search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commerce"

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    • பிற சார்புத்துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே 2023-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்க லைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • முனைவர் இளங்கோவன் கலந்து கொண்டு தொழில்முனை–வோராக வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
    • அனைத்துத் துறை பேராசிரியர்களும், 150-ற்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் வணிகவியல் மன்றம் விழா 2022-23 நடைபெற்றது.

    அண்ணாமலை பல்கலைக்–கழகத்தின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தெழில்முனை–வோராக வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சொ.சசிகுமார் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.திருநாராயணசாமி மற்றும் துறை பேராசிரி–யர்கள் முனைவர் வே.மகேஸ்வரி முனைவர் வி.சுரேஷ் முனைவர் எம்.ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்துத் துறை பேராசிரியர்களும், 150-ற்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வ ணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
    • 230 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறை சார்பில் ''விலை நிர்ணயம் என்பதே தொழில் முனைவோர் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

    முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக போடிநாயக்கனூர்

    சி.பி.ஏ. கல்லூரி, வணிகவியல் பேராசிரியர் சுஜாதா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், விலை நிர்ணயத்தின் யுக்திகள், விலை நிர்ணயத்திற்கான திட்டமிடல், விலை நிர்ணயத்தின் வகைகள்,எவ்வாறு விலை நிர்ணயம் செய்வது? எவ்வாறு இலாபம் மற்றும் நட்டம் இல்லாத விலையைக் கணக்கிடுவது? எந்த விலை நிர்ணயம் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உகந்தது? என்பது பற்றி எடுத்துரைத்தார்.

    மேலும் அவர் அனைத்து மாணவர்களையும் சுயதொழில் தொடங்க ஊக்கப்படுத்தினார். ஜமுனா தேவி வரவேற்றார். ஜெயராசாத்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி, முனைவர் பாபு பிராங்கிளின், ராஜீவ்காந்தி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 230 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்திருக்கிறார்.
    • வணிகவியல், கணக்குபதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஊராட்சி, குமரன்கோயில் வடக்கு வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி மங்கையர்கன்னி. இவர்களது இளைய மகள் கிருத்திகா. இவர் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார்.

    அரசு பொதுத் தேர்வில் 591 மதிப்பெண் பெற்று மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்திருக்கிறார். வணிகவியல், கணக்குபதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனைப்படைத்த மாணவி கிருத்திகாவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

    ×