இருந்தார்


    தமிழ்பட உலகின் முன்னணி இயக்குனர் பாலா. இவர் நடிகர் சூர்யா நடிக்கும் 'வணங்கான்' படத்தை இயக்கினார்.இந்த' படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதாபைஜு முதலில் நடித்து இருந்தார்.

    இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென அந்த படம் கைவிடப்பட்டது.

    மேலும் அந்தப்படத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக நடிகர் சூர்யா, மமிதாபைஜு திடீரென விலகினர்.இதையடுத்து இந்தப்படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண்விஜய் நடித்தார்.அவருக்கு ஜோடியாக ரோஷினிபிரகாஷ் நடித்தார்.இதில் மிஷ்கின்,சமுத்திரக்கனியும் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்படத்தை சுரேஷ்காமாட்சி தயாரித்து உள்ளார்.இந்நிலையில், 'வணங்கான்' படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதாபைஜூ இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    "வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அப்படத்தில் ஒரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும்.நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன். திடீரென இயக்குநர் பாலா வந்து என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார். 

    அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை.அதனால் பதற்றமாகி விட்டேன். அப்போது எனக்கு பின்னால் இருந்த பாலா என்னை தோள்பட்டையில் அடித்தார். 'மேலும் நான் அவ்வபோது திட்டுவேன்.அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க' என சொல்லுவார். சிலசமயங்களில் அவரிடம் அடி வாங்கி இருக்கிறேன்.   

                             



                                                                                                                                                                                                                                                                    இந்நிலையில், இயக்குநர் பாலா குறித்து நடிகை மமிதா பைஜுபேசிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலானது.இதனால் பாலாவிற்கு எதிராக கருத்துக்கள் வெளியாகின. இந்த நிலையில், தான் பேசிய அந்த வீடியோ தொடர்பாக நடிகை மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்து உள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:-வணங்கான் பட அனுபவம் குறித்து இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை.திரைப்பட பிரமோஷன் நேர்காணலின் ஒரு பகுதி.பொறுப்பற்ற தலைப்பின் மூலம் அது தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    படத்தின் ப்ரீபுரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கும் மேலாக பாலா சாருடன் வேலை பார்த்து உள்ளேன். ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார்.அந்தப்படத்தில் பணிபுரிந்த போது மனரீதியாகவோ,உடல்ரீதியாகவோ எவ்வித தவறான அனுபவங்களையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிறதொழில்ரீதியான கமிட்மெண்ட் காரணமாக அந்தப்படத்தில் இருந்து விலகினேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த 19-ம் தேதி வெளியானது.
    • மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

    இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்' படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக சூர்யா திடீரென விலகினார்.

    இதையடுத்து, இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த 19-ம் தேதி வெளியானது. 

    வணங்கான் படம் தொடர்பாக வெளிவெரும் அப்டேட்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிறச் செய்துள்ளது.

    இந்நிலையில், வணங்கான் படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ, "வணங்கான் படப்பிடிப்பில் பாலா தன்னை தோள் பட்டையில் அடித்தார்" என தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

    இதுகுறித்து நடிகை மமிதா பைஜூ கூறுகையில், "வணங்கான் படத்தில் முதலில்நான் நடித்திருந்தேன். அப்படத்தில் ஒரு பாடலுக்கு மேலளம் அடித்தபடி பாடிக்கொண்டே ஆட வேண்டும். நான் அப்போது தான் அதை கற்றுக் கொண்டேன். ஆனால், இயக்குனர் பாலா தான் அதை உடனே செய்து காட்டும்படி கூறினார். 

    நான் அதற்கு தயாராக இல்லை என்பதால் பதற்றமாகிவிட்டேன். அப்போது, பின்னாலில் இருந்த இயக்குனர் பாலா தனது தோள்பட்டையில் அடித்தார். நான் அவ்வபோது திட்டுவேன். அப்போது பெரிதா எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று இயக்குனர் பாலா கூறுவார்.

    சூர்யா சார் ஏற்கெனவே அவரோடு படம் பண்ணியிருப்பதால் புதிதாக இணைந்த எனக்குதான் அது புதிதாக இருந்தது" என்றார்.

    • இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.
    • இந்த படத்தில் சமுத்திரகனி, இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 25-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

     

    வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் வணங்கான் படத்தில் அருண் விஜய், ரோஷினி, சமுத்திரகனி, இயக்குனர் மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சூர்யா மேற்கொள்கிறார்.

    முதலில் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்து, படத்திற்கான படப்பிடிப்பும் நடந்தது. அப்போது இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்து வந்தார். பிறகு, இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா மற்றும் 2டி நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை முதலில் இயக்குனர் பாலா வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.
    • இது நடிகர் சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார். இந்த அறிவிப்பு சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

    என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

    எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

    நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

    ×