search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Vindhya"

    • அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்
    • மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

    கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "ஒரு திரைப்படத்தில் வடிவேல், 'நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்' என கத்துவது போல, நான் தான் தலைவர் என கூறிக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி சுற்றி கொண்டு உள்ளது.

    திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம், அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பது தான் வரலாறு, ஆட்டுக்குட்டி எங்கு வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம், ஆனால் இந்த தேர்தலுக்கு பின் கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி.

    அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். இதை நான் சொல்லவில்லை பாஜகவின் மத்திய நிதியமைச்சர் ஆன நிர்மலா சீதாராமன் கணவரே சொல்லியிருக்கிறார்.

    மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி கூறினால் எடப்பாடியும் ரோட் ஷோ நடத்துங்கள் என்று கூறுகிறார்கள். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்றால் குரங்கு தான் வித்தை காட்ட முடியும். எங்கள் தலைவர் சிங்கம் மாதிரி இருப்பதால் தலைவர் இருக்கும் இடத்திற்கே கூட்டம் தேடி வரும். ஆனால் பாஜகவினர் கூட்டம் இருக்கும் இடத்தை பார்த்து தேடிப்போய் கூட்டம் நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை

     திருப்பூர் :

    சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் வரவேற்றார்.

    கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் நடிகை விந்தியா பேசியதாவது:-

    தி.மு.க. விடியல் அரசு இல்லை. வீடியோ அரசு. விளம்பரத்தை மட்டும் தான் செய்கிறார்கள். மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமூக நீதியும், பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாக சேர்ந்து வளர்வதே திராவிட மாடல். பெரியாரும், அண்ணாவும் அதைத்தான் நினைத்தார்கள். அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜனதா வந்துவிடும் என்று தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இன்று தி.மு.க.வினர் வந்து அனைத்தையும் சுருட்டி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    விரைவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர வைப்போம் என்று சபதமேற்போம். திருப்பூருக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்து 4-வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். 99 சதவீதம் முடிந்து விட்டது. மீதம் 1 சதவீத பணியை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது. தொழில் நகருக்கு தேவையான குடிநீரை தராமல், காலதாமதம் செய்கிறது. விரைவில் 4-வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்காவிட்டால் தாய்மார்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிவசாமி, எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேசன், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் அன்பகம் திருப்பதி, மகேஷ்ராம், கருணாகரன், அரிகரசுதன், திலக்நகர் சுப்பு,

    அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, வக்கீல் அணி செயலாளர் முருகேசன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது
    • இதில் கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசினார்.

    திருச்சி,

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி பேரூர் கண்ணதாசன், முத்துக்கருப்பன், ஜெயக்குமார், நடராஜன், ரவிசங்கர், நடேசன், மருதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. அரசு மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு சுமைகளை மக்கள் மீது திணித்துள்ளார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மாறாக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்டி காத்து வந்தனர். தற்பொழுது அந்த இடத்தில் எடப்பாடியார் இருந்து நம்மை காத்து வருகிறார்.

    தி.மு.க. நமக்கு எப்படி எதிரியோ, அதுபோல அ.தி.மு.க. அலுவலகத்தை தாக்கியவர்களையும் அப்படித்தான் நினைக்க வேண்டும். பொதுமக்களை தி.மு.க. காக்க மறந்து விட்டது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் தமிழகத்தின் முதல்வராக கொண்டுவர பாடுபட வேண்டும்.

