என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 199404"

    • தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் வளர்ந்து வருகிறது.
    • சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காதது வியப்பாக இருக்கிறது.

    அவனியாபுரம்:

    மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா மதுரை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விழா காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத வகையில் அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதால் மக்கள் ஆம்னி பஸ்சுக்கு செல்கின்றனர்.

    ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து அமைச்சரிடம் கேட்டால் அது தொழில் என்றும், ஏழை மக்கள் என்றால் அரசு பஸ்சில் செல்லலாம். ஆம்னி பஸ்சில் செல்வது என்றால் கட்டணம் உயர்வாகத்தான் இருக்கும் என்றும் பேசுகிறார்.

    இதை சொல்வதற்கு அமைச்சர் எதற்கு? ஆம்னி பஸ்சில் பயணம் செய்தால் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு அதிக தொகையை கொடுத்து மக்கள் எப்படி பண்டிகையை கொண்டாடுவார்கள்?.

    ஓசி பஸ் பயணம் குறித்து அமைச்சர் பேசியதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். அரசு பஸ்களில் இலவச பயணத்தை முற்றிலுமாக தமிழக பெண்கள் புறக்கணிக்க வேண்டும்.

    தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காதது வியப்பாக இருக்கிறது.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் வரவில்லை என்று தேர்தல் நேரத்தில் ஒரு செங்கலை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து இப்போது என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை?.

    எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக உள்ளதே தவிர மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக தெரியவில்லை. மத்திய-மாநில அரசுகள் விரைவில் மருத்துவமனையை கட்டி முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டதாம். ஆனால் டாக்டர் ராமதாஸ் தயங்குகிறாராம்.
    • தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து பா.ம.க.வுக்கு இதுவரை எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. பா.ம.க., தே.மு.தி.மு.க., த.மா.கா. மற்றும் சில கட்சிகளை இழுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

    பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டதாம். ஆனால் டாக்டர் ராமதாஸ் தயங்குகிறாராம். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து பா.ம.க.வுக்கு இதுவரை எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை.

    இதனால் டாக்டர் அய்யா முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

    • பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
    • தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ரத்த வகையை கேட்டு தெரிந்து கொண்ட பிரேமலதா தனது பேச்சின் போது அதனை மறக்காமல் குறிப்பிட்டார்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா பங்கேற்று பேசியபோது தொண்டர்களுக்கும் கேப்டனுக்கும் இடையேயான உறவு ரத்த உறவு என்றும், இதனை யாராலும் பிரிக்க முடியாது என்றும், பெருமை பொங்க குறிப்பிட்டார்.

    பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். அப்போது அவர்களிடம் ரத்த வகையை கேட்டு தெரிந்து கொண்ட பிரேமலதா தனது பேச்சின் போது அதனை மறக்காமல் குறிப்பிட்டார். இங்கு ரத்த தானம் செய்த தே.மு.தி.க. தொண்டர்கள் பலரது ரத்தவகை ஓ பாசிட்டிவாகவும், பி. பாசிட்டிவாகவும் இருக்கு. கேப்டனின் ரத்த வகை ஓ பாசிட்டிவ். எனது ரத்த வகை பி. பாசிட்டிவ் இப்படி நாம் ஒரே ரத்தத்தை சேர்ந்தவர்கள். இது ரத்தத்தில் கலந்த உறவு. யாராலும் பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

    பிரேமலதாவின் இந்த "ரத்த பாச பேச்சு" கட்சி தொண்டர்களுக்கு பூஸ்டாக மாறி இருப்பது என்னவோ உண்மைதான். அது கட்சிக்கு புது ரத்தத்தை பாய்ச்சுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • தொண்டர்கள் கூட்டத்தை நாலா புறமும் பார்த்து விஜயகாந்த் கையெடுத்து கும்பிட்டார்.
    • இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி பெருவிரலை உயர்த்தி காட்டி காட்டினார் விஜயகாந்த்.

    சென்னை:

    விஜயகாந்த் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் தீவிர அரசியலில் செயல்பட முடியவில்லை.

    நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களாலும் தொண்டைக் குழாய் தொடர்பான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அதற்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரால் கம்பீரமாக எழுந்து நிற்க முடியவில்லை. தனது கணீர் குரலை மீண்டும் ஒலிக்க முடியவில்லை. இப்படி விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மட்டுமின்றி அவரது நண்பர்களும் திரையுலக பிரபலங்களும் பலமுறை கண்ணீருடன் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

    விஜயகாந்தின் உடல் நிலையை சீராக்கி அவரை பழைய விஜயகாந்த் ஆக்கி விட வேண்டும் என்பதில் அவரது மனைவி பிரேமலதாவும் குடும்பத்தினரும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தே.மு.தி.க.வில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் பிரேமலதாவே பங்கேற்று வரும் நிலையில் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க விஜயகாந்தை அழைத்து வருகிறார்கள். உடல்நிலை குன்றிய நிலையில் விஜயகாந்தை இப்படி கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வருவது சரிதானா? என்கிற விமர்சனங்கள் எழுந்தன.

