என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "party office"
- கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது.
- தீ வைத்து எரித்த மர்ம நபர்களை உடனடியாக பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று கட்சி அலுவலகம் எரிந்து சாம்பலானது. அப்போது இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மர்ம நபர்கள் யார் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர்.
தகவல் அறிந்த மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை உடனடியாக பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தன. மேலும் அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அவுரங்காபாத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்திற்காக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ அப்துல் சத்தாரின் (சில்லோடு தொகுதி) ஆதரவாளர்கள் சிலர், அங்கிருந்த 300 நாற்காலிகளை எடுத்து வாகனத்தில் ஏற்றினர்.
நாற்காலிகளை சத்தார் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதால், ஆலோசனைக் கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
இதுபற்றி சத்தார் கூறுகையில், “அந்த நாற்காலிகள் அனைத்தும் நான் கட்சி கூட்டங்களுக்காக வாங்கிக் கொடுத்தவை. இப்போது நான் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். அதனால் என்னுடைய நாற்காலிகளை நான் திரும்ப எடுத்துக்கொண்டேன். போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர், பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
கட்சியின் முன்னணி தலைவரான சத்தார், தனக்கு அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில், எம்எல்சி சுபாஷ் ஜாம்பத்துக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சத்தார், கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த வேட்பாளர் ஜாம்பத், “சத்தாருக்கு நாற்காலிகள் தேவைப்பட்டதால் எடுத்துச் சென்றிருக்கலாம். இதனால் எங்களுக்கு எந்த மனவருத்தமும் இல்லை. அவர் இன்னமும் காங்கிரசில்தான் இருக்கிறார். அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை” என்றார். #LokSabhaElections2019
ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. தேர்தலில் கட்சி வெற்றியடைந்த பின்னரே பாரம்பரிய தலைப்பாகையை அணிவேன் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் கூறினார். வாக்கு எண்ணிக்கையில் டோங்க் தொகுதியில் அவர் முன்னிலை வகிக்கிறார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியிருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 100 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காலை 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 85 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 70 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.
டெல்லியில் ராகுல் காந்தி வீட்டின் அருகே தொண்டர்கள் ஹோமம் வளர்த்து பூஜை செய்து வருகின்றனர். இதில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மகள் பிரியங்கா உள்ளிட்டோரின் புகைப்படங்களை வைத்து தொண்டர்கள் பூஜை செய்தனர். #Results2018 #RajasthanElections2018
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.வை மீட்டெடுக்கின்ற ஒரு அமைப்பாக அரசியல் களத்தில் சுழன்று பணியாற்றிட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சென்னையில் தலைமை கழக அலுவலகம் இயங்கிட அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எண்.10, டாக்டர் நடேசன் சாலை (காவலர் பயிற்சி கல்லூரி அருகில்) அசோக் நகரில் தலைமை கழக அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
அ.தி.மு.க.வின் தலைமை கழகத்தை நாம் மீட்டெடுக்கும் வரை இந்த இடத்தில் நமது தலைமை கழகம் இயங்கும்.
நமது லட்சியங்களை அடைய நாம் பணியாற்ற உள்ள தலைமை கழக அலுவலக திறப்புவிழாவில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDhinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்