search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே பா.ஜ.க. தலைவர் உருவபொம்மையை எரித்த  தி.மு.க.வினர்
    X

    பண்ருட்டி அருகே பா.ஜ.க. தலைவர் உருவபொம்மையை எரித்த தி.மு.க.வினர்

    • பண்ருட்டி அருகே பா.ஜ.க. தலைவர் உருவபொம்மையை தி.மு.க.வினர் எரித்தனர்.
    • அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதையும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சரை ஒருமையில் பேசியதை கண்டித்தும் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையில் அண்ணாகிராம ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சாம்பசிவம் தலைமையில் தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். உருவ பொம்மை எரிப்பதற்கு அவர்கள் ஊர்வலமாக சென்னை சாலையில் வந்தனர்.

    இதையடுத்து அண்ணாமலை உருவ பொம்மையை தி.மு.க.வினர் தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள் மற்றும் தி.மு.க.வினர் உருவ பொம்மையை காலணியால் தாக்கி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×