என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி பேருந்து"
- போதையில் இருந்த நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது
- பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு?
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அதேபோல், நாகை மாவட்டம் செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜாராமன் என்பவர் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது.
பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு?
ஒரு பள்ளிப் பேருந்து கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
யார், எங்கே, எப்போது சடலமாகக் கிடப்பார்கள்? என்று தெரியாத அவல நிலை தான் திமுக ஆட்சியின் "சட்டம்- ஒழுங்கு".
குற்றவாளிகளைப் பிடிக்கத் திணறுவது, பிடித்தாலும் அவர்களை சிறையில் வைத்திருக்க வக்கில்லாமல் வெளியே அனுப்பி, இன்னும் பலக் குற்றங்களை அவர்கள் செய்வதை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது- இப்படி நடத்தப்படும் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?
குற்றவாளிகளை குஷியாக்கி, மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மயிலாடுதுறை பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீதும், திருவாய்மூர் வி.ஏ.ஓ-வாக இருந்த ராஜாராமன் மரணத்தை விசாரித்து, அதில் தொடர்புள்ளோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
- விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் ப ள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
இதில், 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிப்பறை சுத்தம் செய்வதற்காக ஆசிட் எடுத்து சென்றபோது வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
- பாக்யஸ்ரீ (34) என்ற பெண் தனது மகனை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட முயன்றுள்ளார்.
- பாக்யஸ்ரீயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் தனது ஊனமுற்ற மகனை பள்ளிப் பேருந்தில் ஏற்றுவதற்கு உதவியபோது, தாயும் மகனும் மின்சாரம் தாக்கி துடிதுடித்த அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கல்புர்கி மாவட்டத்தில் பாக்யஸ்ரீ (34) என்ற பெண் தனது மகனை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட முயன்றுள்ளார். அப்போது பள்ளி பேருந்தின் மீது ஏற்கனேவே அறுந்து விழுந்த மின்சார கம்பி பட்டுள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பாக்யஸ்ரீ துடிதுடித்தார்.
பின்னர் ஓட்டுநர் பேருந்தை முன்னோக்கி நகர்த்தினார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த பெண்ணையும் அவரது மகனையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாக்யஸ்ரீயின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது மகனின் உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது சம்பவம் குறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் மின்சாரத்துறையினர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
- பேருந்து சீட் பிடிப்பதில் 2 மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது.
- பேருந்தில் மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்கல் நேற்று பள்ளி முடிந்து பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சீட் பிடிப்பதில் 2 மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதனால் மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