    இது பற்றி கருத்து தெரிவித்த பிரேமலதா, "விஜயகாந்த் நலமுடன் தான் இருக்கிறார். அவருக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிக உடல் சோர்வு தான்" என்று கூறியிருந்தார்.

    நேற்று முன்தினம் தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரேமலதா இதனை குறிப்பிட்டு சற்று வருத்தத்துடனே பேசினார். கேப்டன் நன்றாகத் தான் இருக்கிறார். அவரைப் பற்றி தேவையில்லாமல் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

    தனது 70-வது பிறந்தநாளில் தொண்டர்கள் விஜயகாந்தை சந்திக்கலாம் என்று கூறியிருந்தார். இதன்படி நேற்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்தை பார்க்க கட்சி அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.

    அவர்கள் பல மணி நேரம் விஜயகாந்தை பார்ப்பதற்காக காத்துக் கிடந்தனர். காலையில் இருந்து கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்ட நிலையில் விஜயகாந்த் மதியம் 12 மணியளவில் அலுவலகம் வந்தார். அவரை பார்த்ததும் கேப்டன் வாழ்க என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் கோஷங்களை எழுப்பினார்கள். தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் சேரில் அமர்ந்து இருந்த படியே கட்சியினரை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

    தொண்டர்கள் கூட்டத்தை நாலா புறமும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி பெருவிரலை உயர்த்தி காட்டி காட்டினார். இதற்கு முன்பு தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வந்த போதெல்லாம் விஜயகாந்தை அதிக சோர்வுடனே கட்சியினர் பார்த்திருக்கிறார்கள்.

    ஆனால் நேற்றைய நிகழ்ச்சியின்போது விஜயகாந்தை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டனர். தலைவர் நல்லா தான் இருக்காரு.... எல்லாம் சரியாகிவிடும் என்று தொண்டர்கள் கூறியதையும் கேட்க முடிந்தது.

    இப்படி விஜயகாந்த் படிப்படியாக குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு நிச்சயம் திரும்புவார் என்கிற நம்பிக்கை கட்சியினர் மத்தியில் தற்போது சற்று ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளும் இதனை தெரிவித்தனர்.

    விஜயகாந்தின் உடல் நிலை தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, "விஜயகாந்துக்கு தினமும் பிசியோதெரபி சிகிச்சை வீட்டிலேயே அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அவரது கை, கால்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் காரணமாகவே நேற்றைய நிகழ்ச்சியின் போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.

    இந்த சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு அவரை பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என்கிற நம்பிக்கை அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது. இதேபோன்று குரல் பயிற்சியும் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் தற்போது நிற்க முடியவில்லை. பேசுவதற்கும் முடியாமல் இருக்கிறார்.

    இதற்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக சீராகி விடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

    • நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் கார்த்தி நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளில் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

     

    வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வருவாரா? அவரை பார்க்க முடியுமா என்று தொண்டர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்கள் முன் உற்சாகமாக கைகளை அசைத்ததோடு வெற்றியை குறிக்கும் வகையில் பெரு விரலையும் வளைத்து காட்டி அனைவரையும் சந்தோஷப்படுத்தினார்.

    இந்நிலையில் விஜயகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இவருடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமசந்திரன் ஆகியோர் இருந்தனர். 

     

    • தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்த விஜயகாந்த் உற்சாக மிகுதியால் கைகளை உயர்த்தி மீண்டும் அசைத்தார்.
    • விஜயகாந்துக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 70-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கட்சியினர் கொண்டாடுவது வழக்கம்.

    இந்த வகையில் 70-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்குதல் போன்றவை நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன.

    வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வருவாரா? அவரை பார்க்க முடியுமா என்று தொண் டர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

    இந்த நிலையில் பிறந்தநாளையொட்டி விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்திப்பார் என்று அவரது மனைவி பிரேமலதா அறிவித்தார்.

    அதைத் தொடர்ந்து இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டனர்.

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி அலுவலகத்திற்கு குவிந்தனர். பூக்கொத்து, மாலை, பழத்தட்டுகளுடன் காத்திருந்தனர்.

    பகல் 12 மணிக்கு விஜயகாந்த் காரில் அங்கு வந்து இறங்கினார். அவருடன் பிரேமலதா வந்தார். விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் கேப்டன் வாழ்க என கோஷமிட்டனர்.

    பின்னர் அலுவலக நுழைவு வாசலில் போடப் பட்டு இருந்த நாற்காலியில் விஜயகாந்த் அமர்ந்தார். அப்போது தொண்டர்களின் வாழ்த்து கோஷம் அதிர்ந்தது. அவர் சிரித்தபடியே கைகூப்பி தொண்டர்களை பார்த்து வணங்கினார்.

    உற்சாகமாக கைகளை அசைத்ததோடு வெற்றியை குறிக்கும் வகையில் பெரு விரலையும் வளைத்து காட்டினார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்த விஜயகாந்த் உற்சாக மிகுதியால் கைகளை உயர்த்தி மீண்டும் அசைத்தார்.

    விஜயகாந்த் அருகில் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் தலைமை நிர்வாகிகள் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் வேளச்சேரி பிரபாகரன், இ.சி.ஆனந்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நின்று தொண்டர்களை அமைதிப் படுத்தினர்.

