என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்பழிப்பு முயற்சி"

    • பூஜை செய்து பரிகாரம் நடத்தினால் கணவருடன் சேர்ந்து வாழலாம் எனக் கூறி அதற்காக ரூ.20,000 பணம் வேண்டும் என ஜோதிடர் கூறினார்.
    • பூஜை என்ற பெயரில் பலாத்காரம் செய்ய முயன்ற ஜோதிடர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகார் அளித்துள்ளார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மஞ்சுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் காமாட்சி (வயது 22). இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    எனது பெற்றோர் இறந்து விட்ட நிலையில் கணவரையும் பிரிந்து வாழ்ந்து வருகிறேன். கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும்என பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தேன். இந்நிலையில் எனது பிரச்சினைகளை தேனியைச் சேர்ந்த கண்மணி என்பவரிடம் கூறினேன். அவர் போடி அருகே பொட்டிப்புரத்தில் உள்ள செல்வராஜ் என்ற ஜோதிடரிடம் என்னை அழைத்துச் சென்றார். பின்னர் எனக்கு பூஜை செய்து பரிகாரம் நடத்தினால் கணவருடன் சேர்ந்து வாழலாம் எனக் கூறி அதற்காக ரூ.20,000 பணம் வேண்டும் என்றார்.

    இதற்கு நானும் சம்மதித்து ரூ.20,000 பணம் கொடுத்தேன். அதன் பிறகு பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி என்னை சுவாமி படங்கள் நிறைந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று திருநீறு பூசி மந்திரங்களை சொல்லியபடி என் ஆடைகளை அகற்றச் செய்தார்.

    பின்னர் அவரது செல்போனில் என்னை படம் பிடித்தார். அதன் பிறகு என்னை பலாத்காரம் செய்ய முயன்றபோதுதான் தவறான எண்ணத்தில் ஜோதிடர் என்னை நெருங்கியுள்ளார் என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டேன். இது குறித்து போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பூஜை என்ற பெயரில் என்னை பலாத்காரம் செய்ய முயன்ற ஜோதிடர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கொடுத்த ரூ.20,000 ஆயிரம் பணத்தையும் பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த பஸ் நிலையத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதர் நிறைந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
    • வாலிபர்கள் 2 பேர் இளம்பெண்ணிடம் தவறாக நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுக்க முயன்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மாநகர பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலை நகர், வண்டலூர் உயிரியல் பூங்கா, பெருங்களத்தூர், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், படப்பை, மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகரப் பஸ்கள் அதிகாலையில் இருந்து இரவு 11 மணி வரை சென்று வருகின்றன. இதனால் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்த பஸ்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் அதிகாலை, சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், பஸ் ஏறுவதற்காக இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர்.

    திடீரென அவர்கள் பட்டா கத்தியை காட்டி இளம்பெண்ணை மிரட்டினர். பின்னர் அவரை அருகில் உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்கு கடத்தி சென்று கற்பழிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கூச்சலிட்டார்.

    பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த பஸ் நிலையத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதர் நிறைந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு வாலிபர்கள் 2 பேர் இளம்பெண்ணிடம் தவறாக நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் பொதுமக்களிடம் பட்டாகத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

    இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோந்துப் பணியில் இருந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தப்பி ஓட முயன்ற 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். இளம்பெண்ணையும் மீட்டனர். விசாரணையில் கைதான வாலிபர்கள் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் வீரமணி (27), மணிகண்டன் (26) என்பதும் அவர்கள் மீது தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.

    இதில் மணிகண்டன் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமியை வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.
    • ரவிக்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், ஹனம் கொண்டா மாவட்டம், வாடே பள்ளியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ஐதராபாத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

    சிறுமி தன்னுடன் படிக்கும் நண்பருடன் குடியிருப்பு பகுதியில் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சிறுமியின் நண்பரை அங்கிருந்து விரட்டி அனுப்பினார். பின்னர் சிறுமியிடம் இது போல் தவறாக நடக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். சிறுமியின் செல்போன் என்னை வாங்கினார்.

