search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Molested attempt"

    • பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த பஸ் நிலையத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதர் நிறைந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
    • வாலிபர்கள் 2 பேர் இளம்பெண்ணிடம் தவறாக நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுக்க முயன்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மாநகர பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலை நகர், வண்டலூர் உயிரியல் பூங்கா, பெருங்களத்தூர், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், படப்பை, மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகரப் பஸ்கள் அதிகாலையில் இருந்து இரவு 11 மணி வரை சென்று வருகின்றன. இதனால் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்த பஸ்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் அதிகாலை, சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், பஸ் ஏறுவதற்காக இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர்.

    திடீரென அவர்கள் பட்டா கத்தியை காட்டி இளம்பெண்ணை மிரட்டினர். பின்னர் அவரை அருகில் உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்கு கடத்தி சென்று கற்பழிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கூச்சலிட்டார்.

    பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த பஸ் நிலையத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதர் நிறைந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு வாலிபர்கள் 2 பேர் இளம்பெண்ணிடம் தவறாக நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் பொதுமக்களிடம் பட்டாகத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

    இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோந்துப் பணியில் இருந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தப்பி ஓட முயன்ற 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். இளம்பெண்ணையும் மீட்டனர். விசாரணையில் கைதான வாலிபர்கள் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் வீரமணி (27), மணிகண்டன் (26) என்பதும் அவர்கள் மீது தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.

    இதில் மணிகண்டன் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது பலத்த காயமடைந்த பிளஸ்டூ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #DharmapuriGirlStudent #GirlMolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு, பிளஸ்டூ மாணவி ஒருவர் தனியாக சென்றுள்ளார். அப்போது அவரை சில நபர்கள் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்கப் போராடிய மாணவியை கடுமையாக தாக்கி துன்புறுத்தி உள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.



    பலத்த காயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தது, தருமபுரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். #DharmapuriGirlStudent #GirlMolested
    குளச்சல் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியையை கற்பழிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    குளச்சல்:

    குளச்சல் அருகே உள்ள பத்தறை பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் குளச்சலில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது.

    இவர் தினந்தோறும் மாலையில் பள்ளி முடிந்ததும் பஸ்சில் வெள்ளியாகுளம் என்ற இடத்துக்கு வருவார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது வீட்டுக்கு நடந்து செல்வார்.

    இதேபோல நேற்று மாலை வெள்ளியாகுளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சாலை ஒரு புறம் வாய்க்காலும், மறுபுறம் தோட்டங்களும் உள்ள இடமாகும். ஆள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

    அந்த வழியாக ஆசிரியை சென்று கொண்டிருந்தபோது புதர் மறையில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென ஆசிரியை முன்பு வந்து நின்றார். அந்த வாலிபர் ஆசிரியை மீது பாய்ந்து அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றார். வாலிபரிடம் இருந்து தப்பிக்க ஆசிரியை கடுமையாக போராடினார். அப்போது வாலிபர் ஆசிரியையின் முகத்தில் பலமாக கடித்தார். இதில் அவரது முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.

    ஆசிரியை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்து வாலிபர், ஆசிரியையை விடுவித்துவிட்டு தப்பி ஓடினார். ஆனால் பொதுமக்கள் வாலிபரை துரத்திச் சென்று மடக்கிபிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்து அவரை குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    வாலிபரிடம் போலீசார் விசாரித்தபோது அவர் வெள்ளியாகுளத்தைச் சேர்ந்த சிவா (19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    சிவா மீது கற்பழிப்பு முயற்சி, வழிமறித்தல், தாக்குதல், பெண்ணை கையை பிடித்து இழுத்தல், ஆயுதங்களால் தாக்குதல், பெண் வன்கொடுமை ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைதான சிவா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    பலாத்கார முயற்சியில் காயம் அடைந்த ஆசிரியை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    பழனியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    பழனி:

    பழனி பகுதியைச் சேர்ந்தவர் ராணி (வயது 17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பழனி அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விஜயகுமார் (25). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

    ஒரே பகுதி என்பதால் பள்ளி மாணவியுடன் விஜயகுமார் சகஜமாக பேசி பழகி வந்தார். நேற்று மாணவியிடம் நைசாக பேசி வேறு இடத்துக்கு கடத்திச் சென்றார். பின்னர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சியடைந்த ராணி சத்தம் போட்டு அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டார்.

    இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். பின்னர் இது குறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மாணவியிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
    வேலை விஷயமாக கோவாவுக்கு அழைத்துச் சென்று பெண்ணை கற்பழிக்க முயன்றதால் கேரள கம்யூனிஸ்டு செயலாளரை போலீசார் கைது செய்தனர். கட்சி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள மங்களாபுரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக பணியாற்றி வந்தவர் வினோத். இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு வேலை வாங்கி தரும்படி கேட்டு இவரை அணுகினார். அவரும் போர்ச்சுக்கல் நாட்டில் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

    அதன்பிறகு வேலை வி‌ஷயமாக சிலரை சந்திக்க வேண்டும் என்று கூறி அந்த பெண்ணை கோவாவுக்கு வினோத் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு ஓட்டலில் தனித்தனி அறை எடுத்து அவர்கள் இருவரும் தங்கினார்கள்.

    இரவு நேரத்தில் அந்த பெண்ணின் அறைக்குள் வினோத் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றார். இதனால் பயந்து போன அந்த பெண் கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் அங்குச் சென்று விசாரித்தனர். அப்போது நடந்த விவரங்களை அவர்களிடம் அந்த பெண் கூறினார்.

    உடனே இது பற்றி போலீசுக்கு ஓட்டல் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்குச் சென்று விசாரணை நடத்தி வினோத்தை கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையில் இந்த தகவல் கேரளாவில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் வினோத் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    வினோத் கவுன்சிலராக பணியாற்றிய போதும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனின் ஆதரவாளர் என்பதால் அவருக்கு கட்சியில் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
    ×