search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kabaddi players"

    • கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர்.
    • அப்போது அங்கு சென்ற நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தர்ராஜன் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    நெல்லை:

    கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர். அப்போது அங்கு சென்ற நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தர்ராஜன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா ஆகியோர் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

    இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய பொருளாளர் துரைசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுரேஷ்குமார், முடவன் குளம் சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பெருமாள் சாமி, ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், இருக்கன்துறை ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பாம்பே செல்வகுமார், இன்பம், வினேஸ்ராஜா மற்றும் கபடி பயிற்சியாளர்கள், கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு ஜூனியர் இளைஞர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்டத் தலைவர் வேலவன் தொடங்கி வைத்தார் மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 150 விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் தேர்வு பெறுபவர்கள் மேற்கண்ட போட்டியில் கலந்து கொள்ளலாம் இதில் மாவட்ட கபடி பயிற்சியாளர் புஷ்பராஜ், தேசிய வீரர் நாணமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் மாயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நடராஜன் செய்திருந்தார்.

    ×