    முன்னதாக விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் தொண்டர்களை பார்த்து கையசைத்தனர். கடந்த ஆண்டு பிறந்த நாளை காட்டிலும் தற்போது விஜயகாந்த் உற்சாகமாக இருப்பதாக தொண்டர்கள் தங்களுக்குள்ளே கூறிக் கொண்டதை காண முடிந்தது.

    விஜயகாந்துக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

    நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். நடிகை வடிவுக்கரசி, நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, போண்டாமணி, கிங்காங் ஆகியோரும் விஜயகாந்துக்கு நேரில் வாழ்த்து கூறினார்கள்.

    • நெறஞ்சமனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியில் கூறி இருப்பதாவது:-

    'வானத்தைப் போல' பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்று 'புலன் விசாரணை' செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக 'கேப்டனாக' மரியாதையுடன், நெறஞ்சமனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என விஜயகாந்தி கோரிக்கை
    • டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

    சென்னை:

    தமிழகத்தில் போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போதை பொருளை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். முதல்வரின் நடவடிக்கை தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

    அவ்வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?

    கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, மதுபானங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை.

    இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.

    • மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.
    • சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    அவனியாபுரம்:

    தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு என்பது மக்களுக்கானது தான் என்பதை உணர்ந்து வரி விதிக்க வேண்டும். தொடர்ந்து வரி உயர்வால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதுவும் கொரோனா காலத்திற்கு பின்பு மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வு அதுவும் பேக் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.வரி என்பது மக்களை கடுமையாக பாதிக்கும். ஒரு அரசு என்பது மக்களுக்கான அரசு என்பதை உணரவேண்டும்.

    மாணவி ஸ்ரீமதி இறந்து புதைத்த இடத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் தொடர்ந்து மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    மாணவிகள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்தார்களா? அப்படி தற்கொலை செய்தால் அதற்கான காரணம் என்ன என்பதனை அறிய தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பல ஊழல் வழக்குகளை நடத்தியது. அதேபோல் தற்போது பா.ஜ.க. ஊழல் வழக்குகளை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஆளும் கட்சி ஆண்ட கட்சிகளில் இருந்து ஊழல் வழக்குகளை நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தே.மு.தி.க. நிர்வாகிகள் அழகர், கணபதி, பாலச்சந்தர், மணிகண்டன் உள்பட பலர் இருந்தனர்.

    • ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்.
    • நினைவுச் சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும்.

    திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க கூடாது.

    ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்.

    நினைவு சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை உள்கட்டமைப்பு வசதி, காலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி போன்றவற்றில் பயன்படுத்தினால் மக்கள் அதனை வரவேற்பார்கள்.

    கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற பல நினைவு சின்னங்கள் உள்ள நிலையில் தற்போது 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பது அவசியமற்றது.

    நினைவுச் சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும்.

    மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டும்

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • தே.மு.தி.க. அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது.
    • தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    தே.மு.தி.க. முதல்கட்ட அமைப்பு தேர்தல் வருகிற 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தே.மு.தி.க. அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள்.

    ஒன்றிய ஊராட்சி பூத் கிளை கழகங்கள், பேரூராட்சி வார்டு கிளை, நகராட்சி வார்டு பூத் கிளை, நகராட்சி வார்டு கழகம், மாநகராட்சி வட்டங்களில் உள்ள பூத் வாரியாக கிளை கழகங்களுக்கு, பூத் கிளை கழக செயலாளர், பூத் அவைத்தலைவர், பூத் பொருளாளர், 2 பூத் துணை செயலாளர்கள், 2 பிரதிநிதிகள், 2 பூத் செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட 9 கிளை கழக நிர்வாகிகள் ஊராட்சி கழகத்திற்கு, ஊராட்சி கழக செயலாளர், 2 துணை செயலாளர்கள், மாநகராட்சி வட்ட கழகத்திற்கு, ஒரு வட்ட செயலாளர், அவைத் தலைவர், பொருளாளர், 4 துணை செயலாளர்கள், 4 பகுதி பிரதிநிதிகள் கொண்ட 11 பேர் ஆகியவற்றுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெறும்.

    மாவட்ட தேர்தல் ஆணையர்களாக தென்சென்னை வடக்கு-எம்.ஆர்.பன்னீர் செல்வம், மத்திய சென்னை மேற்கு-பி.கிருஷ்ணமூர்த்தி, வடசென்னை மேற்கு-சி.மகாலட்சுமி, தென் சென்னை தெற்கு-செல்வ. அன்புராஜ், வடசென்னை கிழக்கு-ஜி.கே.மகேந்திரன், மத்திய சென்னை கிழக்கு-எஸ்.கணேசன், மேற்கு சென்னை-எம்.விஜய கண்ணன், ஆவடி மாநகர்-சுபமங்களம் டில்லிபாபு, செங்கல்பட்டு-ஜி.காளி ராஜன், திருவள்ளூர் கிழக்கு-கு.நல்லதம்பி, திருவள்ளூர் மேற்கு-செ.தினகரன், காஞ்சீபுரம்-பி.வேணுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×