    இந்துக்களை பற்றி இழிவாக ஆ.ராசா பேசியது புதிதல்ல. இந்துக்களை தரக்குறைவாக பேசுவதை தி.மு.க. வாடிக்கையாக வைத்து உள்ளது. எனவே இவர்களுக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்று பேசினார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜ், திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், விஷன் பழனிச்சாமி மற்றும் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

    • தி.மு.க.வை நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர் என்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நடிகை விந்தியா ேபசினார்.
    • திருப்பரங்குன்றத்தில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. விடியல் ஆட்சி தருவோம் எனக் கூறி மக்களிடம் பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. அ.தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்களை நிதியை காரணம் காட்டி நிறுத்தி வைத்தது. தாலிக்கு தங்கம், மடிக்கணினி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிதி இல்லை என காரணம் காட்டி தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

    ஆனால் அதே சமயத்தில் ரூ. 100 கோடியில் நூலகம், ரூ. 80 கோடியில் பேனா என அரசு நிதியை தங்களது சொந்த சுயலாபத்திற்காக வீணடித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, தற்போது மின் கட்டண உயர்வு என தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது. தி.மு.க.வை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் பாரி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், வட்டச் செயலாளர்கள் பொன்.முருகன், பாலமுருகன், எம்.ஆர். குமார் உள்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

    உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டி.டி.வி.தினகரன் என்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விந்தியா கூறினார்.
    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் நடிகை விந்தியா நேற்று மாலையில் தாளமுத்துநகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது;-

    ஒட்டப்பிடாரம் வீர பாண்டிய கட்டபொம்மன் முதல் பாரதி வரை வீரர்களை தந்த பூமி. அங்கு ஏழைகளுக்காக நடந்து வரும் அ.தி.மு.க. வேட்பாளர் தான் வெற்றி பெற வேண்டும். ஊழல்வாதிகள் அல்ல. தி.மு.க. நம் நாட்டை இத்தாலிகாரர்களிடம் ஒப்படைக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு தோல்வியை தர வேண்டும். ஊழல்களின் மொத்த உருவம் தி.மு.க. தான்.

    உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டி.டி.வி.தினகரன். இந்த தேர்தல் ஒரு தேர்தல் அல்ல. யுத்தம். இதில் மக்களின் ஆட்சி, ஏழைகளின் ஆட்சி வெற்றி பெற வேண்டும். மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    நிலக்கரி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் என பஞ்ச பூதங்களில் ஊழல் செய்த ஆட்சி தி.மு.க தான் என்று தேர்தல் பிரசாரத்தில் நடிகை விந்தியா பேசினார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார்.

    ஏழைகளின் வாழ்வில் இருளைப் போக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார். பரதன் ஆண்டாலும் அது ராம ராஜ்யமாகத்தான் இருந்தது. அபோல தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை ஆட்சி செய்தாலும் அது ஜெயலலிதா ஆட்சியாகத்தான் உள்ளது. நமது கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற நடப்பது இந்த தேர்தல்.

    சேது சமுத்திர திட்டம், நிலக்கரி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் என பஞ்ச பூதங்களில் ஊழல் செய்த ஆட்சி தி.மு.க. ஆட்சி. தேர்தல் வந்தால் மட்டும் இந்துக்கள் மீது தி.மு.க.வினருக்கு திடீர் பாசம் வந்துவிடும்.

    கிராமந்தோறும் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது, சாலையோர கடைகளில் டீ குடிப்பது, சைக்கிள் ஓட்டுவது என பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் மக்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.

    தற்போது நடைபெற்ற தேர்தலில் தோற்று விடுவோம் என்று தி.மு.க.வுக்கு பயம் வந்து விட்டது. அதனால்தான் வாக்கு எந்திரத்தில் கோளாறு என மக்களை குழப்புகிறார்கள். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அவருக்கு ஏமாற்றமே தேர்தல் பரிசாக மிஞ்சும்.

    எந்த கேள்வி கேட்டாலும் தினகரன் சிரித்துக் கொண்டே பதில் கூறுகிறார். ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தேர்தல் கமி‌ஷனுக்கே பணம் கொடுப்பவர் தினகரன். ஆர்.கே.நகர் மக்கள் இப்போதும் 20 ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களது அன்பை வாக்குகளாக மாற்றி வேட்பாளர் முனியாண்டியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.
    ×