    இதையடுத்து சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி இன்ஸ்பெக்டரிடம் இருந்து போராடி அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் காசிபேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டுக்குள் இருந்த கழிவறைக்கு சென்று உள்பக்கமாக இளம்பெண் பூட்டிக் கொண்டார்.
    • போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் சென்று கழிவறையில் பதுங்கி இருந்த இளம்பெண்ணை மீட்டனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம் முருகன் நகர் நேரு வீதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 45). கோவையில் உள்ள சில கல்லூரிகளில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    ஆராய்ச்சி பட்டம் பெறும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்கள் இவரிடம் ஆலோசனை பெறுவது வழக்கம். அதேபோல் திருப்பூர் மாவட்டம் கணியம்பூண்டி வச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 25 வயது பெண், பேராசிரியர் சிவப்பிரகாசத்தை தொடர்பு கொண்டார்.

    அந்த பெண் எம்.எஸ்.சி. பட்டதாரி ஆவார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு வெளிநாட்டில் போய் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக அவர் சிவப்பிரகாசத்திடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு தனது வீட்டுக்கு வந்து தன்னை சந்திக்குமாறு கூறி இருக்கிறார். இளம்பெண்ணிடம் சிவப்பிரகாசம் சில சான்றிதழ்களை வாங்கி வைத்து இருக்கிறார். வீட்டுக்கு வரும்போது அந்த சான்றிதழ்களை தருவதாகவும் சொல்லி உள்ளார்.

    சிவப்பிரகாசம் கூறியதை நம்பி கல்வீரம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அந்த பெண் மதிய நேரம் சென்றார். அங்கு வீட்டில் சிவப்பிரகாசம் மட்டும் இருந்தார். பெண்ணை ஹாலில் அமர வைத்து பேசிக் கொண்டு இருந்தார். திடீரென பெண்ணின் தோளில் சிவப்பிரகாசம் கையை போட்டார். இதனால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த பெண் சுதாரிப்பதற்குள் சிவப்பிரகாசம் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இளம்பெண்ணை அவர் கற்பழிக்கவும் முயன்று இருக்கிறார். சிவப்பிரகாசத்திடம் இருந்து தப்பிக்க வழிதேடிய பெண், சமயோகிதமாக திட்டமிட்டார். தான் அவசரமாக கழிவறைக்கு செல்ல வேண்டும் என சிவப்பிரகாசத்திடம் இளம்பெண் கூறி உள்ளார்.

    வீட்டுக்குள் இருந்த கழிவறைக்கு சென்று உள்பக்கமாக இளம்பெண் பூட்டிக் கொண்டார். பின்னர் அங்கிருந்தே தனது தோழியை செல்போனில் அழைத்து விவரத்தை கூறி இருக்கிறார். போலீசுக்கு தகவல் தெரிவித்து தன்னை காப்பாற்றுமாறு சொல்லி கெஞ்சி உள்ளார்.

    அடுத்த கணமே பெண்ணின் தோழி போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீசார் பேராசிரியரின் வீட்டுக்கு விரைந்து சென்று கதவை தட்டினர். கதவை திறந்து பார்த்த பேராசிரியர் அதிர்ச்சி அடைந்தார். போலீசை பார்த்ததும் அவருக்கு வியர்த்து கொட்டியது.

    போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் சென்று கழிவறையில் பதுங்கி இருந்த இளம்பெண்ணை மீட்டனர். போலீசாரை கண்டதும் இளம்பெண் கண்ணீர் விட்டு கதறி அழுது நடந்த விவரங்களை கூறினார்.

    இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக கோவை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், விசாரணை நடத்தி பெண்ணை கற்பழிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

    ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் பெண்ணை தனியாக அழைத்து பேராசிரியர் கற்பழிக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×