என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oath Ceremony"

    • 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்.
    • மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக பல்வேறு கட்சிகள் அறிவித்தன.

    மக்களவை தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று இரவு 7.15 மணிக்கு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருடன் 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுக்க பல்வேறு அரசியல் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.

    இந்த நிலையில், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    • திருநங்கைகளுக்கு அதிகாரமளிப்பதில் பங்களிப்பைச் செய்துள்ளார் பிரதமர் மோடி.
    • பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, நிலைமை மேம்படும்.

    3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திருநங்கைகளைச் சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி விழாவுக்கு முன், பாஜக எம்பியும், முன்னாள் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சருமான வீரேந்திர குமார் சமூகத்தினரை தனது இல்லத்தில் வரவேற்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " பிரதமர் மோடியின் 'அனைவரின் ஆதரவும், அனைவரின் நம்பிக்கையும், கூட்டு முயற்சியும்' என்ற அழைப்பின் ஒரு பகுதி.

    விழாவில் திருநங்கைகளை பிரதமரின் உள்ளடக்கிய செய்தியை மேம்படுத்துவதாகும். திருநங்கைகளுக்கு அதிகாரமளிப்பதில் பங்களிப்பைச் செய்துள்ளார் பிரதமர் மோடி.

    பதவியேற்பு விழாவிற்கு திருநங்கைகள் முறைப்படி அழைக்கப்படுவது இதுவே முதல் முறை.

    உபி பாஜக பிரிவைச் சேர்ந்த சோனம் கின்னார், புதிய அரசாங்கத்திற்கு ஆசி வழங்குவதற்காக 50 சமூக உறுப்பினர்களுடன் இங்கு வந்துள்ளனர்.

    ஜாதி அடிப்படையிலான அரசியலால் பிரதமர் மோடி எதிர்பார்த்த அளவுக்கு சீட் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. ஆனால் எங்கள் பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, நிலைமை மேம்படும்" என்றார்.

    • டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்றது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்தது.

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முதலமைச்சர் ஆக பதவியேற்க போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் வருகிற வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. முதல்வரோடு எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலும், டெல்லியின் அடுத்த முதல்வர் பதவியேற்பு குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்றது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    டெல்லி தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்தது.

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முதலமைச்சர் ஆக பதவியேற்க போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

    இதற்கிடையே, டெல்லியின் அடுத்த முதலமைச்சர் வரும் வியாழக்கிழமை அன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

    முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.

    டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற உள்ள பிரதமர் மோடி பதவியேபு விழாவில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் வருகை தந்தனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது.

    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற உள்ள பிரதமர் மோடி பதவியேபு விழாவில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, மியான்மர் அதிபர் யூ வின் மிண்ட், பூடான் பிரதமர் லோடே ஷெரிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வருகை தந்துள்ளனர். 
    ×