என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kabaddi players"

    • இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.
    • கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.

    எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி 2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு!

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

    கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.

    கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.

    நேற்று நான் பைசன் காளமாடனில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர்.
    • அப்போது அங்கு சென்ற நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தர்ராஜன் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    நெல்லை:

    கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர். அப்போது அங்கு சென்ற நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தர்ராஜன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா ஆகியோர் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

    இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய பொருளாளர் துரைசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுரேஷ்குமார், முடவன் குளம் சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பெருமாள் சாமி, ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், இருக்கன்துறை ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பாம்பே செல்வகுமார், இன்பம், வினேஸ்ராஜா மற்றும் கபடி பயிற்சியாளர்கள், கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • தாக்குதலுக்கு உள்ளான வீராங்கனைகள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது!

    பஞ்சாப் மாநிலத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தாக்குதலுக்கு உள்ளான வீராங்கனைகள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டு நாளை ரெயில் மூலம் தமிழ்நாடு திரும்புவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதவில் கூறியிருப்பதாவது:-

    உடலில் காயங்களுடன்-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா?

    டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா?

    இருந்தும் ஏற்பாடு செய்ய மனமில்லையா?

    கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது!

    விசாரணை என்ற பெயரில் பயிற்சியாளர் அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார்.

    வீராங்கனைகளையும் துன்புறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

    எனவே உடனடியாக அனைத்து வீராங்கனைகளையும் மீட்டு வந்து இங்கு உயரிய மருத்துவர்களை கொண்டு உரிய மருத்துவம் அளிக்க வேண்டும்.

    விமான பயணத்திற்கான கட்டணத்தை கூட நாங்கள் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம்!

    மீட்பதற்கு அரசு தயாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
    • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தமிழகத்தின் 36 வீராங்கனைகள் உட்பட 42 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய கபடி போட்டியில் பங்கேற்க பஞ்சாப் சென்றுள்ளனர்.

    போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், தமிழக பயிற்சியாளர் பாண்டியன் மீது பீகார் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலா விஜயகாந்த் வெளியிட்டுள்ள பதவில் கூறியிருப்பதாவது:-

    பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில், நமது தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற நிலையில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

    விளையாட்டு என்பது அனைவரும் சமமாக இணைந்து திறமையை நிரூபிக்கக்கூடிய மேடை. ஆனால் சக வீராங்கனைகளை, அதிலும் தமிழக மாணவிகளைத் தாக்கியது மிகவும் கண்டிக்கத் தக்க செயல்.விளையாட்டு என்பது வீரத்துடன் சவால்களை எதிர்கொள்வதற்காகவே இருக்க வேண்டும்; ஆனால், கோழைத்தனமாகச் சக வீராங்கனைகளை தாக்குவது என்பது ஒரு தவறான தரம் கெட்ட செயல்.

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த மாணவிகள் பத்திரமாகத் தமிழகம் திரும்பத் தமிழக அரசு அனைத்து தேவையான உதவிகளையும் செய்து, அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு ஜூனியர் இளைஞர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்டத் தலைவர் வேலவன் தொடங்கி வைத்தார் மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 150 விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் தேர்வு பெறுபவர்கள் மேற்கண்ட போட்டியில் கலந்து கொள்ளலாம் இதில் மாவட்ட கபடி பயிற்சியாளர் புஷ்பராஜ், தேசிய வீரர் நாணமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் மாயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நடராஜன் செய்திருந்தார்.

    ×