search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "effigy burning"

    • பண்ருட்டி அருகே பா.ஜ.க. தலைவர் உருவபொம்மையை தி.மு.க.வினர் எரித்தனர்.
    • அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதையும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சரை ஒருமையில் பேசியதை கண்டித்தும் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையில் அண்ணாகிராம ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சாம்பசிவம் தலைமையில் தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். உருவ பொம்மை எரிப்பதற்கு அவர்கள் ஊர்வலமாக சென்னை சாலையில் வந்தனர்.

    இதையடுத்து அண்ணாமலை உருவ பொம்மையை தி.மு.க.வினர் தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள் மற்றும் தி.மு.க.வினர் உருவ பொம்மையை காலணியால் தாக்கி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ஜோலார்பேட்டையில் கமல்ஹாசன் உருவ பொம்மையை எரித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கூட்ரோட்டில் இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    நாய் கழுத்தில் கமல் உருவ படத்தை தொங்கவிட்டிருந்தனர். மேலும் கமல் உருவ பொம்மையை எரித்தனர். கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியை தடைசெய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போராட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர்.


    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழக முதலமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமைதி வழியில் போராடி வரும் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக்கொன்ற தமிழக காவல்துறையை கண்டித்தும், இந்த படுகொலைக்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுவை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் பெருமாள், இளைஞரணி தலைவர் சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் ஜெகன், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் முருகன், மணவெளி தொகுதி தலைவர் கிருஷ்ணன், புதுவை மாணவர் கூட் டமைப்பு சாமிநாதன்,

    அம்பேத்கார் தொண்டர் படை பாவாடைராயன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப் பிரியன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

    அப்போது இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்டம் உருவானது. போலீசார் போராட்டக்காரர்களிடம் இருந்து உருவ பொம்மையை பறித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய 50 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
    ×